Thursday, August 14, 2025

இது சுதந்திர நாடா?

 

இந்திய நாடு தனது 79 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரம் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. மனிதன் சுதந்திரவானாகவே பிறக்கிறான். அவன் பாவத்தை சுமந்து கொண்டோ அடிமையாகவோ பிறப்பதில்லை. மனிதன் தான், தன்னை ஒன்றுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். அல்லது அடுத்த மனிதர்களை அடிமைப்படுத்துகிறான். இதனை இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.

Thursday, August 7, 2025

மனித துணை - humen companion

 

சமீப காலமாக பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. ஆதி காலத்தில் மனிதனின் தேவைக்காகவும் உதவிக்காகவும் சில மிருகங்களை வளர்த்து வந்த மனிதன், பிறகு அவைகளினால் சில இயற்கை நன்மைகளை பெற்ற பொழுது பிராணிகளின் அவசியத்தை உணர்ந்து அவைகளோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். ஆனால் இன்று பிராணிகளை வளர்ப்பது நவீன காலத்து கலாச்சாரமாக மாறி விட்டது. தேவைக்காகவும் உதவிக்காகவும் வளர்த்த காலம் கடந்து இப்போது அதை வளர்ப்பது ஃபேஷனாக மாறிப்போனது.பிராணிகள் விஷயத்தில் சிலர் எல்லை கடந்து அதற்கு அடிமையாகி விட்டார்கள். வித விதமான பறவைகளையும் பிராணிகளையும் வீட்டில் வாங்கி நிரப்புவதை வழமையாக கொண்டிருக்கின்றார்கள்.

Friday, August 1, 2025

வேடிக்கை பார்ப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

 

 


من رأى منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.  (முஸ்லிம்: 78)

Friday, July 25, 2025

கனவை வைத்து கனவு காணாதே

 


நாம் நம் வாழ்வின் 3 ல் ஒரு பங்கை தூக்கத்தில் செலவிடுகிறோம். அந்த அடிப்படையில் நாம் வாழ்வில் அதிகமான கனவுகளை காணுகின்றோம். உலகில் கனவு காணாதவர்கள் இல்லை என்றளவிற்கு கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.

Friday, July 18, 2025

வகுப்பறையில் வகுப்புவாதம்

 


ஷரீஅத்திலும் உலகத்திலும் வரலாறு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. வரலாறு ஒரு தேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.நிகழ்காலத்தை சரியாக வடிவமைப்பதற்கும் முறையக கட்டமைப்பதற்கும் வரலாறுகள் மிகவும் அவசியம்.