இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின்
இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும்
தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான
துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
لُعِنَ
الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ
وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ذٰ لِكَ بِمَا
عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ
இஸ்ராயீலின்
சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது,
மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர்
ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு
மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன்
: 5:78)
كَانُوْا لَا
يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
இன்னும்
தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு
ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்க வில்லை;
அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும்
தீயவையாகும். (அல்குர்ஆன்
: 5:79)