Thursday, November 25, 2021

உண்மையான வெற்றி எது

 உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோலும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கிறது.அந்த வெற்றியைப் பெறுவதற்கு அதை ருசிப்பதற்கு அதை தனதாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தை கையாளுகிறான்.அந்த விஷயத்தையே வெற்றிக் கான படிக்கட்டாக அமைத்துக் கொள்கிறான்.அந்த வெற்றியை வெகு சீக்கிரம் அடைந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறான். பல்வேறு அர்பணிப்புகளை செய்கிறான்.அதை நோக்கியே தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

Thursday, November 18, 2021

இறைவன் ஒருவரை நேசித்தால்.....

 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதத்தை நிறைவு செய்து விட்டு இரண்டாம் வசந்தம் என்று சொல்லப்படுகின்ற ரபீவுல் ஆகிரில் நாம் அமர்ந்திருக்கிறோம். உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற உயர்த்திப் பேசப்படுகிற பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உலகத்திலுள்ள இறைநேசர்கள் வலிமார்களுக்கெலாம் தலைவரான குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம். கௌஸுல் அஃலம் பிறந்த இந்த மாதத்தில் இறைநேசம் குறித்து நாம் சிந்திக்கலாம்.

Thursday, November 11, 2021

மழை சொல்லும் செய்தி

 


உலகத்தில் அல்லாஹுத்தஆலா எண்ணற்ற படைப்பினங்களையும் ஜீவராசிகளையும் படைத்திருக்கிறான். கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள், உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள், நம் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டும் உயிரனங்கள்,சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத உயிரனங்கள்,நாம் கேள்விப்பட்ட உயிரனங்கள்,நாம் இதுவரை கேள்விப்படாத உயிரினங்கள்,பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிகின்ற உயிரனங்கள், பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கிற உயினங்கள் என்று எத்தனையோ உயிரங்களை படைத்த இறைவன் அந்த உயிரினங்களிலெல்லாம் மிகச்சிறந்த உயிரினமாக அந்த படைப்புக்களிலெல்லாம் மிக உயர்ந்த படைப்பாக அற்புத படைப்பாக மனிதனை படைத்திருக்கிறான்.

Thursday, November 4, 2021

குழந்தை ஒரு அமானிதம்

 

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் மழை காலம் ஆரம்பித்து தமிழகம் முழுக்க பரவலாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா பொழிந்து கொண்டிருக்கிற இந்த மழையை யாருக்கும் இடையூறின்றி அனைவருக்கும் பயன் தரும் நன்மழையாக, ஊரை செழிப்பாக்கும் மழையாக ஆக்கி அருள்வானாக!