Saturday, August 22, 2020

தூக்கத்தில் திடுக்கிட்டால்

 


اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَحْضُرُوْنَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் கழபிஹி வ இகாபிஹி வ ஷர்ரி இபாதிஹி வ மின் ஹமஜாத்திஷ் ஷயாதீனி வ அய் யஹ்ளுரூன்.

பொருள்

அல்லாஹ்வின் கோபத்தை விட்டும் அவனது தண்டனையை விட்டும் அவனது அடியார்களின் தீங்குகளை விட்டும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை விட்டும் அவன் என்னிடம் வருவதை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வின் கலிமாக்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

 

إذا فَزِع أحدُكم في النومِ فلْيَقُلْ أعوذُ بكَلِماتِ اللهِ التامَّاتِ من غضبِهِ وعقابِهِ وشرِّ عبادِهِ ومن هَمَزاتِ الشياطينِ وأن يَحْضُرون فإنها لن تَضُرَّه فكان عبدُ اللهِ بنُ عمرٍو يُلَقِّنُها من بلغ من ولدِهِ ومن لم يَبْلُغْ منهم كتبها في صَكٍّ ثم عَلَّقَها في عُنُقِهِ

உங்களில் ஒருவர் (கெட்ட கனவு எதுவும் கண்டு) தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டால் இதை ஓதிக் கொள்ளட்டும். அந்தக் கனவு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.

நூல்             : திர்மிதி

அறிவிப்பாளர்  : அமர் {ரலி} அவர்களின் பாட்டனார்.

பக்கம், ஹதீஸ் எண் : 3528

No comments:

Post a Comment