Showing posts with label குடியுரிமை. Show all posts
Showing posts with label குடியுரிமை. Show all posts

Wednesday, September 16, 2020

நம் தோல்விக்கான காரணம்

 


                 (குடியுரிமை மசோதா பிரச்சனையின் போது பேசிய உரை)

120 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நாடு இந்தியா. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாடு இந்தியா. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக பலநூறு உலமாக்கள் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரை கொடுத்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் ரத்தத்தினால் தான் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.

Sunday, September 6, 2020

இறைவனை எப்படி நம்ப வேண்டும்

 


        (குடியுரிமைப் பிரச்சனையின் போது பேசிய ஜும்ஆ உரை)

நம் நாட்டில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் மசோதாக்களையும் கருத்தில் கொண்டு இது மாதிரியான சட்டங்களால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதை எதிர் கொள்வதற்கு நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த மாதிரியான சட்டங்களால் நாம் பாதிக்கப்படாமல் வரும் காலங்களில் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற நாமென்ன அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்று சிந்திப்பதும் யோசிப்பதும் காலத்தின் கட்டாயம்.