Thursday, December 22, 2022

இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கூலியா ?

 

அல்லாஹுத்தஆலா பூமியில் மனிதனைப் படைத்து மனித வாழ்க்கைக்குத் தேவையான மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான அனைத்தையும் அவனே வழங்கியிருக்கிறான். பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் ரப்புல் ஆலமீன் தந்தவை. உண்ணும் உணவு, தங்கும் இருப்பிடம், உடுத்தும் உடை,செலவழிக்கும் பணம், அறிவு,ஆற்றல்,திறமை,நம் பேச்சு முதல் மூச்சு வரை அனைத்தும் இறைவன் அளித்தவை. நம் கையில் இருப்பவை அனைத்தும் நம் உடமை அல்ல, இறைவுடைமை. இந்த சிந்தனை நமக்கு வேண்டும்.

Thursday, December 1, 2022

இஸ்லாம் கூறும் அடிமை ஒழிப்பு திட்டம்

 

நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை நமக்களித்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் உலகிற்கு சொன்ன கருத்துக்களும் இவ்வையகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும், நிகழ்த்திய சாதனைகளும், செய்த புரட்சிகளும் அசாதாரணமானவை. இஸ்லாம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சிகளில் ஒன்று உலகில் மனிதனாய் பிறந்த அனைவரும் சமம், யாரும் யாருக்கும் அடிமையல்ல, சுதந்திரமாக வாழுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பது.ஒரு மனிதன் சட்டம், நீதி போன்றவற்றுக்கு முரண்படாத வகையிலும், இறைவனுக்கு மாற்றம் செய்யாத வகையிலும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத அமைப்பிலும், தான், நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமைக்கு சுதந்திரம் எனறு கூறப்படும். அந்த சுதந்திரத்தை மனிதனுக்கு இஸ்லாம் முழுமையாக வழங்கியுள்ளது.

Thursday, November 24, 2022

குளிர்காலம் பாரமல்ல, பாக்கியம்

 

அல்லாஹுத்தஆலா தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்கு இவ்வுலகில் எண்ணற்ற அத்தாட்சிக்களை வைத்திருக்கிறான். அந்த அத்தாட்சிக்களை சிந்தித்து அவனுடைய வல்லமை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நமக்குக் கட்டளையிடுகின்றான். படைத்தோனின் வல்லமையை நமக்கு புரிய வைக்கும் அத்தாட்சிக்களில் ஒன்று தான் பருவ காலங்கள்.

Friday, November 18, 2022

மனிதர்களில் சிறந்தவர் யார் ?

 

வருடந்தோறும் நவம்பர் 19 ம் தேதி INTERNATIONAL MENS DAY தேசிய ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.அல்லாஹுத்தஆலா மனிதர் களில் ஆண் பெண் என்ற இரு பாலினத்தைப் படைத்திருக்கிறான். பேச்சுக்களில் தன்மைகளில் நடைமுறைகளில் பழக்க வழக்கங்களில் ஆண்,பெண் இருவருக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு சில மார்க்க சட்ட திட்டங்களில் கூட இருவருக்கும் வித்தியாசங்கள் இருப்பதை நாம் காணலாம். ஆண்,பெண் இரு பாலர்களில் பொதுவாக ஆண்கள் என்றைக்கும் தங்களை உயர்வாகவே நினைக்கும் குணம் கொண்டவர்கள். பெண்களை விட தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதில் அனைத்து ஆண்களும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையும் யதார்த்தமும் என்னவென்றால் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

Thursday, November 3, 2022

கௌஸுல் அஃழம் ரலி அவர்கள்

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் முதல் வசந்தமான ரபீவுல் அவ்வல் நிறைவு பெற்று இரண்டாம் வசந்தமான ரபீவுஸ்ஸானி தொடங்கியிருக்கிறது. உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற, உயர்த்திப் பேசப்படுகிற, பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட, கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற, அவர்களின் வரலாறுகள் பேசப்படுகின்ற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம்.

Thursday, October 20, 2022

நபி ﷺ அவர்களின் கண்ணியமே மேலானது

 

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 48:8)

Thursday, October 13, 2022

நபி ﷺ அவர்களை எப்படி நம்ப வேண்டும் ?

 

அகிலத்தின் அருட்கொடை மனிதருல் மாணிக்கம் நபிமார்களின் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் இருக்கிறோம். காலம் முழுக்க நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, அவர்களின் வரலாறுகள் ஆலசப்படுகிறது, ஆராயப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல் அவர்களின் சொல்லை மேற்கோள் காட்டாமல் அவர்களின் செயல்களை குறிப்பிடாமல் எந்த விஷயத்தையும் பேச முடியாது. எந்த தலைப்புக்குள்ளும் நுழைய முடியாது. அந்த அளவு உலக மக்களால் அனுதினமும் பேசப்படும் நபராக அவர்கள் இருக்கிறார்கள். உலக மக்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக முகம்மது என்ற அவர்களின் பெயர் இருக்கிறது. காலம் முழுக்க அவர்களைத் தொட்டு பேசினாலும் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

Thursday, September 22, 2022

குழந்தைகள் மீது கவனம் தேவை

 

அல்லாஹுத்தஆலா மனித சமூகத்திற்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று ஆரோக்கியம்.

Thursday, September 15, 2022

இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்கு காரணம்

 

உலகில் வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்கும் தான் சார்ந்திருக்கிற துறைகளில் தடம் பதிக்க வேண்டும். தான் செய்கின்ற காரியங்களில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் உயர்வை அடைய வேண்டும். உச்சத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறைந்திருக்கும்.

Thursday, September 8, 2022

ஈமான் இல்லையேல் எதுவும் இல்லை

 

அல்லாஹுத்தஆலா உலகில் நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது, இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது, செயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தைக் கொண்டது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு மிகவும் பிரதானமானது அவனது இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் தான். இறை விசுவாசம் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத் திற்கு பிறகு தான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தையே பெறுகிறது.

Friday, August 5, 2022

ஆஷூரா தரும் படிப்பினை - அல்லாஹ் என்னோடு இருக்கிறான்

 

அல்லாஹ்வின் பேரருளால் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம் சமூகம் என்றைக்கும் மறக்காத மறக்க முடியாத மறக்கக்கூடாத ஒரு மகத்தான நாளை நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆம் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா தினம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதத்தை அடுத்து மிகச்சிறந்த நோன்பு என்றால் அது, முஹர்ரம் மாதத்தில், குறிப்பாக இந்த ஆஷுரா தினத்தில் நோற்கும் நோன்பு என்று மார்க்கம் கூறுகிறது.

Friday, July 22, 2022

எந்தக் கல்வி தற்கொலையிலிருந்து பாதுகாக்கும் ?

உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று கல்வி. கல்வி தான் மனிதனை மனிதனாக்கும், மனித நேயமுள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்து கொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். கல்வியின்றி ஒரு மனிதன் நிச்சயம் முழுமை பெற மாட்டான். அதனால் தான் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

Thursday, July 7, 2022

அரஃபா மற்றும் அய்யாமுத் தஷ்ரீக்

 

அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில் நாம் அமர்ந்திருக்கிறோம். நாளைய தினம் அரஃபா என்ற மகத்தான நாள். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய, பரிமார வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.

Friday, June 24, 2022

குரல் கொடுப்போம் வாருங்கள்




நாட்டில் நடக்கிற அநீதங்களையும் அக்கரமங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிற அடக்குமுறைகளையும் கடந்த வாரம் நாம் அலசினோம். இவ்வாறு அநீதங்களும் அக்கரமங்களும் அடக்குமுறைகளும் நடக்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிறோம். இதுமாதிரியான நேரங்களில் நாம் நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நாம் பாவங்களை குறைத்துக் கொண்டு செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு ஏற்படும் அத்தனை சோதனைகளுக்கும் காரணம் நம் பாவங்கள் தான்.

Thursday, June 16, 2022

இது இந்தியாவா ? இல்லை இஸ்ரேலா ?

இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

Thursday, June 9, 2022

அவர்கள் மோசமான முடிவுகளைத் தான் சந்திப்பார்கள்

 

கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.

Friday, June 3, 2022

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

 


هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 2:29)

Thursday, May 26, 2022

ஏன் இத்தனை மணமுறிவுகள் ?

 

சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

Friday, May 20, 2022

முஸ்லிம்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் வேண்டும்

 

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை நமக்கு நன்றாக தெரியும். கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மதக்கலவரங்கள், எல்லாம் தனியார் மயமாக்கப்படுவது என்று நிர்வாக ரீதியாக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தனது தோல்வியை மறைப்பதற்காகவும், RSS- ன் அஜென்டாவை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களோடு கைகோர்த்து மத்திய பாஜக அரசு மதப்பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. RSS- ன் மிக முக்கியமான அஜென்டாவே இஸ்லாமிர்களைத் தீண்டி அவர்களை கொதிப்படையைச் செய்வதும் அவர்கள் உயிராக மதிக்கின்ற ஷரீஅத்தில் கை வைப்பதும் அவர்களின் முக்கிய அடையாளச் சின்னங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதும் தான்.

Thursday, May 12, 2022

மிகப்பெரும் நிஃமத் மார்க்க கல்வி

ஷவ்வால் மாதத்தினுடைய 2 வது ஜும்ஆ இது.ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது.