Friday, April 15, 2022

துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா ?

 

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌  اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ‏

(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன். (அல்குர்ஆன் : 23:51)

كَسْبُ الْحَلالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ "

கடமையான வணக்கங்களுக்கு பிறகு ஆகுமான (ஹலாலான) வருமானத்தை தேடுவது கடமையாகும். (நூல்:பைஹகீ)

மேற்கூறப்பட்ட வசனத்தில் சொல்லப்பட்டது நபிமார்களுக்கு மட்டும் இடப்பட்ட கட்டளையல்ல. ஈமான் கொண்ட அத்தனை பேருக்கும் இடப்பட்ட கட்டளை. நாம் உண்ணுகிற உணவு ஹலாலாக நாம் குடிக்கும். பானம் ஹலாலாக,  உடுத்துகிற உடை ஹலாலாக, நாம் இருக்கும் இடம் ஹலாலாக, நாம் சம்பாதிக்கும் பணம் ஹலாலாக, நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற அத்தனையும் ஹலாலாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் ஹராம் கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا، وإنَّ اللَّهَ أمَرَ المُؤْمِنِينَ بما أمَرَ به المُرْسَلِينَ، فقالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51]، وقالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172]، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟!

மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான். “”தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்.” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்) நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி (ஸல்) கூறிய பின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

 

அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 1015)

நாம் உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் வணக்கங்களுக்கும் தொடர்புண்டு. அதேபோன்று துஆவிற்கும் தொடர்புண்டு. அவைகள் தூய்மையாக இருந்தால் நம் வணக்கங்கள் தூய்மையாக இருக்கும். அவைகள் கெட்டுப் போனால் நம் வணக்கமும் கெட்டுப் போகும்.அவைகள் தூய்மையாக இருந்தால் தான் நம் பிரார்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதனால் தான் அருமை நபியும் ஸஹாபாக்களும் ஹலால் ஹராம் விஷயத்தில் மிக பேணுதலாக இருந்தார்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

عن ضمرة بن حبيب ، أن أم عبد الله ، أخت شداد بن أوس بعثت إلى النبي صلى الله عليه وسلم بقدح لبن عند فطره وهو صائم ، وذلك في أول النهار وشدة الحر ، فرد إليها رسولها : أنى كانت لك الشاة؟ فقالت : اشتريتها من مالي ، فشرب منه ، فلما كان الغد أتته أم عبد الله أخت شداد فقالت : يا رسول الله ، بعثت إليك بلبن مرثية لك من طول النهار وشدة الحر ، فرددت إلي الرسول فيه؟ . فقال لها : " بذلك أمرت الرسل ، ألا تأكل إلا طيبا ، ولا تعمل إلا صالحا " .

ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் நோன்பு  திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி(ஸல்)அவர்கள்: இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

 يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)

மேற்கூறப்பட்ட வசனத்தில் "நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலனவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.

عن زيد بن أرقم قال: كان لأبي بكر الصديق رضي الله تعالى عنه مملوك يغل عليه، فأتاه ليلة بطعام، فتناول منه لقمة، فقال له المملوك: مالك كنت تسألني كل ليلة، ولم تسألني الليلة؟ قال: حملني على ذلك الجوع، من أين جئت بهذا؟ قال: مررت بقوم في الجاهلية، فرقيت لهم، فوعدوني، فلما أن كان اليوم، مررت بهم، فإذا عرس لهم، فأعطوني؛ قال: إن كدت أن تهلكني، فأدخل يده في حلقه، فجعل يتقيأ، وجعلت لا تخرج، فقيل له: إن هذه لا تخرج إلا بالماء، فدعا بطست من ماء، فجعل يشرب ويتقيأ، حتى رمى بها؛ فقيل له: يرحمك الله، كل هذا من أجل هذه اللقمة، قال: لو لم تخرج إلا مع نفسي، لأخرجتها؛ سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: «كل جسد نبت من سحت، فالنار أولى به». فخشيت أن ينبت شيء من جسدي من هذه اللقمة.[١]

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு அடிமை ஒருவர் இருந்தார். ஒரு நாள் இரவில் ஒரு உணவைக் கொண்டு வந்தார். அதிலிருந்து ஒரு பிடி உணவை எடுத்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு எப்போதும் ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால் அதைப்பற்றி நீங்கள் விசாரிப்பீர்கள். இன்று விசாரிக்காமலேயே உட்கொண்டு விட்டீர்களே என்று அந்த அடிமை கேட்டார். பசி அதிகமாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன் என்று கூறினார்கள். சரி இது என்ன உணவு எங்கிருந்து வந்தது என்று கேட்டார்கள். நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு ஒரு கூட்டத்தாருக்காக மந்திரித்தேன். அவர்கள் எனக்கு அதற்கு அன்பளிப்பு தருவதாக வாக்களித்தார்கள். இப்போது அவர்களை சந்தித்த போது அதை எடுத்துக் கொடுத்தார்கள் என்று அந்த அடிமை கூறினார். என்னை அழிக்க நினைத்து விட்டாயா என்று கூறி தன் வாயில் கையை நுழைத்து அதை வெளியே எடுக்க முயற்சித்தார்கள். அது வராத போது நீரை குடித்து குடித்து வயிற்றுக்குள் சென்ற அத்தனை உணவையும் வெளியே வாந்தி எடுத்து விட்டார்கள். இதன் மூலம் என்னுயிரே போயிருந்தாலும் நான் பொருட்படுத்தி இருக்க மாட்டேன். ஏனென்றால் எந்த உடல் ஹராமைக் கொண்டு வளர்கிறதோ அது நரகத்திற்கு உரியது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

இறையச்சம் உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம் ஒருவர் அல்லாஹ்வை பயந்து வாழ்கிறார் என்பதற்கு அடையாளம் ஹலால் ஹராமை பேணி வாழ்வது தான்.

عن ميمون بن مهران قال: لا يكون الرجل من المتقين، حتى يحاسب نفسه أشد من محاسبة شريكه، حتى يعلم من أين مطعمه، ومن أين ملبسة، ومن أين مشربه: أمن حلال ذلك، أم من حرام.]

உணவு எங்கிருந்து வந்தது ஆடை எங்கிருந்து வந்தது நீர் எங்கிருந்து வந்தது அது ஹலாலா ஹராமா என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளாத வரை அவர் இறையச்சமுள்ளராக ஆக முடியாது என மைமூன் பின் மர்ஹான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

عن أبي عبد الله الساجي قال: خمس خصال ينبغي للمؤمن أن يعرفها: إحداهن: معرفة الله تعالى، والثانية: معرفة الحق، والثالثة: إخلاص العمل لله، والرابعة: العمل بالسنة، والخامسة: أكل الحلال؛ فإن عرف الله، ولم يعرف الحق: لم ينتفع بالمعرفة؛ وإن عرف، ولم يخلص العمل لله: لم ينتفع بمعرفة الله؛ وإن عرف، ولم يكن على السنة: لم ينفعه؛ وإن عرف، ولم يكن المأكل من حلال: لم ينتفع به بالخمس؛ وإذا كان من حلال: صفا له القلب، فأبصر به أمر الدنيا والآخرة؛ وإن كان من شبهة: اشتبهت عليه الأمور بقدر المأكل؛ وإذا كان من حرام: أظلم عليه أمر الدنيا والآخرة؛ وإن وصفه الناس بالبصر: فهو أعمى، حتى يتوب٠]

ஐந்து விஷயங்கள் ஒரு மூஃமினிடம் அவசியம் இருக்க வேண்டும். ஒன்று அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல். இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். மூன்றாவது அல்லாஹ்விற்காக கலப்பற்ற அமல் செய்தல். நான்காவது நபியின் சுன்னத்தைக் கொண்டு அமல் செய்தல். ஐந்தாவது ஹலால் ஹராமை தெரிந்திருத்தல் என்று அபூஅப்துல்லாஹ் ஸாஜி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

فَقَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا ، وَأَيُّمَا عَبْدٍ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحْتِ وَالرِّبَا فَالنَّارُ أَوْلَى بِهِ "

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நபராக நான் ஆகுவதற்கு அல்லாஹ் விடத்தில் எனக்காக துஆ செய்யுங்கள் என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் கூறிய போது ஸஃதே உன் உணவை நீ ஹலாலாக ஆக்கிக் கொள். துஆ ஒப்புக் கொள்ளப்படும் நபராக நீ ஆகி விடுவாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு அடியான் ஹராமான ஒரு பிடி உணவை தன் வயிற்றுக்குள் செலுத்தி விட்டால் அவரிடம் இருந்து 40 நாட்களுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. எவருடைய உடம்பு ஹராமினாலும் வட்டியினாலும் வளர்கிறதோ அது நரகத்திற்கே உரியது என்றார்கள்.

No comments:

Post a Comment