Showing posts with label பாவ மன்னிப்பு. Show all posts
Showing posts with label பாவ மன்னிப்பு. Show all posts

Wednesday, March 19, 2025

தராவீஹ் 19 - அனைத்தையும் பெற்றுத்தர வல்லது

 



قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.

(அல்குர்ஆன் : 38:35)

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

Wednesday, December 18, 2013

பாவ மன்னிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்திலே அல்லாஹ்வின் படைப்புகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1,நன்மை மட்டும் செய்யும் வானவர்கள். 2,பாவம் மட்டும் செய்யும் ஷைத்தான்கள். 3,நன்மையும்,பாவமும் செய்யும் மனிதர்கள். 4,நன்மை,பாவம் இரண்டையும் செய்யத்தெரியாத உயிரினங்கள்.                                                  
இதில் மூன்றாவது வகையாக இருக்கிற நமக்கு அல்லாஹுத்தஆலா பலகீனத்தையும் கொடுத்திருக்கிறான், புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருக்கிறான். நம்மிடம் இருக்கிற பலகீனத்தால் நாம் பாவம் செய்து விடுகிறோம்.ஆனால் நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற புத்திசாலித்தனத்தால் அந்த பாவத்திற்கு பரிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அகிலத்தைப் படைத்த அந்த அல்லாஹ்வின் அன்பைப் பெற்று  விடுகிறோம்.