Friday, March 31, 2023

உண்மையே அமைதிக்கான வழி

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9:119)

Thursday, March 30, 2023

பிளவு ஆபத்தானது

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:46)

Wednesday, March 29, 2023

அஃராஃப்

 

وَبَيْنَهُمَا حِجَابٌ‌ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا بِسِيْمٰٮهُمْ‌  وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ‏

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப் பார்கள். (அல்குர்ஆன் : 7:46)

Tuesday, March 28, 2023

வேண்டாம் அவர்களின் தொடர்பு

 

وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌  وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். (அல்குர்ஆன் : 6:68)

Sunday, March 26, 2023

கல்நெஞ்சும் கறையும்

 

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 5:83)

இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம்

  

یُوصِیكُمُ ٱللَّهُ فِیۤ أَوۡلَـٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَیَیۡنِۚ 

உங்கள் சந்ததியில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 4 ;11)

Saturday, March 25, 2023

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் : 3:102)

Friday, March 24, 2023

இரண்டும் வேண்டும்

 

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏

அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர் களும் மனிதர்களில் உண்டு. (அல்குர்ஆன் : 2:201)

Thursday, March 23, 2023

அருளான மாதத்தில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவோம்

பாக்கியங்களில் மிக உயர்ந்த பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இரண்டு மாதங்களாக எந்த மாதத்தை அடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோமோ அந்த அருள் மிக்க மாதத்தை நாம் அடைந்து விட்டோம். அருள்மிக்க இந்த ரமலானை நாம் அடைந்து கொண்டதற்காகவும் நம் துஆவை கபூல் செய்ததற்காகவும் ரப்புல் ஆலமீனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், கடந்த வருடம் நம்மோடு ரமலானை சந்தித்த எத்தனையோ பேர் இப்போது இல்லை. கடந்த வருடம் பகலெல்லாம் நோன்பிருந்து இரவெல்லாம் நின்று தொழுத எத்தனையோ பேர் மண்ணுக்குள் சென்று விட்டார்கள். அல்லாஹ் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறான். நாம் நம்மை சரிபடுத்திக் கொள்வதற்கும் கடந்த கால பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து தூய்மையடைந்து கொள்வதற்கும் நம்முடைய நன்மைகளின் தட்டை கனமாக்குவதற்கும் நம் வாழ்வில் இன்னொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கிருக்கிறான்.மாபெரும் பொக்கிஷமாக நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த மாதத்தின் எந்த நிமிடத்தையும் வீணடிக்காமல் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். அது தான் இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ரப்புல் ஆலமீனுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக் கடனாகும்.

Wednesday, March 22, 2023

ஏன் இந்த தயக்கம் ?

 

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 2:26)

Thursday, March 16, 2023

மனிதனைப் பக்குவப்படுத்தும் நோன்பு

 

அல்லாஹ்வின் அருளால் ஷஃபான் மாதத்தின் இறுதி ஜும்ஆ இது. அநேகமாய் அல்லாஹ் நாடினால் அடுத்த வார ஜும்ஆ ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும். ரப்புல் ஆலமீன் பூரண உடல் சுகத்தோடு அதை அடைந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ரமலானைத் தொட்டும் விடும் தூரத்தில் நாம் இருக்கிறோம். ரமலானுடைய காலங்கள் நம்முடைய வாழ்வில் பொன்னான காலங்கள். ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடும். நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடும்.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்குள் பிறக்கும். மற்ற காலங்களில் பசியே தெரியாத அளவிற்கு அவ்வப்போது எதையாவது ஒன்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும் நமக்கு ரமலான் காலங்களில் பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தரும். இது தான் நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.

Thursday, March 9, 2023

பேணுதலான வாழ்வு


இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தையும் பேணுதலையும் கடைபிடிக்குமாறு  போதிக்கிறது. கடமைகளை செய்யச் சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச் சொல்கிறது. அ்தேபோன்று சிறு குற்றங்களிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவறக் காரணமாகி விடும். கடமைகளை விடக்கூடியவர்கள்   அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஏற்படும் அலட்சியமும் கவனக்குறைவும் தான் கடமைகளில் குறையுள்ளவர்களாக அவர்களை மாற்றி விடுகிறது. அதேபோன்று பெரும்பாவங்களை மனிதன் உடனே செய்து விடுவதில்லை. சிறு குற்றங்களில் அவனிடம் இருக்கும் எச்சரிக்கையின்மை தான் நாளடைவில் பெரும்பாவங்கள் செய்வதற்கான துணிச்சலை ஏற்படுத்துகிறது.