Thursday, May 26, 2022

ஏன் இத்தனை மணமுறிவுகள் ?

 

சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

Friday, May 20, 2022

முஸ்லிம்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் வேண்டும்

 

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை நமக்கு நன்றாக தெரியும். கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மதக்கலவரங்கள், எல்லாம் தனியார் மயமாக்கப்படுவது என்று நிர்வாக ரீதியாக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தனது தோல்வியை மறைப்பதற்காகவும், RSS- ன் அஜென்டாவை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களோடு கைகோர்த்து மத்திய பாஜக அரசு மதப்பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. RSS- ன் மிக முக்கியமான அஜென்டாவே இஸ்லாமிர்களைத் தீண்டி அவர்களை கொதிப்படையைச் செய்வதும் அவர்கள் உயிராக மதிக்கின்ற ஷரீஅத்தில் கை வைப்பதும் அவர்களின் முக்கிய அடையாளச் சின்னங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதும் தான்.

Thursday, May 12, 2022

மிகப்பெரும் நிஃமத் மார்க்க கல்வி

ஷவ்வால் மாதத்தினுடைய 2 வது ஜும்ஆ இது.ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது. 

Thursday, May 5, 2022

ரமலான் கபூலாக வேண்டுமா ?

அல்லாஹ்வின் பேருதவியால் மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களைச் செய்த மகிழ்ச்சி யிலும் திருப்தியிலும் நாம் இருக்கிறோம்.ரமலான் முடிந்திருக்கிற இந்த வேளையில் நம் சிந்தனையும் மனோநிலையும் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.