Thursday, October 28, 2021

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான தூதர்.

 


இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நாம் வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் நபிகள் பெருமானார் ஸல் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் எதைக்குறித்து பேசுவதானாலும் நபியைத் தொடாமல் நபியின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டாமல் அவர்களை உதாரணப் படுத்தாமல் நாம் பேசி விட முடியாது.அப்படி பேசினாலும் அது மார்க்கமாக ஆகாது.

Monday, October 25, 2021

ஹதீஸ் எண் 55 دع ما يريبك

 

عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: حَفِظْتُ مِنْ رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ؛ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَالْكَذِبَ رِيبَةٌ»[1]؛ رواه الترمذي

உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு உனக்கு சந்தேகம் இல்லாததின் பக்கம் நீ செல். நிச்சயமாக உண்மை என்பது அமைதியைத் தரும். பொய் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். (திர்மிதி ; 2518)

ஹதீஸ் எண் 54 ان الصدق يهدي الي البر

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، عن النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إنَّ الصِّدقَ يَهْدِي إِلَى البرِّ، وَإِنَّ البر يَهدِي إِلَى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا». متفق عليه

நிச்சயமாக உண்மை பேசுதல் நல்லது செய்வதின் பக்கம் வழிகாட்டும் நல்லது செய்தல் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக உண்மை பேசுபவர் இதில் உண்மையாளர் என அந்த இடம் பதிவு செய்யப்படுவார் நிச்சயமாக பொய் பேசுதல் தவறுகள் செய்வதை வழிகாட்டும் தவறுகள் நரகத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால் அல்லாவிடம் பொய்யர் என பதிவு செய்யப் படுவார். (புகாரி ; 6094)

Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 53 لا تتمنوا لقاء العدو

 

عَنْ أَبِي إِبْرَاهِيمَ عَبْدِاللهِ بْنِ أَبِي أَوفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ، انْتَظَرَ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ، فَقَالَ: «يَا أيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيوفِ متفق عليه

நபி ஸல் அவர்கள் எதிரிகளைச் சந்தித்த போர்க்களங்களில் ஒரு போரின் போது, சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை காத்திருந்து பின், மக்களே எதிரிகளை சந்திக்க விரும்பாதீர்கள். அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் எதிரிகளை நீங்கள் சந்தித்து விட்டால் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக சொர்க்கம் வாள்களின் நிழல்களுக்குக் கீழே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (புகாரி ; 2818)

ஹதீஸ் எண் 52 الا تستعملني كما استعملت فلانا

 

فعن أبي يحيى أسيد بن حضير أن رجلاً من الأنصارِ جاء رسولَ اللهِ صلى الله عليه وسلَّم فقال: ألا تستعملني كما استعملتَ فلانًا؟ قال إنكم ستلقون بعدي أثَرَةً فاصبروا، حتى تلقوني على الحوضِ. متفق عليه

அன்சாரிகளில் ஒருவர் நபி ஸல் அவர்களிடத்திலே வந்து இந்த மனிதருக்கு நீங்கள் பொறுப்பைக் கொடுத்தது போன்று எனக்கும் நீங்கள் தரக்கூடாதா என்று கேட்டார். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நீங்கள் எனக்கு பின்னால் உரிமை மீறலை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் என்னை சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7057)

ஹதீஸ் எண் 51 ستكون بعدي اثرة

 

عن ابن مسعود  أن رسول الله قال: إنها ستكون بعدي أثَرة وأمور تنكرونها، قالوا: يا رسول الله، فما تأمرنا؟، قال: تؤدون الحق الذي عليكم، وتسألون الله الذي لكم[1] متفق عليه.

எனக்கு பின் உரிமை பறித்தலும் நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு இது விஷயமாக நீங்கள் இடும் கட்டளை என்ன என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7052)

ஹதீஸ் எண் 47 من كظم غيظا

 

عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ عَلَى رُءُوسِ الخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَيِّ الحُورِ شَاءَ .رواه الإمام أحمد في "المسند" (24 /

ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த சக்தியிருந்தும் அதை அவர் அடக்கினால் மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முந்நிலையில் அவரை அல்லாஹ் அழைப்பான். இறுதியாக அவர் விரும்பிய ஹூருல்ஈன் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவருக்கு அல்லாஹ் சலுகை வழங்குவான். (திர்மிதி ; 2021)

ஹதீஸ் எண் 45 ليس الشديد بالصرعة

 

عن أبي هريرة  أن رسول الله 

قال: ليس الشديد بالصُّرَعة، إنما الشديد الذي يملك نفسه عند الغضب[1] متفق عليه.

வீரன் என்பது மல்யுத்தம் செய்வதைக் கொண்டல்ல. கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன் தான் வீரன். (புகாரி ; 6114)

ஹதீஸ் எண் 44 بارك الله لكما في ليلتكما

 

عن أنس -رضي الله عنه- قال: كان ابن لأبي طلحة -رضي الله عنه- يشتكي، فخرج أبو طلحة، فَقُبِضَ الصَّبي، فلما رجع أبو طلحة، قال: ما فعل ابني؟ قالت أم سليم وهي أم الصَّبي: هو أسْكَن ما كان، فَقَرَّبَت إليه العشاء فتَعَشَّى، ثم أصاب منها، فلما فَرَغ،َ قالت: وارُوا الصَّبي فلما أصبح أبو طلحة أتى رسول الله -صلى الله عليه وسلم- فأخبره، فقال:«أعَرَّسْتُمُ اللَّيلَةَ؟» قال: نعم، قال: «اللَّهُمَّ بارِك لهما»، فولدت غلامًا، فقال لي أبو طلحة: احْمِلْهُ حتى تأتي به النبي -صلى الله عليه وسلم- وبعث معه بتمرات، فقال: «أمَعَه شيء؟» قال: نعم، تَمَرات، فأخذها النبي -صلى الله عليه وسلم- فمَضَغَها، ثم أخذها من فِيه فجعلها في فِيِّ الصَّبي، ثم حَنَّكَهُ وسماه عبد الله. وفي رواية: قال ابن عيينة: فقال رجل من الأنصار: فرأيت تِسْعَة أولاد كلهم قد قرؤوا القرآن، يعني: من أولاد عبد الله المولود

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: என் மகனின் நிலை என்ன?’ அதற்கு அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை அவர்கள் முன்னால் வைத்தார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் உணவு உட்கொண்டார்கள். பிறகு மனைவியுடன் தாம்பத்திய உறவும் கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபொழுது உம்மு ஸுலைம் சொன்னார்கள்:எல்லோரும் சிறுவனை அடக்கம் செய்யுங்கள்!பொழுது விடிந்ததும் அபூதல்ஹா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் செய்தி சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்:இன்று இரவு நீங்கள் வீடு கூடினீர்களா?’ அதற்கு அபூ தல்ஹா ஆம் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘யா அல்லாஹ்! இவ்விருவருக்கும் அருள்பாக்கியம் புரியாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள் அவ்வாறே உம்மு ஸுலைம் அவர்கள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார்கள்.

ஹதீஸ் எண் 42 فمن يعدل اذا لم يعدل الله ورسوله

 

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: لَمَّا كَانَ يَومُ حُنَينٍ آثَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الْإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ بْنَ حِصْنٍ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ، فَقَالَ رَجُلٌ: وَاللهِ إِنَّ هَذِهِ قِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللهِ، فَقُلْتُ: وَاللهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ، فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ، ثُمَّ قَالَ: «فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللهُ وَرَسُولُهُ؟»، ثُمَّ قَالَ: «يَرْحَمُ اللهُ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»، فَقُلْتُ: لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا[1]؛ متفق عليه

ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்கள் அந்தப் போரில் கிடைத்த கனிமத் பொருள்களை பங்கீடு செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா பின் மிஹ்ஸன் அவர்களுக்கும் அதே போல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் முக்கியமானவர்களுக்கும் கொடுத்தார்கள். அந்நாளில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இந்த பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்பட வில்லை, அல்லாஹ்வின் திருப்பியும் இதில் நாடப்பட வில்லை என்று ஒரு மனிதர் கூறினார். அதைக் கேட்டு விட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதை நான் நபி ஸல் அவர்களிடம் கூறுவேன் என்று சொல்லி விட்டு உடனே அவர்களிடம் வந்து அவர் கூறியதை சொன்னேன். அப்போது சிவப்பு சாயம் போல் அவர்களின் முகம் மாறியது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நீதமாக நடக்க வில்லை என்றால் வேறு யார் நீதமாக நடப்பார் என்று கூறி விட்டு, அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு அருள் புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் நோவினை செய்யப்பட்டார். அப்போது அவர் பொறுமையாக இருந்தார் என்று கூறினார்கள். இந்த நிகழ்வுக்குப் பின்னர் ஒரு செய்தியை நபி ஸல் அவர்களிடம் நான் கூறாமல் இருப்பது குற்றமல்ல என்று நான் கூறிக் கொண்டேன். (புகாரி ; 3150)

ஹதீஸ் எண் 41 الا تستنصر لنا

 

فعن أبي عبد الله خباب بن الأرت -رضي الله عنه- قال: شكونا إلى رسول الله -صلى الله عليه وسلم- وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا؟ ألا تدعو لنا؟ فقال: ((قد كان مَن قبلكم يُؤخذ الرجل فيُحفر له في الأرض، فيُجعل فيها، ثم يؤتى بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين، ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه ما يصده ذلك عن دينه، واللهِ ليتمنّ الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئبَ على غنمه، ولكنكم تستعجلون))[1]، رواه البخاري وفي رواية: "وهو متوسد بردة، وهو في ظل الكعبة، وقد لقينا من المشركين شدة"[2]

கஃபாவின் நிழலில் தனக்குரிய மேலாடையை தலையணையாக வைத்த நிலையில் படுத்திருந்த நபி ஸல் அவர்களிடம் நாங்கள் எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடக்கூடாதா எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யக்கூடாதா என்று கூறியவர்களாக முறையிட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் பிடிக்கப்பட்டு அவருக்காக பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் போடப்பட்டார். பின்பு ரம்பத்தைக் கொண்டு வரப்பட்டு அவரது தலையில் வைக்கப்பட்டு அறுக்கப்பட்டது. இரு பாதியாக அவர் அறுக்கப்பட்டார். எஞ்சிய அவரது இறைச்சியும் எலும்பும் இரும்புச் சீப்பால் சீவப்பட்டது. இது, அவரை அவரது மார்க்கத்தை விட்டும் மாற்ற வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்துவான். சன்ஆ என்ற ஊரிலிருந்து ஹள்ர்மவ்த் என்ற ஊர் வரைக்கும் ஒரு பயணி அல்லாஹ்வைத் தவிர எவரையும் அஞ்ச மாட்டார். தன் ஆட்டுக்காக ஓநாயைக் கண்டும் பயப்பட மாட்டார். இந்த அளவிற்கு மாற்றம் ஏற்படும். என்றாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 3612)

Thursday, October 21, 2021

நபி நேசம் மட்டும் போதும்

 


அகிலத்தின் அருட்கொடையான அண்ணலம் பெருமான் நபிகள் நாயகம் அவர்களின் புகழை எடுத்துச் சொல்கின்ற மவ்லித் ஷரீஃபும் மீலாது ஷரீஃபும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வசந்தமான காலம் இது.

Thursday, October 14, 2021

ஹதீீஸ் எண் 40 لا يتمنين احدكم الموت

 

فعن أنس -رضي الله تعالى عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((لا يتمنينّ أحدكم الموت لضُر أصابه، فإن كان لابدّ فاعلاً فليقل: اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني إذا كانت الوفاة خيراً لي))([1]) متفق عليه

உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அப்படி ஒருவேளை அவர் செய்வதாக இருந்தால், இறைவா உயிரோடு இருப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக. மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும். (புகாரி ; 5671)

ஹதீஸ் எண் 39 من يرد الله به خيرا يصب منه

 

وعن ابي هريرة رض قال قال رسول الله صل من يرد الله به خيرا يصب منه رواه البخاري

யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவரை சோதிக்கிறான். (புகாரி ; 5645)

ஹதீஸ் எண் 38 انك توعك وعكا شديدا

وعن ابن مسعود -رضي الله عنه- قال: دخلت على النبي -صلى الله عليه وسلم- وهو يُوعَك، فقلت: يا رسول الله، إنك تُوعَك وعْكاً شديداً، قال: ((أجل، إني أُوعَك كما يوعك رجلان منكم)) قلت: ذلك أن لك أجرين؟ قال:((أجل، ذلك كذلك، ما من مسلم يصيبه أذى، شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته، وحُطت عنه ذنوبه كما تَحُطُّ الشجرةُ ورقها

இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி ஸல் அவர்களுக்கு காய்ச்சலாக இருந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். இறைத்தூதர் அவர்களே நீங்களும் கடும் காய்ச்சலினால் அவதிப்படுகிறீர்களே என்று கேட்டேன். ஆம் உங்களில் இருவருக்கு காய்ச்சல் ஏற்படுவது போல் நான் காய்ச்சலுக்கு ஆளாகிறேன் என்று கூறினார்கள். இதற்கு உங்களுக்கு இரண்டு கூலி உண்டா என்று கேட்டேன். ஆம் அவ்வாறு தான். ஒரு முஸ்லிமுக்கு முள் குத்துவது மேலும் அதற்கு மேலாக எந்த நோவினை ஏற்பட்டாலும் அதன் மூலம் அவனது குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல அவனது பாவங்கள் அவனை விட்டும் நீக்கப்படும் என்றார்கள். (புகாரி ; 5647)

Friday, October 8, 2021

ஹதீஸ் எண் 37 ما يصيب المسلم من نصب

فعن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما- عن النبي قال: ما يصيب المسلم من نَصَب، ولا وَصَب، ولا هم، ولا حزن، ولا أذى، ولا غم، حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه

ஒரு முஸ்லிமுக்கு சிரமம் நோய் கவலை துக்கம் நோவினை கடுமையான மன உளைச்சல் மற்றும் அவனுடைய காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்திற்கும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான். (புகாரி ; 5641)

ஹதீஸ் எண் 36 اللهم اغفر لقومي فانهم لا يعلمون

 

عَنْ أَبِي عَبْدِالرَّحْمَنِ عَبْدِاللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، صَلَوَاتُ اللهِ وَسَلَامُهُ عَلَيْهِمْ، ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، فَجَعَلَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ

ஒரு நபியை அவரது சமூகத்தினர் அடித்தார்கள். அவரை ரத்தம் சிந்த வைத்தார்கள். அவர் தன் முகத்தில் ரத்தத்தை துடைத்தவறாக இறைவா எனது இந்த சமூகத்தை மன்னிப்பாயாக நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார் என நபிமார்களில் ஒருவரை பற்றி நபி அவர்கள் கூறிய ஒரு சம்பவம் நான் இன்றும் நேரில் பார்ப்பதைப் போல இருக்கிறது. (புகாரி ; 3477)

ஹதீஸ் எண் 35 الا اريك امراة من اهل الجنة

 

عن عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ؛ فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ»، فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا

அதாஃ பின் அபீ ரபாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ;

சொர்க்க வாதியான ஒரு பெண்ணை உனக்கு நான் காட்டட்டுமா என்று என்னுடைய உஸ்தாது இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சரி என்று நான் கூறினேன். இதோ இந்த கருப்பு நிற பெண் தான் என்று அவர்கள் கூறினார்கள். இப்பெண் ஒருநாள் நபி அவர்களிடம் வந்து நான் வலிப்பு நோயாளி. இதனால் என ஆடை விலகி விடும் நிலை ஏற்படுபவளாக நான் இருக்கிறேன். எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் நீ விரும்பினால் பொறுமையாக இரு. உனக்கு சொர்க்கம் உண்டு. நீ நாடினால் உனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் நான் ஆடை திறக்கப்பட்டு விடும் நிலை உள்ளவனாக இருக்கிறேன். எனவே எனது ஆடை விலகாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டார். பெண்ணுக்காக நபி அவர்கள் துஆ செய்தார்கள். (புகாரி ; 5652)

ஹதீஸ் எண் 33 سالت رسول الله عن الطاعون

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَأَخْبَرَهَا أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللهُ تَعَالَى عَلَى مَنْ يشَاءُ، فَجَعَلَهُ اللهُ تَعَالَى رَحْمَةً لِلْمُؤْمِنينَ، فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ فِي الطَّاعُونِ، فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابرًا مُحْتَسِبًا يَعْلَمُ أَنَّهُ لَا يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; பிளேக் நோய் பற்றி நபி அவர்களிடம் நான் கேட்டேன். தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தும் வேதனையாகும். மேலும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதை அல்லாஹ் அருளாக ஏற்படுத்தி இருக்கிறான். தனக்கு அல்லாஹ் விதித்ததைத் தவிர நோய் ஏற்படாது என்பதை அறிந்து நோய் ஏற்பட்ட அந்த ஊரிலேயே பொறுமையாக நன்மையை எதிர் பார்த்தவனாக இருக்கும் ஒரு அடியானுக்கு ஷஹீதுடைய கூலியைப் போன்றது உண்டு என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் எண் 28 لما ثقل النبي جعل يتغشاه الكرب

 

عَنْ أنَسٍ - رَضِيَ اللهُ عَنْهُ - قَالَ: لَمَّا ثَقُلَ النَّبيُّ -صلى الله عليه وسلم- جَعَلَ يَتَغَشَّاهُ الْكَرْبُ، فَقَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: وَاكَربَ أَبَتَاهُ. فَقَالَ: «لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ»، فَلَمَّا مَاتَ، قَالَتْ: يَا أَبَتَاهُ، أَجَابَ رَبًّا دَعَاهُ! يَا أَبَتَاهُ، جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ! يَا أَبَتَاهُ، إِلَى جبْرِيلَ نَنْعَاهُ! فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ - رَضِيَ اللهُ عَنْهَا -: أَطَابَتْ أنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللهِ -صلى الله عليه وسلم- التُّرَابَ؟![1]؛ رواه البخاري.

நபி அவர்களுக்கு நோய் ஏற்பட்ட போது மரண வேதனை அவர்களை சூழ்ந்து கொண்டது. அப்போது பாத்திமா ரலி அவர்கள் என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் இந்த நாளைக்கு பின் உன் தந்தைக்கு கஷ்டம் எதுவும் இல்லை என்றார்கள். அவர்கள் இறந்த போது என் அன்புத் தந்தையே என்று அழைத்து, தன்னை அழைத்த இறைவனுக்கு பதிலளித்து விட்டார்கள். அவர்களின் ஒதுங்குமிடம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கமாக இருக்கிறது.ஜிப்ரயீல் அலை அவர்களிடம் இதை எப்படி நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்கள். அடக்கம் செய்து விட்டு வந்த போது நபி அவர்கள் மீது மண்ணைப் போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டார்கள். (புகாரி ; 5647)