அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்திலே அல்லாஹ்வின் படைப்புகளை நான்கு
வகையாகப் பிரிக்கலாம். 1,நன்மை மட்டும் செய்யும் வானவர்கள். 2,பாவம் மட்டும்
செய்யும் ஷைத்தான்கள். 3,நன்மையும்,பாவமும் செய்யும் மனிதர்கள். 4,நன்மை,பாவம்
இரண்டையும் செய்யத்தெரியாத உயிரினங்கள்.
இதில் மூன்றாவது வகையாக இருக்கிற நமக்கு அல்லாஹுத்தஆலா பலகீனத்தையும்
கொடுத்திருக்கிறான், புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருக்கிறான். நம்மிடம் இருக்கிற பலகீனத்தால் நாம் பாவம்
செய்து விடுகிறோம்.ஆனால் நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற புத்திசாலித்தனத்தால்
அந்த பாவத்திற்கு பரிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அகிலத்தைப் படைத்த அந்த அல்லாஹ்வின்
அன்பைப் பெற்று விடுகிறோம்.