Friday, January 31, 2025

ஷரீஅத்தை புறக்கணிக்கும் முஸ்லிம் சமூகம்

 

மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு சில சட்ட திட்டங்கள்، வாழ்க்கை நெறிமுறைகள் அவசியமாய் தேவைப்படுகிறது. சட்டதிட்டங்கள் தான் மனிதனை சுய ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ செய்கிறது. மனிதனால், சட்டம் என்ற கடிவாளம் இன்றி சுய  ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் வாழ முடியாது.

Friday, January 10, 2025

பேராசை அழிவையே ஏற்படுத்தும்

பரக்கத்தைக் கேட்கின்ற, தேடுகின்ற மாதம் இந்த ரஜப் மாதம். பரக்கத் என்பதற்கான சரியான பொருளை இஸ்லாம் கூறியிருக்கிறது. அதை கடந்த வாரம் பார்த்தோம். அந்த பரக்க்த்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் இஸ்லாம் நிறையவே சொல்லித் தந்திருக்கின்றது. அதில் ஒன்று தான் எதிலும் பேராசை கொள்ளாமல் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் தன்மை.

Friday, January 3, 2025

ரஜப் மாத சிந்தனைகள்

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ரஜப் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் மூன்று சிந்தனைகள் மிக அவசியமானது.

1, அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த ரஜபும் ஒன்று.

Friday, November 22, 2024

ஜும்ஆ உரைக்கு முன் அனுமதியா?

 இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம் மக்களுக்கு ஏற்ற மார்க்கம் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுத்த மார்க்கம் மனித உயிர்களையும் மனித உரிமைகளையும் மனித உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உணர்த்திய மார்க்கம். மனித உரிமை  என்ற சொல்லுக்கு பல விதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தான் எவ்வாறு வாழ வெண்டும் என்று விரும்புவானோ, ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போனோ ஆசைப்படுவானோ அவை அனைத்திற்கும் பெயர் தான் மனித உரிமைகள். 

Friday, November 8, 2024

அமெரிக்க ஆட்சி மாற்றம்

 

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

Friday, November 1, 2024

அர்த்தமுள்ள மார்க்கம்

إنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாக இருக்கிறது. (அல்குர்ஆன்:3;19)

உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது.

Friday, September 6, 2024

சாதனைச் செம்மல்

 

இஸ்லாமிய வருடத்தின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைந்திருக்கின்றது. ரபீவுல் அவ்வல் மாதம் என்றாலே ஈமான் கொண்டவர்களின் இதயங்கள் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும்.காரணம் அண்ணல் நபி ஸல் அவர்கள் இந்த மண்ணிற்கு வருகை தந்த மாதம் ரபூவுல் அவ்வல்.

Friday, August 30, 2024

மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்

 


அல்லாஹுத்தஆலா வாழ்வியல் நெறியாக உலக மக்களுக்கு இஸ்லாத்தைத் தந்திருக்கின்றான். இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம். எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம்.

Friday, August 23, 2024

சீரழிவை நோக்கி பயணிக்கும் நம் இளவல்கள்

 

அல்லாஹுத்தஆலா மனித வாழ்வை மூன்று பருவங்களைக் கொண்டு அமைத்திருக்கின்றான். 1.குழந்தைப் பருவம் 2.வாலிபப் பருவம் 3.முதுமைப் பருவம்.இதில் ஆற்றலும் வலிமையும் துடிப்பும் உற்சாமும் மிக்க பருவம் வாலிபப் பருவம். அனைவராலும் ஆசை கொள்ளப்படுகின்ற அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒரு பருவம் இளமைப் பருவம். வேகமாக வளர்ந்து வாலிபர்களாக ஆகி விட மாட்டோமா என்று சிறுவர்களும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு அந்த பருவம் வழங்கப்பட மாட்டாதா என்று முதியோர்களும் ஏங்கும் பருவமாக இந்த இளமை பருவம் இருக்கிறது.

Friday, August 9, 2024

வட்டியின் கோர முகம்

 கடந்த வாரத்தின் தொடர்....

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை இந்த பூமியில் படைத்து நம் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கின்றான். கடந்த காலத்து மனிதர்களை விட அனைத்திலும் அல்லாஹ் நம்மை உயர்வாகவே வைத்திருக்கின்றான். நிறைய வசதிவாய்ப்புக்களை தந்திருக்கின்றான். வாழ்வின் எல்லா சௌகரீகங்களையும் வழங்கியிருக்கின்றான். கடந்து காலத்து மனிதர்கள் சௌகரீகங்கள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.மன நிறைவான வாழ்வைப் பெற்றிருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு அனைத்து வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியும் இல்லை.மனநிறைவான வாழ்வும் இல்லை. காரணம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றினார்கள்.நாம் பின்பற்றுவதில்லை. அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து வாழ்ந்தார்கள். நாம் அல்லாஹ்விற்கு பயப்படுவதில்லை. பொருளாதாரத்தைத் தேடுவதில் பேணுதல் இல்லை.

Thursday, July 25, 2024

இஸ்லாம் கூறும் பொருளீட்டல்

 

இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களைக் குறித்தும் பேசிய உயர்ந்த மார்க்கம்.வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வழிகாட்டுதலையும் மனித சமூகத்திற்கு கொடையாக தந்த உன்னத மார்க்கம்.அனைத்தையும் வழிகாட்டிய இஸ்லாம் பொருளாதாரம் குறித்தும் பொருளீட்டல் குறித்தும் அழகான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது. இஸ்லாத்தைப் பொருத்த வரை தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் இவை மட்டும் கடமையல்ல. குடும்பத்திற்காக உழைப்பதும் சம்பாதிப்பதும் கடமை தான்.

Friday, July 12, 2024

ஆணவக்காரர்களின் முடிவு

 

1446 ம் ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் ஜும்ஆ இது. வருடத்தின் மூன்று பத்து நாட்கள் மகத்துவமானவை. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள். பொதுவாக நிகழ்வுகள் தான் காலத்தையும் நாளையும் அடையாளப்படுத்துகிறது. நிகழ்வுகளைக் கொண்டு தான் காலமே அறியப்படுகின்றது. நிகழ்வுகளை எண்ணிப்பார்க்காமல் அதனை தனியாக பிரித்து விட்டு காலத்தை மட்டும் ஒருவர் யோசிக்க முடியாது.

Friday, June 28, 2024

சுயமரியாதையை கற்றுத் தந்த இப்ராஹீம் அலை அவர்கள்

இந்த உலகத்தில் இறைவனின் படைப்புக்கள் ஏராளம் உண்டு.மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் படைப்பினங்களை விட மனிதனே கண்ணியமானவன்.உயர்ந்தவன்.

Friday, June 21, 2024

பிள்ளைகளின் வாழ்வை அழித்து விட வேண்டாம்

அல்லாஹ் நம் வாழ்வில் நமக்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கியிருக்கிறான். இஸ்லாம், ஆரோக்கியம், பொருளாதாரம், ரிஸ்க், நீர், குழந்தைகள். இவைகளெல்லாம் அல்லாஹ் நமக்களித்த நிஃமத்துக்களில் கட்டுப்பட்டவை. இந்த நிஃமத்துக்களுக்கு முதலில் அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்ய வேண்டும். இரண்டாவது அவைகளுடைய ஹக்குகளைப் பேண வேண்டும். மூன்றாவது அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

Thursday, June 6, 2024

இதுவும் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.

Tuesday, April 2, 2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிறை 20 கு பிறகு குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் ரமலானுக்குப் பிறகு ஜும்ஆ குறிப்புகள் தர முயற்சிக்கிறேன். அனைவரும் துஆ செய்யுங்கள்.

Saturday, March 30, 2024

மன்னிப்போம் மறப்போம்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 42:40)

Thursday, March 28, 2024

பரம எதிரி

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا  اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ‏

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (அல்குர்ஆன் : 35:6)

Wednesday, March 27, 2024

பத்ர் வரலாறு

மக்காவிலிருந்து அபூ ஸுஃப்யானின் தலைமையில் ஷாமிற்கு சென்று அங்கிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

பத்ர் தரும் படிப்பினை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வரலாற்று சிறப்புமிக்க பத்ர் போர்க்களத்தில் கலந்து கொண்ட பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுகின்ற தினம் இது. இந்த போரில் சமூகத்திற்குத் தேவையான ஏராளமான பாடங்களும் படிப்பினைகளும் உண்டு. அந்த வகையில் பத்ர் போர்க்களம் நமக்குத் தருகின்ற முதல் பாடம் என்னவென்றால் வெற்றியும் உதவியும் இறைவன் புறத்தில் தான் இருக்கிறது. வெற்றியையும் உதவியையும் இறைவன் தான் நமக்கு தர வேண்டும். வெற்றி இறைவனைக் கொண்டு மட்டும் தான் இருக்கிறது. வேறு எதைக் கொண்டும் அல்ல என்கிற ஒரு ஆழமான இறை நம்பிக்கையை இந்த பத்ர் போர்க்களம் நமக்கு ஊட்டுகிறது.