Showing posts with label பேணுதல். Show all posts
Showing posts with label பேணுதல். Show all posts

Thursday, March 9, 2023

பேணுதலான வாழ்வு


இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தையும் பேணுதலையும் கடைபிடிக்குமாறு  போதிக்கிறது. கடமைகளை செய்யச் சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச் சொல்கிறது. அ்தேபோன்று சிறு குற்றங்களிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவறக் காரணமாகி விடும். கடமைகளை விடக்கூடியவர்கள்   அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஏற்படும் அலட்சியமும் கவனக்குறைவும் தான் கடமைகளில் குறையுள்ளவர்களாக அவர்களை மாற்றி விடுகிறது. அதேபோன்று பெரும்பாவங்களை மனிதன் உடனே செய்து விடுவதில்லை. சிறு குற்றங்களில் அவனிடம் இருக்கும் எச்சரிக்கையின்மை தான் நாளடைவில் பெரும்பாவங்கள் செய்வதற்கான துணிச்சலை ஏற்படுத்துகிறது.