Friday, December 17, 2021

வார்த்தையில் கவனம் தேவை

 

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிற இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒரு கட்டுக் கோப்பான மார்க்கம்.எப்படியும் வாழலாம் என்று விட்டு விடாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் கட்டுப்பாடான மார்க்கம்.வெறும் வணக்கவியல் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் சொல்லித்தரும் மார்க்கம். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அவன் எப்படியும் வாழ்ந்து விட முடியாது.இஸ்லாம் கூறுகின்ற வரையறைக்குள் மட்டுமே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.  காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் விசாரணை உண்டு,கேள்வி கணக்கு உண்டு, படைத்தவனிடம் கணக்கு காட்டியாக வேண்டும்,அதற்கு பதிலும் சொல்லியாக வேண்டும்.

Friday, December 10, 2021

மனித உரிமை

 

உலகில் இருக்கிற முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைபிடித்துக் கொண்டிருக்கிற இஸ்லாம் மனித வாழ்வின் மிகச்சிறந்த வாழ்க்கை நெறிமுறையாக இருக்கிறது. வெறுமெனே வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்ளாமல் மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அந்த வகையில் மனித உரிமைகள் குறித்து தெளிவாக இஸ்லாம் பேசியிருக்கிறது. மனிதனுடைய எண்ணற்ற உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற உரிமைகள் மீறப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்து சிந்திக்க வேண்டும்.

Thursday, December 2, 2021

மாற்றுத் திறனாளிகள்



அல்லாஹுத்தஆலா மனிதனைப் பற்றி கூறும் போது

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

திட்டமாக நாம் மனிதனை அழகான வடிவத்தில் படைத்தோம் என்று குறிப்பிடுகிறான்.