Saturday, March 16, 2024

இறைவனிடம் கையேந்துங்கள்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌  اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128)

நமது முதல் கவனம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ  وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌  وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.(அல்குர்ஆன் : 6:121)

Friday, March 15, 2024

கண்டும் காணாத கூட்டம்


இந்தப் பதிவின் இறுதியில்
2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன் : 5:78)

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்க வில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன் : 5:79)

Wednesday, March 13, 2024

இதுவே அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ  وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்த வற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. (அல்குர்ஆன் : 4:113)

ரிலாக்ஸ் ப்ளீஸ்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் : 3:186)

Tuesday, March 12, 2024

செய்வதை திருந்தச் செய்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 


اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:271)

Monday, March 11, 2024

தராவீஹ் 1 நடுநிலைச் சமூகம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கனினி பழுதடைந்திருந்ததால் நீண்ட நாட்களாக ஜும்ஆ குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் அருளாலும் உலமாப் பெருமக்களின் துஆ பரக்கத்தாலும்  தராவீஹ் குறிப்பிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறேன். தொய்வின்றி தொடர்வதற்கும் உடலும் மனதும் ஒத்துழைப்பதற்கும் நேரத்தில் பரக்கத் ஏற்படுவதற்கும் அனைவரும் துஆ செய்வீர்கள் என ஆதரவு வைக்கின்றேன். 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَكَذَ ٰ⁠لِكَ جَعَلۡنَـٰكُمۡ أُمَّةࣰ وَسَطࣰا

அவ்வாறே நாம் உங்களை நடுநிலைச் சமூகமாக ஆக்கினோம். (2:143)

Friday, January 26, 2024

குடியரசு

 

இன்று நாட்டின் 75 வது குடியரசு தினம். 1947 ஆகஸ்ட் 15  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

Thursday, January 4, 2024

மானம் பெரிது

 

நமக்கு அல்லாஹ் கண்ணியமான வாழ்வைத் தந்திருக்கிறான். நாம் அதிகம் எதிர் பார்க்கின்ற விஷயம் கண்ணியம். பிறர் நம்மைக் கண்ணியப்படுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் மானம் மரியாதை காக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.எந்த சந்தர்ப்பத்திலும் நம் கண்ணியம் போய் விடக் கூடாது. நம் மானம் மரியாதையை எவரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.

Friday, December 29, 2023

புத்தாண்டு கொண்டாட்டமல்ல ; திண்டாட்டம்

 

இந்த வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். 2024 ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வரவேற்பதற்கும் கொண்டாடுவதற்கும் உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் தினங்களில் புத்தாண்டும் ஒன்று. மற்ற பண்டிகைகளுக்கும் இந்த புத்தாண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பண்டிகைகளை அந்தந்த மதம் சார்ந்தவர்கள் அல்லது அந்தந்த சமூகத்தினர்கள் கொண்டாடு வார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். ஆனால் இந்தப் புத்தாண்டில் நடைபெறும் விநோதம் என்னவென்றால் அதை அனைவருமே கொண்டாடுவார்கள்.அனைவருமே வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள்.

Friday, December 8, 2023

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

நாளை டிசம்பர் 9 ம் தேதி. சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக 2003 - ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9 ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், ஊழல் மற்றும் மோசடி பற்றிய  விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் எதிர் காலத்தில் ஊழல் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதும் தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

Thursday, November 30, 2023

டிசம்பர் 2 & 3

தலைப்பு 1 - டிசம்பர் 2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

இஸ்லாம் கூறும் அடிமை ஒழிப்புத்திட்டம்


தலைப்பு 2 -  டிசம்பர் 3 உலக மாறறுத் திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் 



 


Friday, October 27, 2023

வலிமார்கள்

 

வலிமார்களின் தலைவர் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் ரலி அவர்களின் நினைவு நாளான இன்று வலிமார்கள் என்றால் யார் அவர்களின் தன்மைகள் என்ன அவர்களின் அந்தஸ்து என்ன என்று இறைநேசர்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

Friday, October 20, 2023

யூதர்களின் மறைமுகமான சூழ்ச்சிகள்

 

இஸ்ரேல் யூதர்களுக்கும் இஸ்லாமியப் போராளிகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் யூதர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன உலகில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃபலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்திப்போம்

அல்லாஹுத்தஆலா மனிதர்களாகிய நம்மை உலகத்திலே படைத்து நமக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கியிருக்கிறான். உண்ண உணவு, உடுத்த உடை இருக்க இருப்பிடம் நாம் நினைக்கும் காரியங்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள பொருளாதாரம், வசதி வாய்ப்புகள் என நாம் பிறந்தது முதல் மரணிக்கிற வரை நம் வாழ்க்கைக்குத் தேவையான நம் வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை காரியங்களையும் அல்லாஹ் நமக்குத் தருகிறான். இதல்லாமல் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் நமக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்.

Thursday, September 21, 2023

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ

 

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்  அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக,  அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது என்ற பெயர்.  Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.

Friday, September 15, 2023

புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்

 அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, September 7, 2023

தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்

 


உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது. இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நபி அவர்களை சமுதாத்தின் மிகச்சிறந்த தலைவர் என்றும் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னோடி என்றும் சமூகத்தின் ஈடுஇணையற்ற வழிகாட்டி என்றும் உலகில் அனைவரும் தங்களின் முன்மாதிரியான எடுத்துக் கொள்ள வேண்டிய மகத்தான மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கும் பலர், அதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடும் முதன்மையான விஷயம் நபி அவர்கள் ஏற்படுத்திய சமத்துவம் தான். முஹம்மது நபியின்  இந்த மகத்தான வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த கொள்கை உறுதியும் யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையில் பின்வாங்காத அந்த கொள்கைப் பிடிமானமும். இரண்டாவது காரணம் அவர்கள் போதித்த சமத்துவம் என்று எஸ். எச். லீடர் என்ற மாற்றுமத அறிஞர் குறிப்பிடுகிறார்.

Friday, August 25, 2023

சந்திரயான் 3 - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகள் நிறைந்தது. வாழ்க்கை முழுக்க வெற்றி மட்டுமே பெற்றவர்களும் இல்லை. வெற்றியே பெறாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்களும் இல்லை. வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தால் மனிதனுக்கு தலைக்கனம் வந்து விடும். எப்போதுமே தோற்றுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு மனம் தளர்ந்து விடுவான். எனவே அல்லாஹ் மனிதனுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி வழங்குகிறான். வெற்றி கிடைக்கும் போது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். தோல்வியை சந்திக்கின்ற போது பொறுமையை மேற்கொண்டு அதிலிருந்து பாடங்களைப் பெற்று தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும்.

Friday, August 18, 2023

தடம் மாறி விட்ட மருத்துவத்துறை

 

அல்லாஹ் நமக்கு கொடையாக வழங்கியிருக்கிற இஸ்லாம் மனித சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த நற்பண்புகளையும் அறிவார்ந்த கருத்துக்களையும் கூறி அதன் மூலம் மனித உள்ளங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் மனித சமூகத்திற்குச் சொன்ன மிக அற்புதமான கருத்துக்களில் ஒன்று உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பயனுள்ளவனாக இரு. உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நன்மை செய்பவனாக இரு. உன்னைக் கொண்டு உனக்கு என்ன பயன் கிடைத்தது, கிடைக்கிறது என்பது முக்கியம் இல்லை. உன்னைக் கொண்டு உன் குடும்பம், உன் சொந்த பந்தம், உன் நண்பர்கள், உன் சமூகம் என்ன பயன்களை,பலன்களை அடைந்திருக்கிறது என்பது தான் முக்கியம்.

Thursday, August 10, 2023

இஸ்லாம் பெற்றுத் தந்த சுதந்திரம்

 

இந்தியத் திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையிலும் சென்னை தலைமைச் செயலகத்திலும் பள்ளி கல்லூரிகளில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தற்போது அரபி மதரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து இஸ்லாமிய சமூக மக்களும் கொடியேற்றி சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் மூன்றே தினங்களில் சுதந்திர தினத்தை சந்திக்கயிருக்கிற இந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? அவர்கள் அந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கான காரணம் என்ன ? இஸ்லாத்திற்கும் சுதந்திரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை விரிவாக பார்க்க வேண்டும்.

Friday, August 4, 2023

யார் சாத்தானின் பிள்ளைகள் ?

 

ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப் படுகின்ற மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று பாதுகாப்பு.உயிர், உடமைகள்,பொருளாதாரம்,மானம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனிதன் எதிர் பார்க்கிறான்.காரணம் அதில் தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தும் ஒருவருக்கிருந்தும் அமைதியான வாழ்க்கையும், பாதுகாப்பான சூழலும் இல்லையென்றால் அவரால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போய் விடும்.

Friday, July 28, 2023

ஆஷூரா சொல்லும் செய்தி - பதறாத காரியம் சிதறாது

 

அல்லாஹ்வின் அருளால் நாளைய தினம் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினம். பல நபிமார்களுக்கு வெற்றிகளைத் தந்த, அவர்களின் வாழ்வின் ஏற்றங்கள் தந்த, அவர்களின் சோதனைகள் நீக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாள் தான் ஆஷூரா தினம். பல வரலாறுகள் இந்த நாளில் நடந்திருந்தாலும் ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தார்களும் அழிக்கப்பட்டு மூஸா நபி அலை அவர்களும் அவர்களது சமூகமும் காக்கப்பட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Friday, July 14, 2023

ஊடகம்

நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம் பார்வைக்கும் நம் காதுகளுக்கும் நம் சிந்தனைக்கும் கொண்டு வந்து சேர்க்கும் பணியை இன்றைக்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

Friday, June 23, 2023

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்கள்

அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையால் வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் என்று மார்க்கம் அடையாளப் படுத்தியிருக்கிற  துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாட்களை அடைந்திருக்கிறோம்.அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற அதே வேளையில் நாம் இங்கே அந்த ஹஜ்ஜின் கடமைகளையும் அந்த புனித இடங்களையும் நினைத்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அங்கே செல்ல வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தருவானாக

Friday, June 9, 2023

மக்காவின் மாண்புகள்

 

உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹாஜிகள் ஹஜ்ஜை பூர்த்தி செய்வதற்காக மக்கா நகரை நோக்கி சென்று கொண்டிருக்கிற ஹஜ்ஜினுடைய காலம் இது. இந்த நேரத்தில் மக்காவின் மாண்புகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

Thursday, May 25, 2023

கண்ணியமான மாதங்கள்

 

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது. (அல்குர்ஆன் : 22:32)

அல்லாஹ் கண்ணியப்படுத்திய பொருளை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். அல்லாஹ் கண்ணியப்படுத்திய மனிதர்களை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். இது அவர் இறையச்சம் உள்ளவர் என்பதற்கான அடையாளம். அல்லாஹ் மனிதர்களில் சிலரை கண்ணியமானவர்களாக ஆக்கியிருக்கிறான். அவர்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். பொருள்களில் சிலதை கண்ணியமானதாக ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும் கண்ணியமாகவே பார்க்க வேண்டும். பூமியில் சில இடங்களை கண்ணியமான இடங்களாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவைகளின் கண்ணியத்தை விளங்கி நாம் செயல் பட வேண்டும். அதேபோன்று சில மாதங்களை கண்ணியமிக்க மாதங்களாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும். இஸ்லாமிய மாதங்களில் 11 ம் மாதமான துல்கஅதாவில் நாம் அமர்ந்திருக்கிறோம். அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதாவும் ஒன்று.

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌  وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌   وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36)

وروى عن قتادة أيضًا قال: «إن الله اصطفى صَفَايا من خلقه؛ اصطفى من الملائكة رسُلًا، ومن الناس رسلًا، واصطفى من الكلام ذكرَه، واصطفى من الأرض المساجد، واصطفى من الشهوررمضانَ والأشهر الحرم، واصطفى من الأيام يوم الجمعة، واصطفى من الليالي ليلةَ القدر،فعظِّموا ما عظم الله، فإنما تعظم الأمور بما عظَّمها الله عند أهل الفهم وأهل العقل». جامع البيان عن تأويل آي القرآن (6/3647

நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புக்களில் சில தூய்மையான மனிதர்களை தேர்வு செய்து கொண்டான். வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை அல்லாஹ் தேர்வு செய்து கொண்டான். பேச்சில் தன்னுடைய பேச்சையும் பூமியில் மஸ்ஜிதுகளையும் மாதங்களில் ரமலான் மற்றும் கண்ணியம் பொருந்திய நான்கு மாதங்களையும் நாட்களில் ஜும்மாவையும் இரவுகளில் லைலத்துல் கதர் இரவையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை நீங்களும் கண்ணியப்படுத்துங்கள். அறிவுடையவர்களும் விளக்கமுடையவர் களும் மட்டுமே அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை கண்ணியப் படுத்துவார்கள் என கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (ஜாமிவுல் பயான்)

இந்த நான்கு மாதங்களும் இஸ்லாம் வருவதற்கு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்து மக்களிடத்திலும் கன்னிமானதாகவே இருந்தது. அந்த மாதங்களில் அம்மக்கள் யாரிடத்திலும் சண்டையிட மாட்டார்கள். யாருக்கும் அநீதம் செய்ய மாட்டார்கள். யாரையும் கொலை செய்ய மாட்டார்கள்.யாரையும் அடித்து துன்புறுத்த மாட்டார்கள். தன் தந்தையையோ மகனையோ கொலை செய்தவரைப் பார்த்தால் கூட அவரைப் பழி வாங்க மாட்டார்கள்.

أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ يُقَالُ لَهُ: "عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ" كَانَ لَهُ ابْنٌ، وَأَنَّ الْمُشْرِكِينَ أَسَرُوهُ، فَكَانَ فِيهِمْ، وَكَانَ أَبُوهُ يَأْتِي رَسُولَ اللَّهِ فَيَشْكُو إِلَيْهِ مَكَانَ ابْنِهِ وَحَالِهِ الَّتِي هُوَ بِهَا وَحَاجَتَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ يَأْمُرُهُ بِالصَّبْرِ، وَيَقُولُ لَهُ: "إِنَّ اللَّهَ سَيَجْعَلُ لَكَ فَرَجًا"(١٣) فَلَمْ يَلْبَثْ بَعْدَ ذَلِكَ إِلَّا يَسِيرًا أَنِ انْفَلَتَ ابْنُهُ مِنْ أَيْدِي الْعَدُوِّ فَمَرَّ بِغَنَمٍ مِنْ أَغْنَامِ الْعَدُوِّ، فَاسْتَاقَهَا فَجَاءَ بِهَا إِلَى أَبِيهِ، وَجَاءَ مَعَهُ بِغِنًى(١٤) قَدْ أَصَابَهُ مِنَ الْغَنَمِ، فَنَزَلَتْ فِيهِ هذه الآية: ﴿وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ﴾ ابن كثير

அவ்ஃப் பின் மாலிக் ரலி அவர்களுடைய மகனை முஷ்ரிக்குகள் கைதியாக பிடித்துச் சென்று விட்டார்கள். அவர் நபி அவர்களிடத்தில் வந்து விஷயத்தைக் கூறினார். பெருமானார் அவர்கள் பொறுமையாக இரு. அல்லாஹ் உன்னிடத்தில் உன் மகனை திருப்பிக் கொண்டு வந்து உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவான் என்று ஆறுதல் கூறினார்கள். சில தினங்களிலேயே அவருடைய மகன் எதிரிகளிடமிருந்து தப்பித்து மதீனா வந்து விட்டார். வரும் பொழுது அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளும் அவரோடு சேர்ந்து வந்து விட்டன. அவர் விஷயமாகத்தான்

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا

எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு  ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். (அல்குர்ஆன் : 65:2) என்ற வசனம் இறங்கியது. (இப்னு கஸீர்)

அவருடைய மகனை முஷ்ரிக்குகள் பிடித்துச் சென்ற போது அது கண்ணியமான மாதங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அவரை எதிரிகள் எதுவும் செய்ய வில்லை. அந்த மாதங்கள் கழியும் வரை தங்களது ஆடுகளைக் கொடுத்து மேய்க்கும் படி சொல்லி விட்டார்கள். தப்பிப்பதற்கான அவகாசத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடவே அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். இரண்டு மூன்று மாதங்களாக அவரிடத்தில் பழகி விட்ட அந்த ஆடுகள் அவர் ஓடி வருவதைப் பார்த்து அவரோடு அவைகளும் மதீனா வந்து விட்டன.

கண்ணியமான மாதங்களில் துல்ஹஜ் மாதம் என்பது ஹஜ் செய்யக்கூடிய மாதம். ஹஜ்ஜின் கடமைகளை மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு முந்தைய மாதமான துல்கஅதா மாதத்தில் தான் மக்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹஜ்ஜுக்காக மக்காவை நோக்கி பயணப்படுவார்கள். எனவே ஹஜ்ஜுக்காக செல்லக்கூடிய அந்த ஹாஜிகளின் பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதில் எந்த இடையூறுகளும் ஏற்படக்கூடாது. முஹர்ரம் மாதத்தில் தான் அனைத்து ஹாஜிகளும் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருப்பார்கள். எனவே அந்தப் பயணமும் அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இந்த காரணங்களுக்காக அந்த மூன்று மாதங்களையும் கண்ணியமான மாதங்களாக இருந்தன. வருடத்தின் இடையில் கஃபத்துல்லாவை ஜியாரத் செய்வதற்கும் உம்ரா செய்வதற்கும் மக்கள் தூரத்திலிருந்து வருவதை கவனித்து ரஜப் மாதத்தையும் அவர்கள் கண்ணியப்படுத்தியிருந்தார்கள். அந்த வகையில் தான் நான்கு மாதங்கள் இஸ்லாம் வருவதற்கு முன்பே அந்த மக்களிடத்தில் கண்ணியமானதாக பார்க்கப்பட்டது.

فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُم

இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொள்ள வேண்டாம்.

عن قتادة: أما قوله: ﴿فلا تظلموا فيهن أنفسكم﴾ ، فإن الظلم في الأشهر الحرم أعظم خطيئةً ووِزْرًا، من الظلم فيما سواها، وإن كان الظلم على كل حال عظيمًا، ولكن الله يعظِّم من أمره ما شاء.

அநீதம் என்பது எல்லாக் காலத்திலும் பெரும் குற்றமாக இருந்தாலும் மற்ற காலங்களில் செய்கின்ற அநீதத்தை விட கண்ணியமிக்க மாதங்களில் செய்கின்ற அநீதம் மிகப்பெரிய பாவச் சுமையை ஏற்படுத்தும் என கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் தப்ரி)

 

எங்கு செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் கண்ணியம் மிகுந்த இடங்களில் வைத்து ஒரு குற்றம் செய்தால் அது மாபெரும் குற்றமாக கருதப்படும்.

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَـرَامِ الَّذِىْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ اۨلْعَاكِفُ فِيْهِ وَالْبَادِ‌  وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ‏

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதை(யில் செல்வதை)யும் தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்களாயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தடை செய்து கொண்டு, அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய விரும்பினால், அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம். (அல்குர்ஆன் : 22:25)

அதேபோன்று எப்போது தவறு செய்தாலும் பாவம் தான். ஆனால் புனிதமான மாதங்களில் புனிதமான நாட்களில் செய்கின்ற பாவம் பெரும் பாவமாக கருதப்படும்.

குற்றத்தைப் போன்று நன்மைகளுக்கும் இந்த மாதத்தில் இரட்டிப்பான கூலிகள் உண்டு.

قال الإمام القرطبي رحمه الله : ( كما يضاعف الثواب بالعمل الصالح، فإن من أطاع الله في الشهر الحرام في البلد الحرام ليس ثوابه ثواب من أطاعه في الشهر الحلال في البلد الحرام

கண்ணியமான ஊரில் கண்ணியமான மாதத்தில் ஒருவர் நன்மையான காரியத்தை செய்தால் அது மற்ற ஊர்களில் மற்ற காலங்களில் செய்கின்ற நன்மையை போன்று அல்ல.

قال النووي رحمه الله في المجموع: (قال أصحابنا: ومن الصوم المستحب صوم الأشهر الحرم، وهي: ذو القعدة وذو الحجة والمحرم ورجب، وأفضلها المحرم

அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  கண்ணியமான இந்த நான்கு மாதங்களில் நோன்பு நோற்பது முஸ்தஹப்பாகும்.


எனவே தான் நபி  அவர்கள் சங்கையான மாதங்களில் நோன்பு வைப்பதை ஆர்வப்படுத்தினார்கள்.

أتى رَسُولَ الله صلى الله عليه وسلم، ثُمّ انْطَلَقَ فَأتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ، فقال: يَارَسُولَ الله أمَا تَعْرِفُنِي؟ قال: وَمَنْ أنْتَ؟ قال: أنَا الْبَاهِليّ الّذي جِئْتُكَ عَامَ الأوّلِ، قال: فَمَا غَيّرَكَ وَقَدُ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ؟ قُلْتُ مَا أكَلْتُ طَعَاماً مُنْذُ فَارَقْتُكَ إلاّ بِلَيْلٍ، فقال رَسُولُ الله صلى الله عليه وسلم لِمَ عَذّبْتَ نَفْسَكَ، ثُمّ قال: صُمْ شَهْرَ الصّبْرِ وَيَوْماً مِنْ كُلّ شَهْرٍ، قال: زِدْني فإنّ بِي قُوّةً، قال: صُمْ يَوْمَيْنِ، قال: زِدْنِي، قال: صُمْ ثَلاَثَةَ أيّامٍ، قال: زِدْنِي، قال: صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرْمِ وَاتْرُكْ، وَقال بِأصَابِعِهِ الثّلاَثَةِ فَضَمّهَا ثُمّ أرْسَلَهَا".

ஒரு நபித்தோழர் நபியை சந்தித்து விட்டு சென்றார். அதற்குப் பிறகு அவருடைய தோற்றமும் அவருடைய உடல் அமைப்பும் மாற்றமடைந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நபியை சந்திக்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். நீ யார் என்று நபியவர்கள் கேட்ட பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு உங்களிடத்தில் வந்த மனிதர் தான் என்று சொன்னார். முன்பு நீ வரும் பொழுது அழகான தோற்றத்தோடு இருந்தாயே. ஆனால் இப்பொழுது உன்னை இப்படி மாற்றியது எது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர், உங்களை சந்தித்து விட்டுச் சென்றதிலிருந்து நான் இரவில் மட்டும் தான் உணவை உட்கொள்கிறேன். அதாவது தொடர்ந்து நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட நபியவர்கள் உனக்கு நீயே வேதனை கொடுத்துக் கொண்டாயே என்று சொன்னார்கள். பின்பு, வேண்டுமென்றால் பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு வைத்துக் கொள். மாதம் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். எனக்கு ஆற்றல் இருக்கிறது. இதை விட அதிகமாக என்னால் நோன்பு வைக்க முடியும் என்று அவர் சொன்னார். அப்படி என்றால் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இன்னும் அதிகமாக என்னால் முடியும் என்று அவர் சொன்னார். அப்படியானால் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இதை விட அதிகப்படுத்துங்கள் என்று அவர் சொன்ன பொழுது, நபி  அவர்கள் தன்னுடைய மூன்று விரல்களை சேர்த்து பின்பு பிரித்துக் காட்டி சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு என்று மூன்று முறை கூறினார்கள். (அபூதாவூது 2428) 

وقال الحافظ ابن رجب في لطائفه – رحمه الله : (وقد كان بعض السلف يصوم الأشهر الحرم كلّها، منهم ابن عمر، والحسن البصري، وأبو إسحاق السبيعي، وقال الثوري: الأشهر الحرم أحبُّ إليَّ أن أصوم فيها

இப்னு உமர் ரலி ஹஸனுல் பஸரீ ரஹ் போன்ற நம் முன்னோர்கள் கண்ணியமான மாதங்களில் மாதம் முழுக்க நோன்பு வைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அல்லாமா ஸவ்ரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  கண்ணியமான மாதங்களில் நோன்பு வைப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது.

அந்த நான்கு மாதங்களில் இந்த துல்கஅதா மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு.

الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ

 ஹஜ் என்பது (அதற்கெனக்) குறிப்பிட்ட மாதங்களில் தான். (அல்குர்ஆன் : 2 ;197)

وَقَالَ ابْنُ عُمَرَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا-: " أَشْهُرُ الحَجِّ: شَوَّالٌ، وَذُو القَعْدَةِ، وَعَشْرٌ مِنْ ذِي الحَجَّةِ"،

ஹஜ்ஜிக்கான காலங்கள் என்பது ஷவ்வால்,துல்கஅதா மற்றும் துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்களாகும்.

நபி அவர்கள் அனைத்து உம்ராக்களையும் துல்கஅதாவில் தான் செய்திருக்கிறார்கள்.

فعُمَر النبي -صلى الله عليه وسلم- الأربع كنّ في شهر ذي القعدة، قَالَ أَنَسٌ -رَضِيَ اللَّهُ عَنْهُ-: "اعْتَمَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَرْبَعَ عُمَرٍ، كُلَّهُنَّ فِي ذِي القَعْدَةِ، إِلَّا الَّتِي كَانَتْ مَعَ حَجَّتِهِ: عُمْرَةً مِنَ الحُدَيْبِيَةِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ العَامِ المُقْبِلِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ الجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ" (متفق عليه).

 

 இறைத்தூதர் நபி அவர்கள் தம் வாழ்நாளில் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் ஹஜ்ஜின் போது செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதாவிலேயே செய்தார்கள் என்று என்னிடம் சொல்லி விட்டு அந்த நான்கையும் கூறினார்கள்.

1, ஹுதைபிய்யா நிகழ்வின் போது செய்த உம்ரா.

2, அதற்கு அடுத்த ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா.

ஹுனைன் போரிக்களத்தின் போது கிடைத்த செல்வங்களை பங்கிட்டு கொடுத்த நேரத்தில் ஜிஃரானா என்னும் இடத்திலிருந்து சென்ற உம்ரா. (புகாரி ; 4148)

وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً ‌  وَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِىْ فِىْ قَوْمِىْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ‏

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:14)

அல்லாஹ் வாக்களித்த 30 நாட்கள் என்பது துல்கஅதா மாதத்தின் 30 நாட்களாகும் என்பது குர்ஆன் விரிவுரையாளர்களின் கூற்றாகும்.

புனிதமான மாதத்தை அடைந்திருக்கிற நாம் இதில் அதிகம் நன்மைகளை செய்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! 

Thursday, May 18, 2023

எல்லாம் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.

Thursday, May 11, 2023

விபத்துக்களும் பாதுகாப்பு வழிமுறைகளும்

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அவசர யுகத்தில் பரபரப்பான சூழலில் பயணங்கள் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. படிப்பிற்காக, தொழிலுக்காக, குடும்பத்தின் அலுவல்களுக்காக, சொந்த காரியங்களுக்காக அல்லது சமூகக் காரியங்களுக்காக, சுகத் துக்கங்களுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, இப்படி ஒவ்வொரு நாளும் நாம் பயணம் மேற்கொள்கிறோம். மனிதர்களும் மனிதர்கள் மேற்கொள்கிற பயணங்களும் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் வாகனங்களும் பெருத்து விட்டது.