Friday, April 7, 2023

ஹுத்ஹுத்

 

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) (அல்குர்ஆன் : 27:20)

لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏

(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன்.   அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார். (அல்குர்ஆன் : 27:21)

فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍ بِنَبَاٍ يَّقِيْنٍ‏

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். (அல்குர்ஆன் : 27:22)

اِنِّىْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِيَتْ مِنْ كُلِّ شَىْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ‏

மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது. (அல்குர்ஆன் : 27:23)

وَجَدْتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُوْنَۙ‏

அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை. (அல்குர்ஆன் : 27:24)

 

اَلَّا يَسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ يُخْرِجُ الْخَبْءَ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ‏

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா? அன்றி, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அவன் நன்கறிந்து கொள்கிறான். (அல்குர்ஆன் : 27:25)

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ‏

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்" என்று கூறிற்று. (அல்குர்ஆன் : 27:26)

قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏

(அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம். (அல்குர்ஆன் : 27:27)

عن ابن عباس، قال: كان سليمان بن داود يوضع له ستّ مائة كرسي، ثم يجيء أشراف الإنس فيجلسون مما يليه، ثم تجيء أشراف الجن فيجلسون مما يلي الإنس قال: ثم يدعو الطير فتظلهم، ثم يدعو الريح فتحملهم، قال: فيسير في الغداة الواحدة مسيرة شهر، قال: فبينا هو في مسيره إذ احتاج إلى الماء وهو في فلاة من الأرض، قال: فدعا الهدهد، فجاءه فنقر الأرض، فيصيب موضع الماء، قال: ثم تجيء الشياطين فيسلخونه كما يسلخ الإهاب، قال: ثم يستخرجون الماء

சுலைமான் அலை அவர்களுக்கு 600 அரியணைகள் இருந்தன. மனிதர்களில் முக்கியஸ்தர்கள் அந்த அரியணைகளில் சுலைமான் அலை அவர்களை அடுத்து அமர்ந்திருப்பார்கள். பிறகு ஜின் இனத்தில் முக்கியமானவர்கள் அதனை அடுத்து அமர்ந்திருப்பார்கள். ஹுத்ஹுத் பறவைகள் அவர்களுக்கு மேலே அணிவகுத்து நின்று நிழல் கொடுக்கும். காற்று அவர்களை சுமந்து செல்லும். பயணத்தின் இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் ஹுத்ஹுத் பறவையை அழைப்பார்கள். அது பூமியில் தன் அலகால் கொத்தி தண்ணீர் இருக்கும் நிலப்பரப்பை அறிவித்துத் தரும். பிறகு ஜின்கள் அந்த இடத்தைத் தோண்டி தண்ணீரை வெளியே எடுக்கும். (தப்ரீ)

இன்றைக்கு நாம் பார்க்கிறோம். மரங்கொத்திப் பறவை மரத்தின் தண்டுகளில் அமர்ந்து மரத்தைக் கொத்தி கொண்டிருக்கும். அவை மரங்களைக் கொத்தி சிறு ஒட்டைகளை உருவாக்குகின்றன. காரணம், மரத்தின் உட்பகுதியில் எண்ணற்ற பூச்சி, புழுக்கள் உருவாகி அவை மரத்திற்குச் சேதம் விளைவிக்கின்றன. மனிதன் உட்பட மற்ற உயிரினங்களின் கண்களுக்கு அப்பூச்சிகள் நேரடியாகத் தெரிவதில்லை. மரங்ககொத்திப் பறவைகள் அவற்றைக் கண்டறிந்து விடுகின்றன. அவை தன் கூரிய அலகால் மரப்பட்டையின் மீது தட்டி தட்டி அங்கு துளைகளை உருவாக்கி உள்ளிருக்கும் பூச்சிகளை உண்கின்றன. இதனால் மரம் சேதமாவது தடுக்கப்படும்.

அந்தப் பறவைகள் தங்கள் அலகுகளைப்பயன்படுத்தி மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மரங்களை கொத்துகின்றன.இந்த வேகத்தில் கொத்தினால் அதன் அலகுகள் பாதிக்காதா? இரண்டாக உடைந்து விடாதா ? தொடர்ந்து மிக வேகமாக கொத்துவதால் அதன் மூளைகள் பாதித்து மயக்கமேற்படாதா? போன்ற என்ற ஐயங்கள் நமக்கு எழும்.

ஆனால் அதன் அலகுகளிலே அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் அபார அமைப்பு அதைப் பாதுகாத்து எஃகு போன்ற பலத்தை அளிக்கிறது. அதன் மூளை அலகுகளுக்கு நேராக தலையின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது துளையிடும் போது அவற்றின் கீழ் அலகை ஒட்டியுள்ள சதைப்பகுதி இடிதாங்கியைப்போல செயல்பட்டு வேகமாகத் துளையிடுவதால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நிற்கிறது.

சுலைமான் அலை அவர்களிடம் இருந்த ஹுத்ஹுத் பறவை பூமிக்கடியில் நீர் எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு இருந்தது.

وَفِي الْقَوْمِ رَجُلٌ مِنَ الْخَوَارِجِ، يُقَالُ لَهُ: "نَافِعُ بْنُ الْأَزْرَقِ"، وَكَانَ كَثِيرَ الِاعْتِرَاضِ عَلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ لَهُ: قِفْ يَا بن عَبَّاسٍ، غُلبت الْيَوْمَ! قَالَ: وَلِمَ؟ قَالَ: إِنَّكَ تُخْبِرُ عَنِ الْهُدْهُدِ أَنَّهُ يَرَى الْمَاءَ فِي تُخُومِ الْأَرْضِ، وَإِنَّ الصَّبِيَّ لَيَضَعُ لَهُ الْحَبَّةَ فِي الْفَخِّ، وَيَحْثُو عَلَى الْفَخِّ تُرَابًا، فَيَجِيءُ الْهُدْهُدُ لِيَأْخُذَهَا فَيَقَعُ فِي الْفَخِّ، فَيَصِيدُهُ الصَّبِيُّ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَوْلَا أَنْ يَذْهَبَ هَذَا فَيَقُولُ: رَدَدْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، لَمَا أَجَبْتُهُ. فَقَالَ(٣) لَهُ: وَيْحَكَ! إِنَّهُ إِذَا نَزَلَ القَدَر عَمي الْبَصَرُ، وَذَهَبَ الحَذَر. فَقَالَ لَهُ نَافِعٌ: وَاللَّهِ لَا أُجَادِلُكَ فِي شَيْءٍ مِنَ الْقُرْآنِ أَبَدًا

நாஃபிவு பின் அஜ்ரக்  என்ற ஒருவன் இருந்தான். காரிஜிய்யா என்ற மோசமான கொள்கையைச் சார்ந்தவன். எப்போதும் அவன் இப்னு அப்பாஸ் ரலி அவர்களோடு தர்க்கம் செய்து கொண்டே இருப்பான். ஒரு நாள் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடத்தில் சென்று கேட்டான் ; நீங்கள் ஹுத்ஹுத் பறவையைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள். அதற்கு அல்லாஹ் நிறைய ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். பூமிக்கு அடியில் எங்கே தண்ணிர் இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் அதற்கு உண்டு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சிறுவன் அந்தப் பறவையை பிடிப்பதற்காக ஒரு வலையை தயார் செய்து அதை பூமியிலே புதைத்து வைத்து மேலே மண்ணை வைத்து மூடி விட்டு மேலே அதற்கான உணவை வைக்கிறான். அந்த உணவை எடுப்பதற்காக அங்கே வந்து உட்காருகிற அந்த பறவை அவன் மறைத்து வைத்திருந்த அந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. பூமிக்கு அடியில் இருக்கிற நீரை கண்டுபிடிக்கத் தெரிந்த அந்த பறவையால் மண்ணை வைத்து மூடி இருக்கிற அந்த வலையை அறிந்து கொள்ள முடிய வில்லையே என்று கேட்டான். அதற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விதி முடிந்து விட்டால் பார்வை குருடாகி விடும். திறமைகள் எல்லாம் பயனில்லாமல் போய் விடும் என்று சொன்னார்கள். (இப்னு கஸீர்)

இப்படி கேட்பதின் மூலமாக அவர்களை மடக்கி விடலாம். வாயடைக்கச் செய்து விடலாம் என்று நினைத்தவனுக்கு இலகுவாக அவர்கள் பதில் கூறி விட்டார்கள். அதைக் கேட்ட பிறகு இனிமேல் நான் குர்ஆன் விஷயத்தில் உங்களிடத்தில் எந்த விவாதமும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

ஒருவரிடத்தில் எத்தனை திறமைகள் இருந்தாலும் எவ்வளவு விசாலமான அறிவும் சாதூரியமும் இருந்தாலும் எதையும் வாங்கிக் கொள்கிற அளவிற்கு பொருளாதாரம் இருந்தாலும் விதி வந்து விட்டால் அந்த திறமைகளும் அறிவும் சாதூரியமும் பொருளாதாரமும் எந்த பயனும் இல்லாமல் ஆகி விடும். அல்லாஹ்வினுடைய விதியே வெல்லும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை உலகத்தின் எதார்த்தங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மிகவும் உற்சாகமாக, வேகமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 18 வயது இளம் வாலிபன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுதே கீழே விழுந்து மரணித்து போனான்.

உலகையே புரட்டிப் போட்ட கொரோனாவின் போது மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டம் பெற்ற ஒருவர் அந்த கொரோனாவில் பலியான சம்பவம் அனைவரும் அறிந்ததே.

எனவே ஒருவருக்கு தவணை முடிந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர் மரணத்தை சந்தித்தே தீர வேண்டும்.

ஸுலைமான் அலை மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்தில் நமக்கு சில பாடங்கள் உண்டு.

فِي هَذِهِ الْآيَةِ دَلِيلٌ عَلَى تَفَقُّدِ الْإِمَامِ أَحْوَالَ رَعِيَّتِهِ، وَالْمُحَافَظَةِ عَلَيْهِمْ. فَانْظُرْ إِلَى الْهُدْهُدِ مَعَ صِغَرِهِ كَيْفَ لَمْ يَخْف عَلَى سُلَيْمَانَ حَالُهُ، فَكَيْفَ بِعِظَامِ الْمُلْكِ. وَيَرْحَمُ اللَّهُ عُمَرَ فَإِنَّهُ كَانَ عَلَى سِيرَتِهِ، قَالَ: لَوْ أَنَّ سَخْلَةً عَلَى شَاطِئِ الْفُرَاتِ أَخَذَهَا الذِّئْبُ لَيُسْأَلُ عَنْهَا عُمَرُ. فَمَا ظَنُّكَ بِوَالٍ تَذْهَبُ عَلَى يَدَيْهِ الْبُلْدَانُ، وَتَضِيعُ الرَّعِيَّةُ وَيَضِيعُ الرُّعْيَانُ (قرطبي

ஹுத்ஹுத் என்பது ஒரு சின்ன பறவை. சிறிய படைப்பு. அந்த சின்ன பறவையின் மீதும் சுலைமான் அலை அவர்கள் கவனம் செலுத்து கிறார்கள். அதைத் தேடுகிறார்கள். அதைப் பற்றி விசாரிக்கிறார்கள். எனவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கிற மக்கள் மீதும் மற்ற படைப்பினங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது

உமர் ரலி அவர்கள் கூறினார்கள் ;  என் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு ஆட்டை ஒரு ஓநாய் அநியாயமாக பிடித்துக் கொண்டாலும் அதைக் குறித்தும் நான் என் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஒரு ஆட்சியாளர் தன் சமூக மக்கள் மீது கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும். அவர்களின் குறையறிந்து குறை தீர்ப்பவராக இருக்க வேண்டும்.

عن عائشة أم المؤمنين:] أتَيْتُ عائِشَةَ أسْأَلُها عن شيءٍ، فَقالَتْ: مِمَّنْ أنْتَ؟ فَقُلتُ: رَجُلٌ مِن أهْلِ مِصْرَ، فَقالَتْ: كيفَ كانَ صاحِبُكُمْ لَكُمْ في غَزاتِكُمْ هذِه؟ فَقالَ: ما نَقَمْنا منه شيئًا، إنْ كانَ لَيَمُوتُ لِلرَّجُلِ مِنّا البَعِيرُ فيُعْطِيهِ البَعِيرَ، والعَبْدُ فيُعْطِيهِ العَبْدَ، ويَحْتاجُ إلى النَّفَقَةِ، فيُعْطِيهِ النَّفَقَةَ، فَقالَتْ: أما إنّه لا يَمْنَعُنِي الذي فَعَلَ في مُحَمَّدِ بنِ أبِي بَكْرٍ أخِي أنْ أُخْبِرَكَ ما سَمِعْتُ مِن رَسولِ اللهِ يقولُ في بَيْتي هذا: اللَّهُمَّ، مَن ولِيَ مِن أمْرِ أُمَّتي شيئًا فَشَقَّ عليهم، فاشْقُقْ عليه، ومَن ولِيَ مِن أمْرِ أُمَّتي شيئًا فَرَفَقَ بهِمْ، فارْفُقْ بهِ.

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்'' என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "வெறுக்கத் தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்'' என்று விடையளித்தேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக் கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். (முஸ்லிம் ; 3732)

2, எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை நிலை அறியாமல் முடிவுவெடுத்து விடக் கூடாது.

3, அந்தப் பறவையின் உணர்வை நாம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே எச்சந்தர்ப்பத்திலும் வணங்கப்பட வேண்டியவன். சூரியனோ, சந்திரனோ, மண்ணோ அல்லது மரமோ வணக்கத்திற்குரியவை அல்ல. இவற்றையெல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன். இதை அந்தப் பறவை அறிந்து வைத்திருந்தது. மக்கள் சூரியனை வணங்குவதை அந்தப் பறவை கூட விரும்பவில்லை என்பதை விளக்க வேண்டும்.

4, இஸ்லாத்தின் சத்திய கொள்கையில் உறுதியுடன் இருப்பதுடன் பிறருக்கும் இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இந்த ஹுத் ஹுத் பறவையிடமிருந்து நாம் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment