Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Thursday, March 3, 2022

மகளிருக்கு இஸ்லாம் கொடுத்த மாண்பு

 


ومن كل شيئ خلقنا زوجين لعلكم تذكرون

ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்திருக்கிறோம். அதைக் கொண்டு நீங்கள் உணர்வு பெறுவீர்கள். (அல்குர்ஆன் : 51 ; 49)

உலகில் அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக படைத்திருக்கிறான். வானம் பூமி இரவு பகல், உஷ்ணம் குளிர், சூரியன் சந்திரன், வெற்றி தோல்வி, பாக்கியம் அபாக்கியம், நேர்வழி வழிகேடு, ஈமான் நிராகரிப்பு, மனிதன் ஜின், கடல் திடல், ஒளி இருள், வாழ்க்கை மரணம், சொர்க்கம் நரகம், கஷ்டம் இலகுவானது, நன்மை தீமை, இவ்வாறு அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் ஆணுக்கு ஜோடியாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் பெண்ணைப் படைத்திருக்கிறான். பெண்ணை ஜோடியாக படைத்ததோடு ஆணுக்கு வழங்கியதைப் போன்று அனைத்து விஷயங்களிலும் சம உரிமைகளையும் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் பெண் சமூகத்திற்கும் வழங்கியிருக்கிறான்.

Friday, September 11, 2020

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை

 

மோசமான ஒரு காலகட்டத்தில் மிகவும் ஆபத்தான காலச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.குற்றங்கள் பெருகி விட்ட, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து விட்ட, சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக உரிமை மீரல்கள் மலிவாகி விட்ட, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிப் போன, பெண்ணாகப் பிறந்தவர்கள் இங்கு வாழவே முடியாதோ! சுதந்திரமாக இருக்கவே முடியாதோ! தங்கள் மானங்களை பாதுகாக்கவே முடியோதோ! என்று அஞ்சுகிற அளவுக்கு மோசமான நாடாக இந்திய நாடு உருவெடுத்திருக்கிறது.