Showing posts with label வாய்ப்புக்கள். Show all posts
Showing posts with label வாய்ப்புக்கள். Show all posts

Tuesday, March 18, 2025

தராவீஹ் 18 - வாய்ப்புக்கள் ஒரு முறை தான் கதவைத் தட்டும்

 

وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ

அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்). (அல்குர்ஆன் : 35:37)

Saturday, September 5, 2020

வாய்ப்புக்களை பயன்படுத்துவோம்

 

அல்லாஹுத்தஆலா நம்மை உலகத்தில் படைத்து நமக்கு அழகானதொரு  வாழ்க்கையைக் கொடுத்து அந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை  விஷயங்களையும் அமைத்துத் தந்திருக்கிறான். அந்த வாழ்கையை அனுபவிப்பதற்குத் தேவையான அறிவையும் தெளிவையும் சாதுர்யத்கையும் வழங்கியிருக்கிறான். மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும்  அவ்வப்போது தருகிறான். அப்படி அல்லாஹ் தருகிற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சரியாக முறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் உண்மையில் புத்திசாளிகள். வெற்றியாளர்கள். கிடைக்கிற சந்தர்ப்பங்களை நவுவ விடுபவர்கள் புத்திசாளிகளாகவும் இருக்க முடியாது. வெற்றியாளர்களாகவும் திகழ முடியாது.