நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் வாழ்க்கை
நெறியாக தீனுல் இஸ்லாத்தை நமக்களித்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் உலகிற்கு சொன்ன
கருத்துக்களும் இவ்வையகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும், நிகழ்த்திய சாதனைகளும்,
செய்த புரட்சிகளும் அசாதாரணமானவை. இஸ்லாம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சிகளில்
ஒன்று உலகில் மனிதனாய் பிறந்த அனைவரும் சமம், யாரும் யாருக்கும் அடிமையல்ல,
சுதந்திரமாக வாழுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பது.ஒரு மனிதன் சட்டம்,
நீதி போன்றவற்றுக்கு முரண்படாத
வகையிலும், இறைவனுக்கு மாற்றம் செய்யாத வகையிலும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத
அமைப்பிலும், தான், நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமைக்கு சுதந்திரம்
எனறு கூறப்படும். அந்த சுதந்திரத்தை மனிதனுக்கு இஸ்லாம் முழுமையாக வழங்கியுள்ளது.