அல்லாஹுத்தஆலா மனித சமூகத்திற்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று ஆரோக்கியம்.
அல்லாஹுத்தஆலா மனித சமூகத்திற்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று ஆரோக்கியம்.
உலகில் வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்கும் தான் சார்ந்திருக்கிற துறைகளில் தடம் பதிக்க வேண்டும். தான் செய்கின்ற காரியங்களில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் உயர்வை அடைய வேண்டும். உச்சத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறைந்திருக்கும்.
அல்லாஹுத்தஆலா உலகில் நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது, இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது, செயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தைக் கொண்டது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு மிகவும் பிரதானமானது அவனது இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் தான். இறை விசுவாசம் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத் திற்கு பிறகு தான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தையே பெறுகிறது.
அல்லாஹ்வின் பேரருளால் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம் சமூகம் என்றைக்கும் மறக்காத மறக்க முடியாத மறக்கக்கூடாத ஒரு மகத்தான நாளை நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆம் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா தினம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதத்தை அடுத்து மிகச்சிறந்த நோன்பு என்றால் அது, முஹர்ரம் மாதத்தில், குறிப்பாக இந்த ஆஷுரா தினத்தில் நோற்கும் நோன்பு என்று மார்க்கம் கூறுகிறது.
உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று கல்வி. கல்வி தான் மனிதனை மனிதனாக்கும், மனித நேயமுள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்து கொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். கல்வியின்றி ஒரு மனிதன் நிச்சயம் முழுமை பெற மாட்டான். அதனால் தான் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.
அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில் நாம் அமர்ந்திருக்கிறோம். நாளைய தினம் அரஃபா என்ற மகத்தான நாள். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய, பரிமார வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.
நாட்டில் நடக்கிற அநீதங்களையும் அக்கரமங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிற அடக்குமுறைகளையும் கடந்த வாரம் நாம் அலசினோம். இவ்வாறு அநீதங்களும் அக்கரமங்களும் அடக்குமுறைகளும் நடக்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிறோம். இதுமாதிரியான நேரங்களில் நாம் நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நாம் பாவங்களை குறைத்துக் கொண்டு செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு ஏற்படும் அத்தனை சோதனைகளுக்கும் காரணம் நம் பாவங்கள் தான்.
இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.
கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 2:29)
சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை நமக்கு நன்றாக தெரியும். கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மதக்கலவரங்கள், எல்லாம் தனியார் மயமாக்கப்படுவது என்று நிர்வாக ரீதியாக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தனது தோல்வியை மறைப்பதற்காகவும், RSS- ன் அஜென்டாவை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களோடு கைகோர்த்து மத்திய பாஜக அரசு மதப்பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. RSS- ன் மிக முக்கியமான அஜென்டாவே இஸ்லாமிர்களைத் தீண்டி அவர்களை கொதிப்படையைச் செய்வதும் அவர்கள் உயிராக மதிக்கின்ற ஷரீஅத்தில் கை வைப்பதும் அவர்களின் முக்கிய அடையாளச் சின்னங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதும் தான்.
ஷவ்வால் மாதத்தினுடைய 2 வது ஜும்ஆ இது.ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது.
அல்லாஹ்வின் பேருதவியால் மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களைச் செய்த மகிழ்ச்சி யிலும் திருப்தியிலும் நாம் இருக்கிறோம்.ரமலான் முடிந்திருக்கிற இந்த வேளையில் நம் சிந்தனையும் மனோநிலையும் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
(இன்றுடன் தராவீஹ் குறிப்புகளை நிறைவு செய்கிறேன். இது வரை நான் பதிவிட்ட குறிப்புகளைப் பார்த்து எனக்காக துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான துஆவில் என்றைக்கும் என்னை மறந்து விட வேண்டாம்)
عَبَسَ وَتَوَلّٰٓىۙ
(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார்.
(எதற்காக?) (அல்குர்ஆன் : 80:1)
اَنْ جَآءَهُ الْاَعْمٰى
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (அல்குர்ஆன் : 80:2)
ما سلككم في سقر قالوا لم نك
من المصلين
அவர்கள் சுவனத்தில் இருந்து கொண்டு குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது என்று கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழ வில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் ; 74 : 40,41)
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا
يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ
அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 64:17)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا
نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً ذٰ لِكَ
خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:12)
(நேற்று கொஞ்சம் வேலைப் பழுவினால் குறிப்புகள் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அனைத்து உலமாக்களும் உங்கள் மேலான துஆவில் அடியேனையும் இணைத்துக் கொள்ளுங்கள்.)
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ
مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)
وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ
شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون
அவர்கள் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்கு அளித்த வற்றிலிருந்து செலவு செய்வார்கள். [அல்குர்ஆன் : 42 ; 38]