(ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)
உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.
