Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Friday, August 4, 2023

யார் சாத்தானின் பிள்ளைகள் ?

 

ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப் படுகின்ற மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று பாதுகாப்பு.உயிர், உடமைகள்,பொருளாதாரம்,மானம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனிதன் எதிர் பார்க்கிறான்.காரணம் அதில் தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தும் ஒருவருக்கிருந்தும் அமைதியான வாழ்க்கையும், பாதுகாப்பான சூழலும் இல்லையென்றால் அவரால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போய் விடும்.

Thursday, May 11, 2023

விபத்துக்களும் பாதுகாப்பு வழிமுறைகளும்

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அவசர யுகத்தில் பரபரப்பான சூழலில் பயணங்கள் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. படிப்பிற்காக, தொழிலுக்காக, குடும்பத்தின் அலுவல்களுக்காக, சொந்த காரியங்களுக்காக அல்லது சமூகக் காரியங்களுக்காக, சுகத் துக்கங்களுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, இப்படி ஒவ்வொரு நாளும் நாம் பயணம் மேற்கொள்கிறோம். மனிதர்களும் மனிதர்கள் மேற்கொள்கிற பயணங்களும் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் வாகனங்களும் பெருத்து விட்டது.