Thursday, July 25, 2024

இஸ்லாம் கூறும் பொருளீட்டல்

 

இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களைக் குறித்தும் பேசிய உயர்ந்த மார்க்கம்.வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வழிகாட்டுதலையும் மனித சமூகத்திற்கு கொடையாக தந்த உன்னத மார்க்கம்.அனைத்தையும் வழிகாட்டிய இஸ்லாம் பொருளாதாரம் குறித்தும் பொருளீட்டல் குறித்தும் அழகான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது. இஸ்லாத்தைப் பொருத்த வரை தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் இவை மட்டும் கடமையல்ல. குடும்பத்திற்காக உழைப்பதும் சம்பாதிப்பதும் கடமை தான்.

Friday, July 12, 2024

ஆணவக்காரர்களின் முடிவு

 

1446 ம் ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்து அதன் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் ஜும்ஆ இது. வருடத்தின் மூன்று பத்து நாட்கள் மகத்துவமானவை. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள். பொதுவாக நிகழ்வுகள் தான் காலத்தையும் நாளையும் அடையாளப்படுத்துகிறது. நிகழ்வுகளைக் கொண்டு தான் காலமே அறியப்படுகின்றது. நிகழ்வுகளை எண்ணிப்பார்க்காமல் அதனை தனியாக பிரித்து விட்டு காலத்தை மட்டும் ஒருவர் யோசிக்க முடியாது.

Friday, June 28, 2024

சுயமரியாதையை கற்றுத் தந்த இப்ராஹீம் அலை அவர்கள்

இந்த உலகத்தில் இறைவனின் படைப்புக்கள் ஏராளம் உண்டு.மனிதர்களை விட பிரம்மாண்டமான உடலமைப்பு கொண்ட உயிரினங்களும், மனிதர்களை விட ஆற்றல் பெற்ற உயிரினங்களும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எத்தனை பெரிய ஆற்றலும், பிரம்மாண்டமும் இறைவனால் பிற உயிரினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் படைப்பினங்களை விட மனிதனே கண்ணியமானவன்.உயர்ந்தவன்.

Friday, June 21, 2024

பிள்ளைகளின் வாழ்வை அழித்து விட வேண்டாம்

அல்லாஹ் நம் வாழ்வில் நமக்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கியிருக்கிறான். இஸ்லாம், ஆரோக்கியம், பொருளாதாரம், ரிஸ்க், நீர், குழந்தைகள். இவைகளெல்லாம் அல்லாஹ் நமக்களித்த நிஃமத்துக்களில் கட்டுப்பட்டவை. இந்த நிஃமத்துக்களுக்கு முதலில் அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்ய வேண்டும். இரண்டாவது அவைகளுடைய ஹக்குகளைப் பேண வேண்டும். மூன்றாவது அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

Thursday, June 6, 2024

இதுவும் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.

Tuesday, April 2, 2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிறை 20 கு பிறகு குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் ரமலானுக்குப் பிறகு ஜும்ஆ குறிப்புகள் தர முயற்சிக்கிறேன். அனைவரும் துஆ செய்யுங்கள்.

Saturday, March 30, 2024

மன்னிப்போம் மறப்போம்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 42:40)

Thursday, March 28, 2024

பரம எதிரி

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا  اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ‏

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். (அல்குர்ஆன் : 35:6)

Wednesday, March 27, 2024

பத்ர் வரலாறு

மக்காவிலிருந்து அபூ ஸுஃப்யானின் தலைமையில் ஷாமிற்கு சென்று அங்கிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் ‘ஹவ்ரா’ என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

பத்ர் தரும் படிப்பினை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வரலாற்று சிறப்புமிக்க பத்ர் போர்க்களத்தில் கலந்து கொண்ட பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுகின்ற தினம் இது. இந்த போரில் சமூகத்திற்குத் தேவையான ஏராளமான பாடங்களும் படிப்பினைகளும் உண்டு. அந்த வகையில் பத்ர் போர்க்களம் நமக்குத் தருகின்ற முதல் பாடம் என்னவென்றால் வெற்றியும் உதவியும் இறைவன் புறத்தில் தான் இருக்கிறது. வெற்றியையும் உதவியையும் இறைவன் தான் நமக்கு தர வேண்டும். வெற்றி இறைவனைக் கொண்டு மட்டும் தான் இருக்கிறது. வேறு எதைக் கொண்டும் அல்ல என்கிற ஒரு ஆழமான இறை நம்பிக்கையை இந்த பத்ர் போர்க்களம் நமக்கு ஊட்டுகிறது.

Tuesday, March 26, 2024

ஒரு வார்த்தை கொல்லும்

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌  لَا تَقْتُلُوْهُ ‌  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏

இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (அல்குர்ஆன் : 28:9)

Monday, March 25, 2024

நூர் அத்தியாயம் ஒரு பார்வை



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். (அல்குர்ஆன் : 24:1)

Sunday, March 24, 2024

தீர்ப்பு


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். (அல்குர்ஆன் : 21:78)

Saturday, March 23, 2024

இஸ்லாத்தின் மிக முக்கியமான தூண்

 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் : 19:59)

Thursday, March 21, 2024

தராவீஹ் - 12 ஏன் இந்த அவசரம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு  


(இரண்டு நாட்களாக தொண்டைக் கட்டு ஏற்பட்டு அதனால் தராவீஹ் தொழ வைப்பதற்கும் பயான் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறேன். உலமாப் பெருமக்களின் துஆவை ஆதரவு வைக்கிறேன். விரைவாக குணம் கிடைக்க அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌  وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

Wednesday, March 20, 2024

தராவீஹ் - 11 அனைத்தும் வசப்படும்

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌  فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ‏

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான். (அல்குர்ஆன் : 14:13)

பொறாமைத் தீ



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ ‌ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ‏

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (அல்குர்ஆன் : 12:3)

Monday, March 18, 2024

நைனுவா மக்கள்

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ  لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏

எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த  ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம். (அல்குர்ஆன் : 10:98)

Sunday, March 17, 2024

சிரிப்பு - அழுகை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَلْيَـضْحَكُوْا قَلِيْلاً وَّلْيَبْكُوْا كَثِيْرًا‌  جَزَآءً بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும். (அல்குர்ஆன் : 9:82)

Saturday, March 16, 2024

இறைவனிடம் கையேந்துங்கள்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌  اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128)

நமது முதல் கவனம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ  وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌  وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.(அல்குர்ஆன் : 6:121)

Friday, March 15, 2024

கண்டும் காணாத கூட்டம்


இந்தப் பதிவின் இறுதியில்
2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன் : 5:78)

كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ‌ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்க வில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன் : 5:79)

Wednesday, March 13, 2024

இதுவே அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ  وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்த வற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. (அல்குர்ஆன் : 4:113)

ரிலாக்ஸ் ப்ளீஸ்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் : 3:186)

Tuesday, March 12, 2024

செய்வதை திருந்தச் செய்


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 


اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:271)

Monday, March 11, 2024

தராவீஹ் 1 நடுநிலைச் சமூகம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கனினி பழுதடைந்திருந்ததால் நீண்ட நாட்களாக ஜும்ஆ குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் அருளாலும் உலமாப் பெருமக்களின் துஆ பரக்கத்தாலும்  தராவீஹ் குறிப்பிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறேன். தொய்வின்றி தொடர்வதற்கும் உடலும் மனதும் ஒத்துழைப்பதற்கும் நேரத்தில் பரக்கத் ஏற்படுவதற்கும் அனைவரும் துஆ செய்வீர்கள் என ஆதரவு வைக்கின்றேன். 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَكَذَ ٰ⁠لِكَ جَعَلۡنَـٰكُمۡ أُمَّةࣰ وَسَطࣰا

அவ்வாறே நாம் உங்களை நடுநிலைச் சமூகமாக ஆக்கினோம். (2:143)

Friday, January 26, 2024

குடியரசு

 

இன்று நாட்டின் 75 வது குடியரசு தினம். 1947 ஆகஸ்ட் 15  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

Thursday, January 4, 2024

மானம் பெரிது

 

நமக்கு அல்லாஹ் கண்ணியமான வாழ்வைத் தந்திருக்கிறான். நாம் அதிகம் எதிர் பார்க்கின்ற விஷயம் கண்ணியம். பிறர் நம்மைக் கண்ணியப்படுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் மானம் மரியாதை காக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.எந்த சந்தர்ப்பத்திலும் நம் கண்ணியம் போய் விடக் கூடாது. நம் மானம் மரியாதையை எவரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.

Friday, December 29, 2023

புத்தாண்டு கொண்டாட்டமல்ல ; திண்டாட்டம்

 

இந்த வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். 2024 ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வரவேற்பதற்கும் கொண்டாடுவதற்கும் உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் தினங்களில் புத்தாண்டும் ஒன்று. மற்ற பண்டிகைகளுக்கும் இந்த புத்தாண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பண்டிகைகளை அந்தந்த மதம் சார்ந்தவர்கள் அல்லது அந்தந்த சமூகத்தினர்கள் கொண்டாடு வார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். ஆனால் இந்தப் புத்தாண்டில் நடைபெறும் விநோதம் என்னவென்றால் அதை அனைவருமே கொண்டாடுவார்கள்.அனைவருமே வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள்.

Friday, December 8, 2023

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

நாளை டிசம்பர் 9 ம் தேதி. சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக 2003 - ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஐ.நா. சபையால் டிசம்பர் 9 ம் நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், ஊழல் மற்றும் மோசடி பற்றிய  விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் எதிர் காலத்தில் ஊழல் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதும் தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

Thursday, November 30, 2023

டிசம்பர் 2 & 3

தலைப்பு 1 - டிசம்பர் 2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

இஸ்லாம் கூறும் அடிமை ஒழிப்புத்திட்டம்


தலைப்பு 2 -  டிசம்பர் 3 உலக மாறறுத் திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் 



 


Friday, October 27, 2023

வலிமார்கள்

 

வலிமார்களின் தலைவர் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் ரலி அவர்களின் நினைவு நாளான இன்று வலிமார்கள் என்றால் யார் அவர்களின் தன்மைகள் என்ன அவர்களின் அந்தஸ்து என்ன என்று இறைநேசர்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

Friday, October 20, 2023

யூதர்களின் மறைமுகமான சூழ்ச்சிகள்

 

இஸ்ரேல் யூதர்களுக்கும் இஸ்லாமியப் போராளிகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் யூதர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன உலகில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃபலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்திப்போம்

அல்லாஹுத்தஆலா மனிதர்களாகிய நம்மை உலகத்திலே படைத்து நமக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கியிருக்கிறான். உண்ண உணவு, உடுத்த உடை இருக்க இருப்பிடம் நாம் நினைக்கும் காரியங்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள பொருளாதாரம், வசதி வாய்ப்புகள் என நாம் பிறந்தது முதல் மரணிக்கிற வரை நம் வாழ்க்கைக்குத் தேவையான நம் வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை காரியங்களையும் அல்லாஹ் நமக்குத் தருகிறான். இதல்லாமல் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் நமக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்.

Thursday, September 21, 2023

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ

 

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்  அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக,  அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது என்ற பெயர்.  Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.

Friday, September 15, 2023

புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்

 அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, September 7, 2023

தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்

 


உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது. இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நபி அவர்களை சமுதாத்தின் மிகச்சிறந்த தலைவர் என்றும் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னோடி என்றும் சமூகத்தின் ஈடுஇணையற்ற வழிகாட்டி என்றும் உலகில் அனைவரும் தங்களின் முன்மாதிரியான எடுத்துக் கொள்ள வேண்டிய மகத்தான மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கும் பலர், அதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடும் முதன்மையான விஷயம் நபி அவர்கள் ஏற்படுத்திய சமத்துவம் தான். முஹம்மது நபியின்  இந்த மகத்தான வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த கொள்கை உறுதியும் யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையில் பின்வாங்காத அந்த கொள்கைப் பிடிமானமும். இரண்டாவது காரணம் அவர்கள் போதித்த சமத்துவம் என்று எஸ். எச். லீடர் என்ற மாற்றுமத அறிஞர் குறிப்பிடுகிறார்.

Friday, August 25, 2023

சந்திரயான் 3 - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகள் நிறைந்தது. வாழ்க்கை முழுக்க வெற்றி மட்டுமே பெற்றவர்களும் இல்லை. வெற்றியே பெறாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்களும் இல்லை. வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தால் மனிதனுக்கு தலைக்கனம் வந்து விடும். எப்போதுமே தோற்றுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு மனம் தளர்ந்து விடுவான். எனவே அல்லாஹ் மனிதனுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி வழங்குகிறான். வெற்றி கிடைக்கும் போது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். தோல்வியை சந்திக்கின்ற போது பொறுமையை மேற்கொண்டு அதிலிருந்து பாடங்களைப் பெற்று தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும்.

Friday, August 18, 2023

தடம் மாறி விட்ட மருத்துவத்துறை

 

அல்லாஹ் நமக்கு கொடையாக வழங்கியிருக்கிற இஸ்லாம் மனித சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த நற்பண்புகளையும் அறிவார்ந்த கருத்துக்களையும் கூறி அதன் மூலம் மனித உள்ளங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் மனித சமூகத்திற்குச் சொன்ன மிக அற்புதமான கருத்துக்களில் ஒன்று உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பயனுள்ளவனாக இரு. உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நன்மை செய்பவனாக இரு. உன்னைக் கொண்டு உனக்கு என்ன பயன் கிடைத்தது, கிடைக்கிறது என்பது முக்கியம் இல்லை. உன்னைக் கொண்டு உன் குடும்பம், உன் சொந்த பந்தம், உன் நண்பர்கள், உன் சமூகம் என்ன பயன்களை,பலன்களை அடைந்திருக்கிறது என்பது தான் முக்கியம்.

Thursday, August 10, 2023

இஸ்லாம் பெற்றுத் தந்த சுதந்திரம்

 

இந்தியத் திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையிலும் சென்னை தலைமைச் செயலகத்திலும் பள்ளி கல்லூரிகளில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தற்போது அரபி மதரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து இஸ்லாமிய சமூக மக்களும் கொடியேற்றி சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் மூன்றே தினங்களில் சுதந்திர தினத்தை சந்திக்கயிருக்கிற இந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? அவர்கள் அந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கான காரணம் என்ன ? இஸ்லாத்திற்கும் சுதந்திரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை விரிவாக பார்க்க வேண்டும்.

Friday, August 4, 2023

யார் சாத்தானின் பிள்ளைகள் ?

 

ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப் படுகின்ற மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று பாதுகாப்பு.உயிர், உடமைகள்,பொருளாதாரம்,மானம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனிதன் எதிர் பார்க்கிறான்.காரணம் அதில் தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தும் ஒருவருக்கிருந்தும் அமைதியான வாழ்க்கையும், பாதுகாப்பான சூழலும் இல்லையென்றால் அவரால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போய் விடும்.

Friday, July 28, 2023

ஆஷூரா சொல்லும் செய்தி - பதறாத காரியம் சிதறாது

 

அல்லாஹ்வின் அருளால் நாளைய தினம் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினம். பல நபிமார்களுக்கு வெற்றிகளைத் தந்த, அவர்களின் வாழ்வின் ஏற்றங்கள் தந்த, அவர்களின் சோதனைகள் நீக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாள் தான் ஆஷூரா தினம். பல வரலாறுகள் இந்த நாளில் நடந்திருந்தாலும் ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தார்களும் அழிக்கப்பட்டு மூஸா நபி அலை அவர்களும் அவர்களது சமூகமும் காக்கப்பட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Friday, July 14, 2023

ஊடகம்

நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம் பார்வைக்கும் நம் காதுகளுக்கும் நம் சிந்தனைக்கும் கொண்டு வந்து சேர்க்கும் பணியை இன்றைக்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

Friday, June 23, 2023

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்கள்

அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையால் வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் என்று மார்க்கம் அடையாளப் படுத்தியிருக்கிற  துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாட்களை அடைந்திருக்கிறோம்.அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற அதே வேளையில் நாம் இங்கே அந்த ஹஜ்ஜின் கடமைகளையும் அந்த புனித இடங்களையும் நினைத்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அங்கே செல்ல வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தருவானாக

Friday, June 9, 2023

மக்காவின் மாண்புகள்

 

உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹாஜிகள் ஹஜ்ஜை பூர்த்தி செய்வதற்காக மக்கா நகரை நோக்கி சென்று கொண்டிருக்கிற ஹஜ்ஜினுடைய காலம் இது. இந்த நேரத்தில் மக்காவின் மாண்புகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.