அல்லாஹுத்தஆலா மனித வாழ்வை மூன்று பருவங்களைக் கொண்டு அமைத்திருக்கின்றான். 1.குழந்தைப் பருவம் 2.வாலிபப் பருவம் 3.முதுமைப் பருவம்.இதில் ஆற்றலும் வலிமையும் துடிப்பும் உற்சாமும் மிக்க பருவம் வாலிபப் பருவம். அனைவராலும் ஆசை கொள்ளப்படுகின்ற அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒரு பருவம் இளமைப் பருவம். வேகமாக வளர்ந்து வாலிபர்களாக ஆகி விட மாட்டோமா என்று சிறுவர்களும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு அந்த பருவம் வழங்கப்பட மாட்டாதா என்று முதியோர்களும் ஏங்கும் பருவமாக இந்த இளமை பருவம் இருக்கிறது.