Showing posts with label ஸதகத்துல் ஃபித்ர். Show all posts
Showing posts with label ஸதகத்துல் ஃபித்ர். Show all posts

Friday, April 21, 2023

பெருநாள் தர்மம்


அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். பெரும்பாலும் ஒரு மாதத்தில் நான்கு ஜும்ஆக்கள் தான் இருக்கும். ஆனால் இவ்வருடம் ஜும்ஆ தினத்திலிருந்தே ரமலான் தொடங்கியதால் ஐந்து ஜும்ஆக்களை தொழுகும் நஸீபை இறைவன் தந்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்! நன்மைகளை அள்ளித்தரும் ரமலான், பாவங்களை பொசுக்கும் ரமலான், மனித உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் ரமலான், இஸ்லாமியச் சமூகத்தை இறை இல்லங்களோடு இணைக்கும் ரமலான், வணக்கங்களில் இன்பம் காண வைக்கும் ரமலான் நம்மை விட்டும் விடைபெறப் போகிறது. இது ரமலானின் இறுதி நாளாக இருந்தாலும் இது நமக்கு இறுதி ரமலானாக ஆகி விடாமல் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து நம் வாழ்வில் எண்ணற்ற ரமலான்களை சந்திக்கின்ற வாய்ப்பினைத் தருவானாக!