கடந்த வாரம் அடியார்கள் தன்னிடம் துஆ கேட்பதை இறைவன் விரும்புகிறான். பதில் அளிப்பதற்கு காத்திருக்கிறான். துஆ கேட்காதவர்கள் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, August 5, 2021
Thursday, July 29, 2021
நம் சமூகத்தின் பலம் துஆ
நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் சமூகமாக இருக்கக்கூடிய நமக்கு அல்லாஹுத்தஆலா ஏராளமான நிஃமத்துக்களை வாரி வழங்கியிருக்கிறான். நாம் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப்பட்டுக் கொள்ள தகுந்த, காலம் முழுக்க நன்றி செலுத்தினாலும் ஈடுசெய்ய முடியாத ஒப்பற்ற நிமத்துக்கள்
Thursday, July 22, 2021
குர்பானிக்குப் பின்....
அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ? ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
Thursday, July 15, 2021
குர்பானி சொல்லும் செய்தி
உலகத்தில் நமக்கு எத்தனையோ இலட்சியங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கிறது.இவ்விரண்டும் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாதவன் வெற்றி பெற முடியாது.வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன் சாதிக்க முடியாது.
Thursday, July 8, 2021
இறை இல்லங்களின் திறப்பும் நம் உணர்வும்
அல்லாஹுத்தஆலா உலகத்திலே மனிதனைப் படைத்து, அவன் ஒவ்வொரு நேரத்திலும் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு மற்றவர்கள் அவனிடத்திலே நடந்து கொள்வதற்கும் அவன் தன்னை சரி செய்து கொண்டு அடுத்த நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கும் எண்ணற்ற உணர்வுகளை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
Thursday, April 22, 2021
பாவங்கள் சாதாரணமானதல்ல...
உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும் அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான்.
Thursday, April 15, 2021
Thursday, April 8, 2021
நோன்பு சிறந்த மருத்துவம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.பாக்கியம் நிறைந்த அந்த ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவானாக!
Thursday, April 1, 2021
கறை நல்லது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிற, களத்தில் நிற்கிற அத்தனை கட்சிகளும் தீவிரமான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிற இவ்வேளையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வும் தேர்தல் தொடர்பான மார்க்கத்தின் பார்வையும் ஷரீஅத்தின் வழிகாட்டுதலும் நமக்கு வேண்டும்.
Sunday, March 28, 2021
பராஅத் பித்அத்தா ?
அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஒரு இரவில் அல்லாஹ்வின் இறை இல்லத்தில் ஒன்று கூடக்கூடிய பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பாக்கியத்தைக் கொடுத்த வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
Thursday, March 25, 2021
நம் ஓட்டு யாருக்கு ?
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆளும் கட்சி எதையாவது ஒன்றை செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது புதிய ஆட்சி அமையுமா என்று அனைவரும் தேர்தல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற பரபரப்பான இவ்வேளையில் தேர்தல் குறித்த ஒரு சில செய்திகளை பார்க்கலாம்.
Thursday, March 18, 2021
தேர்தல் வாக்குறுதிகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
Thursday, March 11, 2021
நல்லோர் சகவாசம்
உலகில் வாழுகின்ற மனிதர்களில் பெரும்பாலும் எவரும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. பிறருடன் சேர்ந்து வாழ்வதையும் பிறருடன் சேர்ந்து இருப்பதையும் தான் நாம் விரும்புகிறோம். அவ்வாறு சேர்ந்து இருப்பதில் தான் மகிழ்ச்சியும் இருக்கிறது.
Thursday, March 4, 2021
பரக்கத் வேண்டுமா
والبَرَكَة تعني تكاثرَ الخير ونمائه واستقراره
واستمراره
நலவு அதிகமாகுதல், வளர்ச்சியடைதல், தரிபட்டிருத்தல், நீடித்திருத்தல் என்பது பரக்கத் என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் அர்த்தங்களில் ஒன்று. (அல்முஃஜமுல் வஸீத் ; 49)
Thursday, February 25, 2021
இது தான் பரக்கத்
நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.
Thursday, February 18, 2021
ஆயுத முனையை நீக்கக்கூடிய மாதம்
அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் புனிதம் நிறைந்த கண்ணியம் நிறைந்த மாதங்கள் என்று சொல்லப்படுகிற நான்கு மாதங்களில் ரஜபும் ஒன்று.
Thursday, February 11, 2021
நபியைத் திட்டினால்.....
ஷரீஅத்தின் பார்வையில் நபி ஸல் அவர்களுக்கு தன் கரங்களால் தன் சொற்களால் தன் செயல்களால் நோவினைகள் கொடுப்பவர்களின் நிலை என்ன ? அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடாக அவன் கொடுத்த தண்டனைகள் என்ன என்பதைப் பார்க்க இருக்கிறோம்.
Friday, February 5, 2021
குறை காண முடியாதவர்கள்
கடந்த 31 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கல்யாண ராமன் உலகத்தில் வாழும் 200 கோடி மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கின்ற அனைவரோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, உலகத்தார் அனைவராலும் பாராட்டப்படுகின்றன போற்றப்படுகின்ற உயிரினும் மேலாக மதிக்கிற நம் நபி ﷺ அவர்களை அவதூறாக கேவலமாக இழிவு படுத்தும் முகமாக கொச்சை படுத்தும் முகமாக உலகத்தில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் படியான விஷமத்தனமான வார்த்தைகளை பேசியது நாம் அறிந்த விஷயம்.
Thursday, January 28, 2021
பொதுநலம்
கடந்த வாரம் குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களாட்சி எப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு ஆட்சி செய்யக்கூடியவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் போது ஆட்சியாளர்கள் குடிமக்கள் மீது இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு நலவை நாடுபவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நலனில் அக்கரை செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் அதன் தொடராக ஒரு சில விஷயங்கள இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.
Thursday, January 21, 2021
குடியரசு தினம்
புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நாடு தன்னுடைய 72 வது குடியரசு தின விழாவை விமர்சையாகக் கொண்டாடுவதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் குடியரசு தினத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் குடியரசு என்றால் என்ன ? ஜனவரி 26 க்கும் குடியரசுக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாத்தின் பார்வையில் குடியரசை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.















