Saturday, September 28, 2013

சிசுக்கொலை

                                    
      அம்மா அஸ்ஸலாமு அலைக்கும் நான் சொர்கத்துல இருந்து பேசுறேம்மா.

எப்டிம்மா இருங்கீங்க? 

இங்கே சொர்கத்துல பூக்கள் பூத்துக்குலுங்குது,
பாலாறுகள் ஓடுது,
வசந்தமான காத்து வீசுது, 
குருவிகள் இசைக்குது, 
குயில்கள் பாடுது, 
மயில்கள் ஆடுது, 
மான்கள் துள்ளி ஓடுது,

நான் வானத்தில் நடக்கிறேன்,
தேவதைகளோடு விளையாடுறேன், 
நல்ல உணவுகளை உண்ணுறேன்,
மதுரமான நீரை குடிக்கிறேன்,
நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேம்மா, \

இருந்தாலும் உங்க நினைவுதான் என்னை வாட்டுதும்மா.
 அம்மா சொல்லுங்கம்மா எப்டி இருக்கீங்க ?
வீட்ல எல்லாரும் நலமா வாப்பா ?
அண்ணன், அக்கா எல்லாரும் சுகமா ? 
உலகம்லாம் எப்டிம்மா இருக்குது ?
வானம் பூமி சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்,மரம் செடி கொடி மலர் எல்லாம்எப்டிம்மா இருக்குது ? 

எப்டி இருந்தா என்னம்மா !
இதையெல்லாம் பாக்கவுடாம 
உலகத்த அனுபவிக்க வுடாம
 உன் வயித்துலயே எனக்கு சமாதி கட்டிட்டியேம்மா !இது நியாயமா! அட்லிஸ்ட் உன் முகத்த கூட பாக்கவுடாம என்ன கொன்னுட்டியேம்மா ! உனக்கு எப்டிம்மா மனசு வந்துச்சு ? 
என்னோட அண்ணன இப்படில்லாம் கொல்லுவியாம்மா ?
என்னோட அக்காவ இப்படில்லாம் சாவடிப்பியாம்மா ?
என்னோட வாப்பாவுக்கு இப்படில்லாம் நீயே சமாதி கட்டுவியாம்மா ?

ஆனா----என்ன மட்டு ஏம்மா இப்டி பொறக்கவுடாம கொன்னீங்க ?
எனக்கு மட்டும் ஏம்மா நீங்களே உங்க கையாள கப்ரு குழி தோண்டுனீங்க ? 
சொல்லுங்கம்மா ! 
இறக்கத்துக்கே உதாரணமான தாய் உனக்கு எப்டிம்மா இந்த இரக்கமில்லா காரியத்த செய்ய மனசு வந்துச்சு ? 
சொல்லுஙகம்மா !
ஏம்மா என்ன கருவிலேயே கொன்னீங்க ? 
இவன் பொறந்தா--- ஆக்குர சோத்துல ஒரு புடி சோறு கொரஞ்சிருமேன்னு பயமாம்மா ?
அல்லது இருக்குற தண்ணியில ஒரு டம்லர் தண்ணீர் கொரஞ்சிருமேன்னு பயமாம்மா ?
இருக்குற சொத்துல ஒரு பத்து ரூபாய் கொரஞ்சிடுமேன்னு பயமாம்மா ? சொல்லுங்கம்மா ?
ஏம்மா நான் பொறந்தான் உன்சோத்தயாம்மா கேக்கப்போறேன்-----எனக்கு அல்லாஹ் கொடுத்த சோத்ததானம்மா கேக்கப்போறேன்.

ஒன்னோட பணத்தயாம்மா அனுபவிக்கப்போறேன்----எனக்குன்னு அல்லாஹ் எழுதி வச்சிருக்கிற பணத்த தானம்மா அனுபவிக்கப்போறேன்.

உனக்கு என்னம்மா கொறையப்போவுது.

நான் உலகத்துல பொறந்தா உனக்கு என்னம்மா சோதன வந்துறப்போவுது. 

அம்மா நான் உலகத்துல பொறந்திருந்தா 
நானும் வாப்பாவோட பைக்ல சுத்தியிருப்பேன்,
அண்ணனோட கையப்புடிச்சு நடந்திருப்பேன்,
அக்காவோட சிரிச்சிப்பேசி விளையாடி இருப்பேன்,
உங்கள்ட கதை கேட்டுக்கொண்டே உங்க மடியில தூங்கியிருப்பேன்,
ஏதாவது விளையாட்டுக்கள பன்னி உங்களிடம் 1000 முத்தங்களை வாங்கியிருப்பேன்,

ஆனா அதையெல்லாம் அனுபவிக்கவுடாம 
ஓன் வயித்திலேயே அநியாயமா என்ன கொன்னுட்டியேம்மா !
இந்த மாதிரி வயித்தலயே கொலை செய்யுற காரியத்த ஒரு நாய் கூடச்செய்யாதம்மா 
ஒரு தாய் நீ எப்டிம்மா செஞ்ச ?
உனக்கு எப்டிம்மா என்ன கொல்ல மனசு வந்துச்சு ? 
சொல்லும்மா சொல்லு ? 

நாளைக்கு சொர்கத்துல எந்த முகத்த வச்சும்மா என்ன பாக்க வருவ ?அதுமட்டுமில்ல கியாமத் நாள்ள உன் மகன கருவுலயே எதுக்காக கொன்ன ?
நான் கொடுத்த உசுற அழிக்குறதுக்கு உனக்கு என்ன உரிம இருக்கு ? ன்னு அல்லாஹ் கேட்டா 
நீ என்னம்மா பதில் சொல்லுவ ?
 பதில் சொல்லுங்கம்மா!
ஏம்மா மவுனமா இருக்கீங்க ?
தாய்மார்களே 

கருக்களைப்பு என்ற பெயரால் உங்கள் கருவில் உங்களால் கொல்லப்பட்ட அழிக்கப்பட்ட குழந்தை இப்டி உங்களிடம் கேள்வி கேட்டா நீங்கள் என்ன பதில் சொல்வீங்க ?

யோசிங்க தாய்மார்களே யோசிங்க அஸ்ஸலாமு அலைக்கும். 

                                                                                        இப்படிக்கு ;
       
 அன்புத்தாயால் இரக்கமில்லாமல் கொல்லப் பட்ட சிசு

No comments:

Post a Comment