கண்மனி ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் தடுத்த விஷயங்களை சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
1. குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல்
சாப்பிடுவதை தடுத்தார்கள்.
2. பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும் நிழல் தரும்
மரங்களுக்கு கீழும் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள்.
3. இடது கரத்தால் சாப்பிடுவதை தடுத்தார்கள்.
4. பெண்கள் ஜனாசாவைத் பின் தொடர்வதை தடுத்தார்கள்.
5. உயிரினங்களை நெருப்பால் கரிப்பதை தடுத்தார்கள்.
6. பிறர் மார்க்கத்தை திட்டுவதை தடுத்தார்கள்.
7. குப்பை இருக்குமிடத்தில் தங்குவதை தடுத்தார்கள்
8. கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி
வெளியேறுவதை தடுத்தார்கள்.
9. ஒரு பெண் தன் கணவர் அல்லாத பிறருக்காக
அலங்கரிப்பதை தடுத்தார்கள்.
10. புறம் பேசுவதையும் அதைக் கேட்டு மகிழ்வது
தடுத்தார்கள்.
11. வெள்ளி தங்கத்திலான பாத்திரத்தில் நீர்
அருந்துவதை தடுத்தார்கள்.
12. மதுவையும் அது
தொடர்புடைய குற்றங்களையும் தடுத்தார்கள்.
அல்லாஹ்வும்
ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ
அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக
கண்மனி
ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் தடுத்த விஷயங்களை சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
1. உயிரினங்களின் முகத்தில் அடிப்பதைத் தடுத்தார்கள்.
2. பிறரின்
மறைவிடத்தை பார்ப்பதை தடுத்தார்கள்
3. உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள்.
4. மிருகங்கள் கட்டி போடப்படும் இடத்தில் தொழுவதை
தடுத்தார்கள்.
5. தேனீக்களை கொல்வதை தடுத்தார்கள்.
6. அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம்
செய்வதை தடுத்தார்கள்.
7. வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி குத்பா
ஓதுகின்ற போது பேசுவதை தடுத்தார்கள்.
8. சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும்
நேரத்திலும் உச்சியில் இருக்கும் நேரத்திலும் தொழுவதை தடுத்தார்கள்.
9. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அய்யாமுத்
தஷ்ரீக் இந்த நாட்களில் நோன்பு வைப்பதை தடுத்தார்கள்.
10. மிருகங்கள் நீர் குடிப்பது போன்று ஒரேயடியாக
மூச்சு விடாமல் குடிப்பதை தடுத்தார்கள்.
11. மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றில் உமிழ்வதை தடுத்தார்கள்
12. வட்டியையும்
அது தொடர்புடைய குற்றங்களையும் தடுத்தார்கள்.
அல்லாஹ்வும்
ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ
அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக
No comments:
Post a Comment