Showing posts with label தன்நிறைவு. Show all posts
Showing posts with label தன்நிறைவு. Show all posts

Monday, September 27, 2021

ஹதீஸ் எண் 26 من يستعفف يعفه الله

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِي اللَّهم عَنْهم إِنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ )) (صحيح البخاري)

அன்சாரிகளில் சிலர் நபியிடத்தில் வந்து உதவி கேட்டார்கள். நபியவர்கள் அவர்களுக்குக் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போதும் கொடுத்தார்கள். மீண்டும் கேட்டார்கள். அப்போது நபியவர்கள் கொடுத்தார்கள். கடைசியாக அவர்கள் இடத்தில் இருந்து காலியாகி விட்டது. அப்போது என்னிடத்தில் உள்ள நலவானது எதையும் நான் உங்களுக்குத் தராமல் சேமித்து ஒளித்து வைக்க மாட்டேன். யார் பேணுதலாக நடக்கிறாரோ அவரை அல்லாஹ் பேணுதல் உள்ளவராக ஆக்கி விடுவான். யார் தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை தேவையற்றவராக ஆக்கிவிடுவான். யார் பொறுமையை மேற் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளர்களாக ஆக்கி விடுவான். பொறுமையை விட மிக விசாலமான சிறந்த கொடை எதையும் யாரும் வழங்கப்படுவதில்லை. (புகாரி ; 1469)