Thursday, October 20, 2022

நபி ﷺ அவர்களின் கண்ணியமே மேலானது

 

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 48:8)

Thursday, October 13, 2022

நபி ﷺ அவர்களை எப்படி நம்ப வேண்டும் ?

 

அகிலத்தின் அருட்கொடை மனிதருல் மாணிக்கம் நபிமார்களின் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் இருக்கிறோம். காலம் முழுக்க நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, அவர்களின் வரலாறுகள் ஆலசப்படுகிறது, ஆராயப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல் அவர்களின் சொல்லை மேற்கோள் காட்டாமல் அவர்களின் செயல்களை குறிப்பிடாமல் எந்த விஷயத்தையும் பேச முடியாது. எந்த தலைப்புக்குள்ளும் நுழைய முடியாது. அந்த அளவு உலக மக்களால் அனுதினமும் பேசப்படும் நபராக அவர்கள் இருக்கிறார்கள். உலக மக்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக முகம்மது என்ற அவர்களின் பெயர் இருக்கிறது. காலம் முழுக்க அவர்களைத் தொட்டு பேசினாலும் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.