Showing posts with label சுயமரியாதை. Show all posts
Showing posts with label சுயமரியாதை. Show all posts

Friday, June 28, 2024

சுயமரியாதையை கற்றுத் தந்த இப்ராஹீம் அலை அவர்கள்

இந்த உலகத்தில் இறைவனின் படைப்புக்கள் ஏராளம் உண்டு.மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் படைப்பினங்களை விட மனிதனே கண்ணியமானவன்.உயர்ந்தவன்.