Pages

Pages

Friday, April 25, 2025

வீரம் செறிந்த சிறார்கள்

 

இஸ்லாம் பாராட்டும் உயர்ந்த குணங்களில் ஒன்று வீரமும் துணிவும். யாருக்கும் அஞ்சாமல் எதையும் துணிவோடு எதிர் கொள்கின்ற குணம் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டும். அது ஒரு முஃமினின் பண்பு என்று இஸ்லாம் கூறுகின்றது.

الْمُؤْمِنُ القَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إلى اللهِ مِنَ المُؤْمِنِ الضَّعِيفِ،

பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌  لَا تَعْلَمُوْنَهُمُ‌  اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 8:60)

சாதாரணமாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமான குணம் வீரம். மற்றவர்களுக்கு முன்னால் தான், வீரத்தோடும் துணிவோடும் இருக்க வேண்டும், வலிமை மிக்கவனாக பலம் மிக்கவனாக இருக்க வேண்டும் என்பதையே அனைவரும் எதிர் பார்க்கின்றனர்.

காரணம் பல்வேறு சவால்களும் போராட்டங்களும் நிறைந்த இந்த பூமியில் வலிமையும் துணிவும் இல்லையென்றால் ஒருவனால் கண்ணியமான வாழ்க்கை வாழ முடியாது.அவன் விரும்புகின்ற வாழ்க்கை வாழ இயலாது. சுதந்திரமான வாழ்க்கை வாழ முடியாது. எனவே தற்கால சூழ்நிலையில் நமக்கு வலிமையும் துணிவும் மிகவும் அவசியம்.

ஆனால் அந்த வலிமையும், துணிவும், வீரமும் நன்மையான காரியங்களுக்கு ப.யன்பட வேண்டும். பலவீனமானவரை அடிப்பதற்கும் மக்களை வஞ்சிப்பதற்கும் அநீதங்கள் செய்வதற்கும் அத்துமீறி நடப்பதற்கும் பிறர் உரிமைகளை பறிப்பதற்கும் இரக்கமில்லாமல் அரக்கத்தனத்தோடு மக்களை கொல்வதற்கும் காரணமாக அமைந்து விடக்கூடாது. இஸ்லாம் இந்த வீரத்தை வரவேற்க வில்லை.

மாறாக, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் அநியாயங்களை தடுப்பதற்கும் அசத்தியத்தை எதிர்த்து களமாடுவதற்கும் நீதிக்காக போராடுவதற்கும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய எதிரிகளை அழிப்பதற்கும் காரணமாக இருக்க வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமெனில் வீரம் ஆக்கத்திற்கு காரணமாக இருக்க வேண்டும். அழிவுக்கு காரணமாக இருந்து விடக்கூடாது.இத்தகைய வீரத்தையே இஸ்லாம் வரவேற்கிறது.

இத்தகைய வீரமும் துணிவும் நபி அவர்களின் காலத்தில் சிறுவர்களிடம் கூட இருந்தது. பெரியவர்களே வியக்கின்ற அளவு அன்றைய சிறுவர்கள் வீரம் மிக்கவர்களாக துணிவு கொண்டவர்களாக இருந்தார்கள்.

 

அபூஜஹ்லை வீழ்த்திய இரு முஆதுகள்

 

عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ

بَيْنَا أَنَا وَاقِفٌ فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ، فَنَظَرْتُ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، فَإِذَا أَنَا بِغُلاَمَيْنِ مِنَ الأَنْصَارِ – حَدِيثَةٍ أَسْنَانُهُمَا، تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا – فَغَمَزَنِي أَحَدُهُمَا فَقَالَ: يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ؟ قُلْتُ: نَعَمْ، مَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي؟ قَالَ: أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا، فَتَعَجَّبْتُ لِذَلِكَ، فَغَمَزَنِي الآخَرُ، فَقَالَ لِي مِثْلَهَا،

فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَجُولُ فِي النَّاسِ، قُلْتُ: أَلاَ إِنَّ هَذَا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي، فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا، فَضَرَبَاهُ حَتَّى قَتَلاَهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَاهُ فَقَالَ: «أَيُّكُمَا قَتَلَهُ؟»، قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: أَنَا قَتَلْتُهُ، فَقَالَ: «هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا؟»، قَالاَ: لاَ، فَنَظَرَ فِي السَّيْفَيْنِ، فَقَالَ: «كِلاَكُمَا قَتَلَهُ، سَلَبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الجَمُوحِ»، وَكَانَا مُعَاذَ ابْنَ عَفْرَاءَ، وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الجَمُوحِ

 

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, ‘அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா’ என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, ‘என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?’ என்று கேட்டார்.

நான், ‘ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!’ என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், ‘அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)’ என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, ‘இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!’ என்று கூறினேன்.

உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் யார் அவனைக் கொன்றது?’ என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், ‘நானே (அவனைக் கொன்றேன்)’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். இருவரும், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, ‘நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) ‘அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹுக்கு உரியவை’  என்று கூறினார்கள். அந்த சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும், முஆத் பின் அம்ர் பின் ஜமூஹ்(ரலி) அவர்களும் ஆவர். (புகாரி: 3141)

 

உஹதில் கலந்து கொண்ட சிறுவர்கள்

وفي غزوة أحد لما خرج رسول الله (صلى الله عليه وسلم) إلى أحد وعرض أصحابه فرد من استصغر رد سمرة بن جندب وأجاز رافع بن خديج لما قيل أنه رام ( أي يجيد الرمي ) وقي رواية أنه وقف على رؤوس أصابع رجليه يتطاول، فقال سمرة بن جندب لربيبه مري بن سنان: يا أبت أجاز رسول الله (صلى الله عليه وسلم) رافع بن خديج وردني وأنا أصرع رافع بن خديج فقال مري بن سنان: يا رسول الله رددت ابني وأجزت رافع بن خديج وابني يصرعه فقال النبي (صلى الله عليه وسلم) لرافع وسمرة: تصارعا فصرع سمرة رافعا فأجازه رسول الله صلى الله عليه وسلم فشهدها مع المسلمين

நபி   அவர்கள் உஹுத் போர்க்களத்திற்கு படை வீரர்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் மிகவும் வயது குறைந்த ஸஹாபாக்களை போருக்கு வர வேண்டாம் என்று திருப்பி அனுப்பினார்கள். அப்போது ராஃபி இப்னு கதீஜ், ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) ஆகிய இருவரும் போருக்கு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். இருவரும் சிறுவர்கள். என்றாலும்  ராஃபி இப்னு கதீஜ் (ரலி) அம்பெறிவதில் மிகத் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதனால் அவரைப் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். சில வரலாற்று நூட்களில் படை வீரர்களை நபியவர்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது தன்னை போருக்கு அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ராஃபி இப்னு கதீஜ் ரலி அவர்கள் தன்னை உயரமாக காட்டிக் கொள்ள குதிங்கால்களை உயர்த்தி கால் விரல்களை ஊன்றி நின்றார் என்று வந்திருக்கிறது.அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து நபியவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள்.

அப்போது ஸமுரா (ரலி) அவர்கள், ‘‘ராஃபியை விட நான் பலமிக்கவன். நான் அவரைச் சண்டையிட்டு வீழ்த்துமளவுக்கு ஆற்றலுள்ளவன்'' என்றார். நபியவர்கள் அவ்விருவரையும் தனக்கெதிரில் மல்யுத்தம் செய்யப் பணித்தார்கள். அவ்விருவரும் சண்டையிட்ட போது ஸமுரா, ராஃபியை வீழ்த்தினார். இதனால் நபியவர்கள் சமுராவும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். (தாரீஹுத் தப்ரீ)

 

ஷஹாதத்தை விரும்பிய சிறுவர்கள்

في غزوة بدر يقول سعد بن أبي وقاص : رأيت أخي عمير قبل أن يعرضنا رسول الله يوم بدر يتوارى ـ أي: يختبئ في الجيش ـ، فقلت: ما لك يا أخي؟! قال: إني أخاف أن يراني رسول الله فيردني، وأنا أحب الخروج لعل الله يرزقني الشهادة. يريد الشهادة! ماذا يفعل بعض الأبناء اليوم في هذه السن؟ .

قال سعد : فعرض عمير على رسول الله فرده لصغره، فلما رده بكى فأجازه ، فكان سعد يقول: فكنت أعقد حمائل سيفه من صغره . مستدرك الحاكم 3/150

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;

பத்ருக்காகப் புறப்படுவதற்காக நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பரிசோதிப்பதற்கு முன்பு, என் சகோதரர் உமைர் பின் அபி வக்காஸ் வெவ்வேறு இடங்களில் ஒளிந்து கொள்ள முயற்சிப்பதைக் கண்டேன். நான் அவரிடம், 'ஓ என் சகோதரரே! உங்களுக்கு என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர், 'நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, என்னை ஒரு சிறுவனாகக் கருதி, என்னைத் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். சர்வவல்லமையுள்ள இறைவன் எனக்கு ஷஹாதத்தை வழங்குவதற்காக, நான் போரில் பங்கேற்க விரும்புகிறேன்' என்று பதிலளித்தார். இவ்வாறு, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது , ​​அவரை ஒரு சிறுவனாகக் கருதி, அவரை திரும்பி செல்லும்படி கட்டளையிட்டார்கள், அதன் பிறகு அவர் அழத் தொடங்கினார். அவரது அழுகையைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அவரை பங்கேற்க அனுமதித்தார்கள்." (முஸ்தத்ரக் ஹாகிம்)

 

இப்படி சத்தியத்திற்காக போராடுகின்ற துணிவையும் ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுகின்ற வீரத்தையும் குர்ஆன் மட்டுமே தர முடியும்.

 

குர்ஆன் தருகின்ற வீரமும் வலிமையும்

 

"قام الإنجليز والفرنسيون قبل استيلائهم على الخلافة العثمانية بإجراء دراسة وبحث عن أسباب قوة الفرد المسلم وسر امتلاكه لتلك الصلابة الجبارة التي مكنته من غزو العالم من المحيط الأطلسي إلى الهند حتى وصل مشارف فيينا.

فوجدوا أن السر يكمن في نظام تعليم الطفل المسلم آنذاك، حين كان يذهب من سن الثالثة حتى السادسة إلى ما كان يعرف بـ «الكُتّاب» ليحفظ القرآن ويختمه، ولك أن تتخيل حجم القدرة الإبداعية لدى من يحفظ القرآن الزاخر بأكثر من 70 ألف كلمة عربية.

تمثل أهم وأفصح وأجمل التركيبات اللغوية والصيغ البلاغية، تثبت وتحفر في الذاكرة، فيتقنها رغم استخدامه للهجة العامية في البيت، ما يقيه الوقوع في مشكلة الازدواج اللغوي.

 ثم يستكمل إتقانه لها وهو في السادسة إلى السابعة من عمره بتعلمه قواعد نحوها وصرفها بحفظ ألفية ابن مالك التي تضم ألف بيت شعر تشمل كل قواعد اللغة العربية الفصحى.

ناهيك عن الزخم الإيماني والخلقي الذي يكتسبه من قراءته للقرآن يلازمه طيلة حياته، فيظل يؤمن بأنه ليس وحيدا في نضاله، بل هناك عين الله تحرسه دوما وتؤازره أينما حل.

لذا كان الفرد المسلم أكثر قوة وصلابة وإقداما من نظيره الغربي، والفضل في ذلك كله يرجع إلى نوع التعليم الأولي المتمثل في (الكُتّاب)".

كتاب "الاسلام الثوري" للكاتب "كارلوس"

 

ஆங்கிலேய அரசும் ஃப்ரென்ஞ் அரசும் உஸ்மானிய கிலாஃபத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னர் ஓர் ஆராய்ச்சி நடத்தினர்.

 

முஸ்லிம்களில் ஒவ்வொரு நபரும் இத்துணை வலிமையோடு இருப்பதற்கு என்ன காரணம்? அட்லாண்டிக் மகாசமுத்திரம் தொடங்கி இந்தியா வரை மட்டுமல்ல ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவின் எல்லைகள் வரை சென்றடையும் அளவுக்கு உலகத்தையே யுத்தம் நடத்திப் பிடிக்கும் ஆற்றலையும் உறுதியையும் முஸ்லிம்கள் பெற்றது எப்படி என்ற ரகசியத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்க முனைந்தனர்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்த முடிவுக்கே வந்தனர். அதாவது, முஸ்லிம் குழந்தைகள் மூன்று வயது முதல் ஆறு வயது வரை மக்தப் (குத்தாப்) எனப்படும் ஆரம்பக்கல்வி நிலையங்களுக்கு சென்று திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்கின்றனர். இந்தக் கல்வித் திட்டத்தில் தான் அந்த ரகசியம் இருப்பதாக கண்டுபிடித்தனர்.

எழுபதாயிரத்திற்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்ட சங்கைமிகு குர்ஆன் முழுவதையும் (சிறுவயதிலேயே) மனப்பாடம் செய்திருக்கும் ஒருவரின் படைப்பாற்றல் எவ்வளவு திண்மை மிக்கதாக இருக்கும் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

அவர்கள் தம் இல்லங்களில் அந்த நாடுகளில் புழக்கத்தில் உள்ள மொழிகளைப் பேசினாலும் குர்ஆனை மனப்பாடம் செய்திருப்பதால் அரபுமொழியின் அழகிய இலக்கணத்தையும் இலக்கியத் தரம்மிக்க மொழியாளுமையையும் பெற்றுத் திகழ்வர். (தாய்மொழி மற்றும் அரபு ஆகிய இருமொழிகளையும் சிறுவயதிலிருந்தே அவர்கள் கற்றுவிடுவதால்) இது அவர்களுக்கு ‘இருமொழிச் சிக்கல்கள்’ வராமல் தடுக்கிறது.

பின்னர் அவர்கள் தமது ஆறாவது வயது முதல் ஏழாவது வயதுவரை அரபுமொழி இலக்கணம்(நஹ்வு), மொழிஉருவ இயல்(சர்ஃப்) ஆகியவற்றை நேர்த்தியாக கற்கின்றனர். இதற்காக அவர்கள், அறிஞர் இப்னு மாலிக் அவர்களின் “அல்ஃபிய்யா” என்ற ஆயிரம் கண்ணிகள் கொண்ட- கவிதை மூலம் அரபு இலக்கணத்தின் எல்லாவிதிகளையும் அழகிய நடையில் விண்டுரைக்கின்ற நூலை மனப்பாடம் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை மனப்பாடம் செய்து தனது வாழ்நாள் முழுவதும் அதை இறுக்கமாக இதயத்தில் தாங்கிக் கொண்டிருப்பவர் எத்துணை ஒழுக்க சீலராகவும் ஈமான் என்ற இறைநம்பிக்கையில் மேம்பட்டவராகவும் திகழ்வார்!

அவர் போர்களத்தில் நிற்கும் போது “நான் தனியொருவனல்ல. அல்லாஹ்வின் கண்கள் என்னை கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. எங்கே சென்றாலும் அவன் எனக்கு உதவி செய்வான்” என்று திட்டவட்டமாக நம்புவார்.

இதனால் தான் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தன்னையொத்த மேற்கத்தியவனை விட வலிமை, உறுதி, முன்னேற்றம் ஆகியவற்றில்  சிறந்து விளங்கினார்.

மக்தப் (குத்தாப்) என்ற அடிப்படைக்கல்வி திட்டம் தான் முஸ்லிம்களின் உயர்வுக்கு காரணம் என்று ஆராய்ச்சியின் அவர்கள் கண்டுபிடித்தனர்.

(அறிஞர் கார்லோஸ் எழுதிய “அல் இஸ்லாமுஸ் ஸவ்ரீ” என்ற நூல்)

(நன்றி - இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் அவர்கள்)

ஸஹாபாக்கள் தங்கள் உள்ளங்களில் குர்ஆனை சுமந்திருந்தார்கள். எனவே அவர்கள் இளம் வயதிலேயே வலிமை மிக்கவர்களாக யாரையும் எதிர் கொள்ளும் துணிவு மிக்கவர்களாக இருந்தார்கள். 

ஒருவரின் உள்ளத்தில் இருக்கின்ற குர்ஆன் அவருக்கு உண்மையான ஈமானை தருகின்றது. அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற உணர்வைக் கொடுக்கின்றது.எனவே அவர் யாருக்கும் அஞ்ச மாட்டார். அதே நேரத்தில் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு இருப்பதால் அவரிடம் இருக்கும் வலிமையும் வீரமும் அநியாயங்களுக்கும் பிறரை வஞ்சிப்பதற்கும் காரணமாக அமையாது.


இன்றைய சிறார்கள்

இன்றைக்குள்ள சிறார்களிடத்திலும் துணிச்சலும் வீரமும் இருக்கின்றது. ஆனால் அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் இல்லை. ஈமானும் இல்லை. எனவே தன்னை விட பலவீனமானவனை அடிப்பதற்கும் இயலாதவனை பணிய வைப்பதற்கும் பெரியவர்களுக்கு முன்னால் கண்ணியக்குறைவாக நடப்பதற்கும் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பதற்கும் ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும் உடன் படிக்கக்கூடிய வகுப்பு தோழனை கத்தியால் குத்துவதற்கும் ஒரு குரூப்பாக சேர்ந்து கொண்டு இனத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் ஒருவனை அடித்து துன்புறுத்தி அத்துமீறலில் ஈடுபடுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. 

எனவே நம் குழந்தைகளுக்கு மழலைப் பருவத்திலேயே குர்ஆனை கொடுத்து விட வேண்டும்.குர்ஆன் நம் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவாக தந்து விடும்.

 

7 வயதில் தன் சமூகத்திற்கு தொழ வைத்தவர்

 

عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ: أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ؟ قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ 

كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ فَنَسْأَلُهُمْ: مَا لِلنَّاسِ، مَا لِلنَّاسِ؟ مَا هَذَا الرَّجُلُ؟ فَيَقُولُونَ: يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ، أَوْحَى إِلَيْهِ، أَوْ: أَوْحَى اللَّهُ بِكَذَا، فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الكَلاَمَ، وَكَأَنَّمَا يُقَرُّ فِي صَدْرِي، وَكَانَتِ العَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الفَتْحَ، فَيَقُولُونَ: اتْرُكُوهُ وَقَوْمَهُ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ، فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الفَتْحِ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ، فَلَمَّا قَدِمَ قَالَ: جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا، فَقَالَ: «صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الحَيِّ: أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ؟ فَاشْتَرَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ القَمِيصِ

 

அம்ர் இப்னு சலிமா (ரலி) அறிவிக்கிறார்கள் ;

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்… கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புகாரி: 4302)

 

أدِّبوا أولادَكم على ثلاثِ خِصالٍ حُبِّ نبيِّكم وحبِّ أَهلِ بيتِه وقراءةِ القرآنِ

குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களை கொடுத்து விட வேண்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

1.       நபி அவர்களின் மீதான பிரியம்

2.       நபி அவர்களின் குடும்பத்தின் மீதான பிரியம்

3.       குர்ஆன் ஓதுவது

குழந்தைகளுக்கான இந்த மூன்று விஷயங்களையும் தரும் இடங்கள் தான் ஆரம்ப அரபி மத்ரஸாக்கள். அதாவது மக்தப் மத்ரஸாக்கள். நபி அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை மார்க்க அறிஞர்கள்,இமாம்கள், ஆய்வாளர்கள்,குர்ஆன் விரிவுரையாளர்கள்,சட்ட வல்லுனர்கள், ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரின் கல்வி பயணத்தின் முதல் படிக்கட்டாக அமைந்தது மக்தப் மத்ரஸாக்கள் தான்.

இன்று தமிழகத்தில் பல்வேறு மத்ரஸாக்கள் குழந்தைகள் இல்லாமல் காலியாக இருக்கின்றன. அந்த நிலை மாற வேண்டும்.நம் குழந்தைகளை மறவாமல் மத்ரஸாவுக்கு அனுப்ப வேண்டும். தற்போது விடுமுறைக் காலம் தொடங்கி விட்டது. பள்ளிக்கூடங்களால் ஏற்படுகின்ற அழுத்தங்களும் சுமைகளும் இந்த ஒரு மாதத்தில் நம் குழந்தைகளுக்கு இருக்காது. குர்ஆன் ஓதுவதற்கும் மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கும் நிறைய நேரங்களும் அவகாசங்களும் கிடைக்கும். எனவே இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி நம் குழந்தைகளுக்கு மார்க்கத்தைக் கொடுக்க முயல வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக!

 

6 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் பயன்யுல்தாக இருந்தது

    ReplyDelete