Pages

Pages

Monday, March 7, 2022

சிகரெட் ஆபத்து

 நபர் : 1

1 என்ன அண்ணே கையில பீடியும் சிகரெட்டுமா அலைறீங்க உங்கள எவ்ளோ சொன்னாலும் திருத்தவே முடியாது என்னா 

2 என்னது பீடி சிகரெட் குடிக்கிறதனால நன்மையா SMOKING KILLS SMOKING IS INJURED TO HEALTH அப்டின்னு விளம்பரம் பன்றாங்க. அதுமட்டுமில்லாம அந்த சிகரெட் மேலயே அது ஆபத்துன்னு போட்ருக்காங்க. அதப்போய் நன்மைன்னு சொல்றீங்க! 

3 நன்ம நன்மன்னு சொல்றீங்களே தவிர விஷயத்தை சொல்ல மாட்டேங்கிறீங்களே

4 அய்யோ அய்யோ பில்டப் விட்டது போதுன்னே விஷயத்த சொல்லுங்க

5 அய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா.... நீங்க சொல்லவே வேண்டாம் என்ன ஆள விடுங்க நான் போறேன்.

6 சரி அவங்க ஆம்பளையா இல்லையான்னு அப்றம் பட்டி மன்றம் வச்சிக்கலாம். இப்ப விஷயத்த சொல்லுங்க.

7 என்னண்ணே சொல்றீங்க சிகரெட்ல இவ்ளோ விஷயம் 

இருக்கா... இது வரைக்கும் இப்டி கேள்விப்பட்டதே இல்லையே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இங்க இருக்கிற தாய்மார்கள்ளாம் வீட்ல உள்ள ஆம்பளைங்க சிகரெட் குடிக்கிறாங்களே! வேண்டான்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறாங்களே அப்டின்னு அத நிறுத்துறதுக்கு படாத பாடு பட்டுட்டு இருக்காங்க. ஆனா நீங்க அதுல என்னலாமோ நன்ம இருக்குன்னு சொல்றீங்க கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன். அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்.

8 சரி வீட்டுக்கு திருடன் வர மாட்டான்னு சொல்றீங்க அது எப்டி

9 அது சரி... சிகரெட் குடிச்சா பொம்பல புள்ள பொறக்காதுன்னு சொல்றீங்களே அது எப்டி

10 ஓ அதான் விஷயமா... சரி அதுலாம் இருக்கட்டும் சிகரெட் குடிச்சா முதுமையே வராதுன்னு பெரிய குண்ட தூக்கி போட்டீங்க அந்த கத எப்டி.

  11 சொன்னா தான தெரியும்.சொல்லுங்க

12 அண்ணே இந்த மாதரி ஊர்ல 10 கம்பெனி இல்ல ஒரு கம்பெனி இருந்தாவே ஊரு நாசமா போயிடும்.

13 ஒன்னும் இல்லப்பா கையில என்ன சிகரெட் வச்சிருக்கன்னு கேட்டேன் அதுக்கு கதை கதையா சொல்றாரு இந்த அண்ணேன்.

14 அதனால தான் நாங்க படிச்சி படிச்சி சொல்றோம். நல்லவங்களோட சேருங்க. கெட்டவங்களோட சேராதீங்கன்னு. எங்க கேக்கவா செய்றீங்க. 


நபர் : 2 


1 என்ன தம்பி இப்டி சொல்லிட்ட காரம் மனம் சுவை நிறைஞ்ச எங்க கம்பெனி சிகரெட்ட குடிக்கிறதனால எவ்ளோ நன்மை இருக்குது தெரியுமா

2 என்ன தம்பி இது கூட தெரியாம இருக்க... சிகரெட் குடிக்கிறதனால எவ்ளோ நன்மை இருக்குது தெரியுமா

3 அவசரப்படாத தம்பி சொல்றேன் கேளு. நான் சொல்ற விஷயத்த கேட்டா நீயே என் கிட்ட இருந்து சிகெரட்ட தாங்கன்னு கேப்ப அவ்ளோ நன்ம இருக்குது

4 இந்த சிகரெட்ல எவ்ளோ நன்ம தெரியுமா 

5 தம்பி தம்பி இருப்பா சும்மா தமாஸ் தான் பன்னேன். சொல்றேன் கேளு. சிகரெட் தானப்பா ஆம்பளைங்களோட கெத்தே சிகரெட் குடிக்காதவன்ளாம் ஆம்பளையா

6 தம்பி நல்லா கேட்டுக்கோ. சிகரெட் குடிச்சா நாய் கடிக்காது. வீட்டுக்கு திருடன் வர மாட்டான்,பொம்பள புள்ள பொறக்காது.முதுமையும் வராது.

7 தம்பி..... நாய் கடிக்காதுன்னு ஏன் சொன்னன்னா சிகரெட் குடிச்சா நுரையீரல் பாதிக்கப்பட்டு கிட்னி ஃபெய்லியர் ஆயி எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்னு சொல்ற மாதிரி நல்ல இருந்த ஆளு நோயாளியா ஆகி கையில தடிய வச்சி நடக்க ஆரம்பிச்சிருவாரு.கைல தடி இருந்தா எப்டி நாய் பக்கத்துல வரும், அதனால தான் நாய் கடிக்காதுன்னு சொன்னேன்.

8 ஓ அதுவா சிகரெட்ட  வாங்கி குடிச்சா அந்த சிகரெட் கம்பெனி காரன் டீ.பி நோய இலவசமா தரான்.அதனால டீ.பி நோய் வந்து நைட் பூராம் தூங்காம லொக்கு லொக்குன்னு இருமிகிட்டே இருப்பாரு.அப்றம் எப்டி வீட்டுக்கு திருடன் வருவான்.

9 ஓ அத கேக்குறியா சிகரெட் குடிக்கிறதனால உடம்புல உயிர் செல்லுகள் எல்லாமே செத்துப்போயிடும்.அதனால பொம்பள புள்ள மட்டுமில்ல எந்த குழந்தையுமே பொறக்காது.

10 அதுவா… அது வெறி சிம்பிள். சிகரெட் குடிச்சா உயிர் கொல்லி நோயான கேன்ஸர் வரும். சீக்கிரமே மவ்த்தாயிடுவாரு. அப்றம் எப்டி அவருக்கு முதும வரும். அதான் அவருக்கு முதும வராதுன்னு சொன்னேன். அதுமட்டுமில்லாம எமதர்ம ராஜா என்டர்பிரைஸஸ் வழங்கும் சில அற்புதமான பரிசுகள் உண்டு.சொல்றேன் கேளுங்க

11 பீடி சிகரெட் குடிச்சா முதல் பரிசா ஹார்ட் பிரச்சன வரும்.இரண்டாவது பரிசா பக்கவாதம் வரும்.மூன்றாவது பரிசா டீ.பி வரும்.பம்பர் பரிசா கேன்ஸர் வரும்.ஆறுதல் பரிசா பணப்பிரச்சன வரும்.ஊக்கப் பரிசா மனப்பிரச்சன வரும்.இந்த பரிசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

12 முதல்ல இந்த பெத்தவங்கள சொல்லனும்.புள்ளைங்கள ஒழுங்கா வளருங்க நல்லவங்களோட சேர விடுங்க கெட்டவங்களோட சேர விடாதீங்க. வீட்ல மட்டுமில்லாம வெளிய போனாலும் உங்க புள்ளைங்க எங்க போறாங்க யார் கூட பழகுறாங்க அதல்லாம் பாருங்க,ஒழுங்கா மதரஸாவுக்கு அனுப்புங்க கொஞ்சமாவது அவங்களுக்கு மார்க்கம் கிடைக்கும் அப்டின்னு சொன்னா எந்த பெத்தவங்களாச்சும் கேக்குறாங்களா


நபர்  : 3 


1 என்னப்பா ரண்டு பேரும் ரொம்ப நேரமா அப்டி என்னத்த பேசிட்டு இருக்கீங்க.

2 இதான் மேட்டரா அத நிறுத்துறது ரொம்ப ஈசிப்பா

3 ஒரு பத்து விஷயம் இருக்குதுப்பா அத கரைக்டா ஃபாலோ பன்னா போதும். சீக்கிரமே சிகரெட் பழக்கத்த நிறுத்திடலாம். 

4 நான் ஒரு ஆர்டிகல் படிச்சேன்.சிகரெட் குடிக்கிறவங்க அத நிறுத்துறதுக்கு என்ன செய்யனுன்னு.

5 முதல் விஷயம் ; கொஞ்ச நாளைக்கு சிகரெட் பிடிக்கிற நண்பர்கள விட்டு விலகி இருக்கனும். முக்கால் வாசி பேர் சிகரெட் பிடிக்கிறதே அவங்க நண்பர்களால தான். 

6 எங்க... இன்னைக்கி அவங்களுக்கு உலக கல்வி தான் பெருசா தெரியுது. என் புள்ள நல்ல படிக்கனும் நல்ல மார்க் வாங்கனும் நல்ல வேளைக்கு போனும் அப்டின்னு தான் நினைக்கிறாங்களே தவிர என் புள்ள மார்க்கத்த தெரிஞ்சிக்கனும் நல்ல குர்ஆன் ஓதனும் கரைக்டா ஐவேள தொழுகனும்னு அப்டின்னு கொஞ்சம் கூட அக்கர இல்ல.

7 இந்த அப்பாமார்களையும் நாலு சாத்து சாத்தனும். வேலைக்கு போனும் நல்ல சம்பாத்திக்கனும்னு தான் நினைக்கிறாங்களே தவிர புள்ளைங்க மேல கொஞ்சமாவது அக்கர இருக்குதா

8 ஆமா அவங்களே தொழுகுறதில்ல. அவங்க தொழுதா தான அவங்கள பாத்து புள்ளைங்களும் தொழுவாங்க. இந்த அம்மா மார்களும் அத கண்டுக்கிறதில்ல. வீட்ல இந்த ஆளு தொழுகாம இருக்குறாரே அவர பாத்து நம்ம புள்ளைங்களும் கெட்டுப் போயிடுமே அப்டின்னு கொஞ்மாவது கவல இருக்கா ? நபி ஸல் என்ன சொன்னாங்க. காலையில் தானும் எழுந்திருத்து தன் மனைவியையும் எழுப்பி விட்டு. அப்டி எழுந்திருக்கா விட்டால் அவ மேல கொஞ்சம் தண்ணிய தெளிச்சி எழுப்பி விடுற ஒருவர் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.அதேமாதிரி காலையில் தானும் எழுந்திருத்து தன் கணவரையும் எழுப்பி விட்டு. அப்டி எழுந்திருக்கா விட்டால் அவர் மேல கொஞ்சம் தண்ணிய தெளிச்சி எழுப்பி விடுற ஒரு பெண் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக அப்டின்னு சொன்னாங்க.இன்னைக்கு எந்த வீட்ல கணவன் மனைவி அப்டி இருக்காங்க.

9 ;  2 வது விஷயம் சிகரெட் குடிக்கிறது கூடாது.அது தப்பு, உடலுக்கு கேடு, அது ஆளையே காலி பன்னிடும் அப்டின்னு நாம நம்மல பாத்து சொல்லிகிட்டே இருக்கனும்.அப்டி சொல்லிகிட்டே இருக்கும் போது அது நம்ம உள்ளத்துல நல்ல மாற்றத்த ஏற்படுத்தும். 3 வது ; உடற்பயிற்சி செய்யணும். முக்கியமா மூச்சுப்பயிற்சி செய்யனும். 4 வது ; தினமும் இரண்டு தடவை குளிக்கனும்.  முதல்ல வெதுவெதுப்பான தண்ணீர். அப்றம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர். இப்டி மாத்தி மாத்தி ஒரு நாளைக்கு 2 தடவ குளிக்கனும். 5 வது ; ரொம்ப நேரம் பசியோ இருக்கக் கூடாது. 6 வது ; சாப்பாடு கன்ட்ரோலா இருக்கணும்.  முக்கியமா பச்சைக் காய்கறிகள் பழங்கள் அதிகமா சாப்டனும். 7 வது ;  அதிகமா காபி குடிக்கக்கூடாது, அதிகமா டீ குடிக்கக்கூடாது. மது குடிக்கவே கூடாது. இதெல்லாம் சிகரெட் குடிக்கிறத கூட கொஞ்சம் ஊக்கப்படுத்தும். 8 வது ; கொஞ்ச நாளைக்கு சிகரெட் கண்ல படாத அளவுக்கு பார்த்துக்கனும். அத பார்க்கிற வரைக்கும் அத குடிக்கனுன்னு ஆச வந்துகிட்டே இருக்கும். 9 வது ; கரைக்டா ஐவேளை தொழுது இந்த முஸீபத்துல இருந்து என்ன காப்பாத்திரு அப்டின்னு அல்லாஹ்ட துஆ செஞ்சுகிட்டே இருக்கனும்.தொழுகை மானக்கேடான விஷயங்களையும் தீமைகளையும் தடுக்கும்னு அல்லாஹ் குர்ஆன்ல சொல்றான்.அதனால அந்த தொழுக நம்மல தடுக்கும்.அந்த துஆவும் நமக்கு கை கொடுக்கும். 10 வது ரொம்ப முக்கியமான விஷயம் வலா தக்துலூ அன்ஃபுஸகும் உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள் என்று அல்லாஹ் குர்ஆன்ல சொல்றான். இந்த சிகரெட் கொஞ்ச கொஞ்சமா நம்மல கொன்னுரும். அதனால அல்லாஹ்வோட அந்த வார்த்தைக்கு பயந்து இறையச்சத்தோடு இருக்கனும்.இந்த 10 விஷயங்களையும் ஃபாலோ பன்னா இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா சிகரெட்ட சீக்கிரமே நிறுத்திடலாம்.


நபர் : 4 


1 அதான நானும் ரொம்ப நேரமா பாக்குறேன் என்னமோ ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க என்னப்பா விஷயம் 

2 ஆமாபா நானும் கூட ரொம்ப நாளா இந்த சிகெரட் குடிச்சின்னு இருக்கேன். வீட்ல பொண்டாட்டி தொல்ல வேற தாங்க முடியல. எப்ப போனாலும் கண்டு புடிச்சிர்ரா. எப்டி போனாலும் கண்டு புடிச்சிர்ரா. கண்டுபுடிச்சி செம்ம அடி அடிக்கிறா. அடி தாங்க முடியலப்பா.

3 என்னது ரொம்ப ஈசியா! நான் எவ்ளோ நாளா டிரைப் பன்றேன் தெரியுமா முடியலயே 

4 முதல்ல அத சொல்லுப்பா ரொம்ப நாளா அத தான் தேடிட்டு இருக்கேன்.

5 சரி அதுல்லாம் இருக்கட்டும் முதல்ல விஷயத்த சொல்லு.

6 ஆமாபா கரைக்டா சொன்னா  நான் கூட ஸ்கூல் படிக்கும் போது என்னோட நாசமா போன அந்த ஃபிரன்ஸுங்க தான் என்னையும் சிகரெட் குடிக்க வச்சி கெடுத்துட்டானுங்க.

7 ஆமா ஆமா முதல்ல பெத்தவங்கள தான் சொல்லனும். அவங்க தான் முதல் காரணம்.அன்னைக்கு நான் என் ஃபிரன்ஸுங்க கூட சேர்ந்து இந்த மாதிரி கெட்டு போயிருந்தாலும் என்ன பெத்தவங்க ஒழுங்கா என்ன கவனிச்சு என்ன கண்டிச்சி ஒழுங்கா மதரஸாவுக்கு அனுப்பியிருந்தா நான் கொஞ்சமாவது திருந்திருப்பேன்.அன்னைக்கு அவங்க என்ன ஒழுங்கா வளக்காதனால தான் இன்னைக்கு இப்டி கெட்டுப்போய் நிக்கிறேன்.

8 ஆமா அவங்களுக்கு டீவியில போடுற சீரியல பாக்கவே நேரம் சரியா இருக்கு இதுல புள்ளைங்கள பாக்க எங்க நேரம் இருக்கு.புள்ளைங்க மார்க்கம் தெரியாம இருந்தா என்ன குர்ஆன் ஓதாம இருந்தா என்ன தொழுகாம இருந்தா என்ன புள்ளைங்க எக்கேடு கேட்டுப் போனா அவங்களுக்கு என்ன 

9 ஆமா கரைக்டா சொன்னே காலைல வேலைக்கு போறது. நைட் வீட்டுக்கு வந்து அப்டியே தூங்குறது.அவ்ளோ தான். பையன் என்ன செய்றான் ஏது செய்றான் ஒழுங்கா படிக்கிறானா ஓதுறானா தொழுகுறானா அப்டின்னு எதுவும் பாக்குறதும் இல்ல கேக்குறதும் இல்ல.

10 ; அவங்க 2 பேரு மேலயும் தண்ணீய ஊத்தி நாம தான் எழுப்பனும் போல தெரியுது.அப்டித்தான் நிலம இருக்குது.பெத்தவங்களே இப்டி ஃபஜ்ர் தொழுகாம இருந்தா புள்ளைங்க மட்டும் எப்டி தொழுவாங்க. ஏன்டா ஃபஜ்ர் தொழுக வரலன்னு ஹஜ்ரத் கேட்டா எங்க அம்மா எழுப்பி விடலன்னு சொல்வாங்க.ஏன்டா காலைல மதரஸாவுக்கு வரலன்னு ஹஜ்ரத் கேட்டா அம்மா எழுப்பி விடலன்னு சொல்வாங்க.இப்டி அம்மாமார்கள் கேர்லஸா இருந்தா புள்ளைங்க எப்டி தொழுவாங்க,புள்ளைங்க எப்டி ஓதுவாங்க.பெத்தவங்களுக்கு முதல்ல அக்கரையும் கவலையும் வரனும். அப்பத்தான் புள்ளைங்கள சரி பன்ன முடியும். சரிப்பா அதுலா இருக்கட்டும் சிகரெட்ட நிறுத்துறதுக்கு அடுத்து என்னென்ன செய்யனும் அத சொல்லு.

11 ; ஓ கே பா ரொம்ப ரொம்ப ஜஸாகல்லாஹ். இன்ஷா அல்லாஹ் நீ சொன்ன எல்லா விஷயத்தையும் நான் ஃபாலோ பன்னி சீக்கிரமே இந்த மோசமான பழக்கத்தை விட்டர்ரேன்.எனக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்றேன்.அல்லாஹ் நம் எல்லோரையும் இந்த முஸீபத்திலிருந்து காப்பானாக 


No comments:

Post a Comment