(குடியுரிமை மசோதா பிரச்சனையின் போது பேசிய உரை)
120 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நாடு இந்தியா. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாடு இந்தியா. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக பலநூறு உலமாக்கள் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரை கொடுத்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் ரத்தத்தினால் தான் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.
