Sunday, April 17, 2022

எறும்பிடத்தில் நாம் பாடம் கற்க வேண்டும்

 

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்த பொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்து விட வேண்டாம்" என்று கூறியது. (அல்குர்ஆன் : 27:18)

குர்ஆனில் அல்லாஹ் கூறியிருக்கிற ஒவ்வொரு பிராணிகளிடமும் எண்ணற்ற படிப்பிடைகள் இருக்கிறது. அந்த வகையில் எறும்பு என்ற அத்தியாயத்தை அல்குர்ஆனில் அல்லாஹ் இடம் பெறச் செய்து அந்த எறும்பு தன் சக எறும்புகளோடு பேசிக் கொண்டதையும் பிராணிகள் பறவைகளின் பாஷைகளை அறிந்து அவர்களோடு பேசும் ஆற்றலைப் பெற்ற சுலைமான் அலை அவர்கள் அதைப் பார்த்து சிரித்ததையும் அதில் பதிவு செய்திருக்கிறான்.

இந்த வசனத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு சில செய்திகள் உண்டு.

1, எறும்பு ஓடை - புற்று

எறும்புகள் குறித்து இந்நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் எறும்புகளின் புற்றுகளின் அடியில் ஒரு நகரமே அமைந்திருப்பதாக கூறுகிறது. இந்த நகரம் 50 சதுர.மீ பரப்பளவும், 8 மீ ஆளம் கொண்டதாகவும், அதாவது ஒரு சிறிய பள்ளதாக்காக இருப்பதை அந்த ஆவணத்தில் காண முடிகிறது. கிட்டத்தட்ட 40 டன் மண்ணை அந்த எறும்புக்கூட்டம் வெளியே எடுத்து அந்த புற்றை அமைத்துள்ளது. மேலும் அந்த நகரத்தில் தோட்டங்கள், சாலைகள், உணவு கிடங்குகள் என்று பல பகுதியாக பிரிக்கப்பட்டு திறம்பட பயன்டுத்துவதற்கு ஏதுவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வைக் குறிக்கும் விதமாகத்தான் அந்த வசனத்தில் அல்லாஹ் எறும்புகளின் இருப்பிடத்தை குறிக்க وَادِ النَّمْلِ  (வாதில் நம்ல்) - எறும்புகளின் பள்ளத்தாக்கு என்ற சொல்லை பயன்படுத்துகிறான்.

2, எறும்பின் பேச்சு

சமிபகால ஆய்வுகள் எறும்புகள் சத்தத்தின் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் செய்வதாக குறிப்பிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் Stridulation  என்று அழைப்பார்கள். இது பூச்சி இணங்கள் தங்களது உடல் உறுப்புகளை அதிர்வடையச் செய்வதின் மூலமும் உறுப்புகள் ஒன்றை ஒன்று  உராய்வதினாலும் ஏற்படுத்தும் சத்தமாகும். மனிதர்கள் எப்படி தங்களது குறள்வளைகளின் மூலம் ஓலியை எழுப்புகிறோமோ, அதே போன்று எறும்புகள் தங்களது வயிற்றுப்பகுதியில் இருக்கும் ப்லெக்ட்ரம்(Plectrum) என்ற பகுதியை அதிரச் செய்வதன் மூலம் சத்ததை உற்பத்தி செய்கின்றன. இதனை ஹெர்மான் லேண்டாய்ஸ் என்ற ஜெர்மன் அறிஞர் 1874ல் தான் வெளியிட்ட Theirstimmen என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார்.

மேலும் எறும்புகளின் வயிற்று பகுதியில் மெல்லிய அரம் போன்ற அமைப்புகளால் அவை சத்தத்தை எழுப்புவதாக அறிவியலாளரான வில்லியம் மார்டான் வீலர் தனது புத்தகமான (P.No:26 "Ants: Thier Structure Development and Behaviour)(1) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  ஒவ்வொரு பூச்சிகள் அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன. அதே போல் ஒவ்வொரு வகை எறும்புகளும்  அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன.

இவ்வாறாக எறும்புகள் தங்களுக்குள் எழுப்பும் சத்தம் கிட்டதட்ட 1KHz வரை உடையாதாக இருக்கிறது. இந்த சத்தங்களை எறும்புகள் தங்களது ஆண்டனாக்களின் மூலமும், கால்களில் உள்ள மெல்லிய முடிகளின் மூலமாகவும் அறிந்து கொள்கின்றன.

இதன்மூலம் பல மீட்டர் தொலைவில் உள்ள தனது இணத்தாருக்கு தகவலை தெரிவிப்பதாக கணடறியப்பட்டது. அதிலுள்ள ஒரு எறும்பு   தான் கண்டறிந்த உணவின் தரத்தை தனது வேலைகார எறும்புகளுக்கு இவ்வாறு தான் தெரிவிக்கின்றது.

சுலைமான் அலை அவர்களும் அவர்களின் வரும் செய்தியை ஒரு எறும்பு மற்ற எறும்புகளுக்கு கூறியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் பதிவு செய்திருக்கிறான்.

3, பெண் எறும்பு

பெண் எறும்புகள் தான் வேலை செய்யும் எறும்புகள் என்பதும் வேலை செய்யும் எறும்புகளில் ஒரு பிரிவு எறும்புகள் தான் மேற்பார்வை பணியை செய்கின்றன என்பதும் இன்றைய கண்டுபிடிப்பு. மேற்கூறப்பட்ட வசனத்தில் கட்டளையிட்ட எறும்பு குறித்து கூறும் போது نملة என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியிருக் கிறான். நம்லத் என்றால் பெண் எறும்பு என்று பொருள்.

4, தன் இனத்தைக் காக்கும் எறும்பு

எறும்புகளுக்கு தன் இனத்தைக் காக்க வேண்டும்,வாழ வைக்க வேண்டுமென்ற சமூக சிந்தனையும் உண்டு.உணவிருக்கும் இடம் ஒரு எறும்புக்கு தெரிந்து விட்டால் மற்ற எறும்புகளையும் அழைத்து வந்து அவ்வுணவுப் பொருட்களை சாப்பிடும்.பிறகு எஞ்சியதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை அறிகிறோம். சுலைமான் அலை அவர்களும் அவர்களின் படையும் உங்களை மிதித்து விடுவார்கள். நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள் என்று தலைமை எறும்பு தன் சக எறும்புகளை உணர்த்தியதாக அல்லாஹ் கூறுகிறான்.

சின்னஞ் சிறிய பிராணிகளிடம் கூட மனிதனிடம் இல்லாத நேயங்களும், இனம் காக்கும் உணர்வுகளும் அதிகம் இருக்கிறது. தன் இனம் வாழ வேண்டும், அது அழிந்து விடக்கூடாது என்ற கவலையும்,சமுதாய சிந்தனையும் அந்த எறும்புக்கு இருந்த காரணத்தினால் தான்  அந்த நிகழ்வை உலகத்திருமறை அல்குர்ஆனில் அல்லாஹ் பதிவு செய்ததோடு அதன் பெயரில் ஒரு அத்தியாயத்தை இறக்கி வைத்துள்ளான்.

இன்றைக்கு பொதுநலம் சமுதாய சிந்தனை அதிகம் பேரிடம் இருப்பதில்லை. அனைவரிடம் சுயநலம் தான் மிகைத்திருக்கிறது. இன்றைக்கு நாட்டில் நடக்கிற தவறுகள், குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம் இந்த சுயநலம் தான். மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை, மற்றவர்களது வாழ்க்கை அழிந்து போனாலும் பரவாயில்லை, தான் நல்லா இருக்க வேண்டும்,தன் ஆசை நிறைவேற வேண்டும் என்ற சுயநலச் சிந்தனையால் தான் அனைத்து தவறுகளும் நடக்கிறது.இப்படி எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களிலும் சுயநலம் பெருகி விட்டதை நாம் பார்க்கிறோம்.

இஸ்லாம் இந்த சுயநலத்தை வன்மையாக கண்டிக்கிறது.ஒரு முஸ்லிம் என்றைக்கும் சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு வாழ வேண்டும், தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும், தனக்கு பயன் தரும் விதத்தில் மட்டும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் பயன் தரும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பொறுப்பில் இருக்கும் தலைவர்களிடம் அவசியம் இந்த பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

நபி  அவர்கள் நபித்துவத்திற்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு தேவையான வேலைகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.மக்களும் அவர்களை நம்பி தங்கள் பொருள்களையும் வேலைகளையும் கொடுத்தார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பது , அவர்களுக்கு பாதுகாப்பு தருவது, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது, அநியாயம் செய்யப்பட்டோருக்கு உதவி செய்வது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்ட  ஒரு சங்கத்திலும் அவர்கள் உறுப்பினராக இருந்தார்கள். அதில் கலந்துக்கொள்வது தனக்கு பிரியம் என்றும் சொன்னார்கள்.


عقد "حلف الفضول" قبل البعثة النبوية بسنوات، وشهده محمد -صلى الله عليه وسلم- قبل النبوة، وكان الزبير بن عبدالمطلب أول من دعا إليه،

أن رجلا من زبيد (بلد باليمن) قدم مكة ببضاعة فاشتراها منه العاص بن وائل ومنعه حقه، فاستعدى عليه الزبيدي أشراف قريش فلم يعينوه لمكانة العاص فيهم، وقف الرجل عند الكعبة واستغاث بآل فهر وأهل المروءة، فقام الزبير بن عبد المطلب فقال: ما لهذا مترك، فاجتمعت بنو هاشم وزهرة وبنو تَيْم في دار عبد الله بن جدعان فصنع لهم طعاما، وتحالفوا في شهر حرام وهو ذو القعدة، فتعاقدوا وتحالفوا بالله ليكونُنّ يدًا واحدة مع المظلوم على الظالم حتى يُرد إليه حقه فسمّت قريش ذلك الحلف «حلف الفضول» وقالوا: لقد دخل هؤلاء في فضل من الأمر، ثم مشوا إلى العاص بن وائل، فانتزعوا منه سلعة الزبيديّ، فدفعوها إليه

யமன் நாட்டின்ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். மக்காவின் பனூ ஸஹ்ம் கோத்திரத்தைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் என்பவர் அந்த யமன்வாசியிடமிருந்து சில பொருட்களை விலை பேசி வாங்கிக் கொண்டு அதற்கான தொலையைக் கொடுக்க மறுத்து விட்டார். பறிகொடுத்தவர் தனது நட்புக் கோத்திரத்தார்களான பனூ அப்துத் தார்பனூ மக்ஜூம்பனூ ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்ட போது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே மதித்திட வில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை உரத்த குரலில் முறையிட்டார். அங்கிருந்த  அண்ணலாரின் பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிப் – “ஏன் இவர் இவ்வாறு கைவிடப்பட்டார்?” எனக் கேட்டார்கள்.

இந்தப் பின்னணியில் தான் ஹில்ஃபுல் ஃபுளூல்’ எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த  ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட  குறைஷி கோத்திரத்தவர்கள் - பனூ ஹாஷிம்பனூ முத்தலிப்பனூ அஸத்பனூ ஜுஹ்ராபனூ தைம் ஆகியோர் ஆவர்.

அனைவரும் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ என்ற பெரியவர் ஒருவரின் வீட்டில் ஒன்று கூடினர்.  அநீதி இழைக்கப்படுபவர் எவராயினும்அவருக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனும் உடன்படிக்கை அங்கே  அப்போது உருவானது. இவ்வுடன்படிக்கையில் நபி  அவர்களும் கலந்து கொண்டார்கள்.  அதன் பின் அந்த யமன்வாசியின் உரிமை மீட்டுத் தரப்பட்டது. (சீரத்து இப்னு கஸீர் ; 1/257)

இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபி  அவர்கள் கூறினார்கள்:

شهِدتُ -غُلامًا- مع عُمومَتي حِلفَ المُطَيَّبينَ، فما أُحِبُّ أنَّ لي حُمرَ النَّعَمِ، وأنِّي أنكُثُهُ

வாலிபனாக இருக்கும் நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை முறித்து விட்டு எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைக்கூட நான் விரும்ப மாட்டேன். (முஸ்னத் அஹ்மது 3 /136)

سيد القوم خادمهم

ஒரு சமூகத்தின் தலைவன் அந்த சமூக மக்களின் பணியாளன் சேவகன். (அல்ஜாமிவுஸ் ஸகீர் 1/481)

ஒருவர் ஒரு உதவி என்றாலோ அல்லது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே முன்னால் வந்து நிற்பது நபி  அவர்கள் தான்.

وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة، فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على 

أبي جهل، وهنا وجد الكفار فرصة للتسلية والضحك والسخرية من رسول الله صلى الله عليه وسلم، فأمروا الرجل أن يذهب إلى الرسول صلى الله عليه وسلم ليأخذ له حقه، فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم، وأخذوا ينظرون إليه ليروا ما سيحدث، فقام النبي صلى الله عليه وسلم مع الرجل ليعيد له حقه من أبي جهل، فأرسلوا وراءه أحدهم؛ ليرى ما سوف يصنعه أبوجهل مع رسول الله صلى الله عليه وسلم، فذهب الرسول صلى الله عليه وسلم إلى بيت أبي جهل، وطرق بابه، فخرج أبو جهل من البيت خائفًا مرتعدًا، وقد تغير لونه من شدة الخوف، فقال له رسول الله صلى الله عليه وسلم: (أعطِ هذا الرجل حقه) فرد أبو جهل دون تردد: لا تبرح حتى أعطيه الذي له، ودخل البيت مسرعًا، فأخرج مال الرجل، فأخذه، وانصرف.

وعندما أقبل أبو جهل على قومه بادروه قائلين: ويلك! ما بك؟ فقال لهم: والله ما هو إلا أن ضرب عليَّ وسمعت صوته فملئت منه رعبًا، ثم خرجت إليه، وإن فوق رأسه لفحلا من الإبل ما رأيتُ مثلَه قط، فوالله لو أبَيتُ لأكلني. [البداية والنهاية

இராஷ் என்ற ஊரிலிருந்து ஒரு வியாபாரி மக்கா நகருக்கு வந்திருந்தார். அபூஜஹ்ல் அவரிடமிருந்து ஒரு ஒட்டகத்தை வாங்கி விட்டு அதற்கான விலையை தராமல் அநீதம் செய்து விட்டான். அதனால் மக்காவில் இருக்கிற முக்கிய தலைவர்களை சந்தித்து தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிட்டார். நபியவர்களை கேலி செய்வதற்கும் பரிகாசம் செய்வதற்கும் அவகாசத்தை தேடிக்கொண்டிருந்த மக்கா வாசிகளுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே மக்காவாசிகள் அந்த வியாபாரியை நபியிடத்தில் சென்று நீ முறையீடு. அவர் உனக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பினார்கள். அவரும் நபியிடத்தில் சென்றார். அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஒருவரையும் அவருக்கு பின்னால் அனுப்பி வைத்தார்கள். அந்த வியாபாரி தனக்கு நடந்ததை நபியிடத்தில் எடுத்துச் சொன்னதும் நபியவர்கள் அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு அபூஜஹ்லின் வீட்டிற்கு சென்றார்கள். சென்று அவனுடைய வீட்டின் கதவைத் தட்டி தன் குரலை எழுப்பினார்கள். நபியின் அந்த கம்பீரமான குரலைக் கேட்டவுடன் முகமெல்லாம் மாறியவனாக உடல் நடுங்கியவனாக பயந்த நிலையில் வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் நபியவர்கள் இவனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு என்று சொன்னார்கள். உடனே அபூஜஹ்ல்  இங்கேயை நில்லுங்கள். நான் எடுத்து வருகிறேன் என்று சொல்லி வேகமாக சென்று அந்த ஒட்டகத்திற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த வியாபாரியிடத்தில் கொடுத்தான். மக்காவாசிகள் அனுப்பிய அந்த மனிதர் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து விட்டு நடந்ததை மக்காவாசிகளிடத்தில் வந்து சொன்னார். உடனே அவர்கள் அபூஜஹ்லை அழைத்து, உங்களுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களிடத்திலே நபியை அனுப்பியக் காரணமே, அவரிடம் நீ ஏதாவது சொல்ல வேண்டும். அதைப் பார்த்து நாங்கள் சிரிக்க வேண்டும். அவர்களை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவருடைய குரலைக் கேட்டவுடன் என் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. மட்டுமல்ல அவருடைய தலைக்கு மேல் நான் ஒரு ஒட்டகத்தைப் போன்ற ஒரு தோற்றத்தை பார்த்தேன். இதுவரை அதைப்போன்ற ஒட்டகத்தை நான் கண்டதில்லை. ஒருவேளை நான் கொடுக்காமல் மறுத்திருந்தால் என்னை அது கடித்து சாப்பிட்டு விடுவோ என்று நான் பயந்தேன் என அபூஜஹ்ல் கூறினான். (அல்பிதாயா வன்நிஹாயா)

இந்த பொதுநலச்சிந்தனை நமக்கு எறும்புகள் கற்றுத் தருகிறது.

5, எறும்பின் நல்லெண்ணம்

சுலைமான் அலை அவர்களும் அவர்களின் படையும் மிதித்து விடுவார்கள் என்று கூறும்போது வேண்டுமென்றே என்றோ அநியாயமாக என்றோ அந்த எறும்பு கூறாமல் அறியாமல் மிதித்து விடுவார்கள் என்று கூறியது. பிறரின் மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும் என்பதை எறும்பிடத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

 

2 comments:

  1. ماشاءاللہ ماشاءاللہ ماشاءاللہ sariyana nerattil kidaitta uru bayan

    ReplyDelete
  2. جزاك اللهُ‎

    ReplyDelete