Showing posts with label வார்த்தை. Show all posts
Showing posts with label வார்த்தை. Show all posts

Tuesday, March 26, 2024

ஒரு வார்த்தை கொல்லும்

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌  لَا تَقْتُلُوْهُ ‌  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏

இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (அல்குர்ஆன் : 28:9)

Friday, December 17, 2021

வார்த்தையில் கவனம் தேவை

 

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிற இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒரு கட்டுக் கோப்பான மார்க்கம்.எப்படியும் வாழலாம் என்று விட்டு விடாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் கட்டுப்பாடான மார்க்கம்.வெறும் வணக்கவியல் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் சொல்லித்தரும் மார்க்கம். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அவன் எப்படியும் வாழ்ந்து விட முடியாது.இஸ்லாம் கூறுகின்ற வரையறைக்குள் மட்டுமே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.  காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் விசாரணை உண்டு,கேள்வி கணக்கு உண்டு, படைத்தவனிடம் கணக்கு காட்டியாக வேண்டும்,அதற்கு பதிலும் சொல்லியாக வேண்டும்.