Friday, August 25, 2023

சந்திரயான் 3 - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகள் நிறைந்தது. வாழ்க்கை முழுக்க வெற்றி மட்டுமே பெற்றவர்களும் இல்லை. வெற்றியே பெறாமல் தோற்றுக் கொண்டே இருப்பவர்களும் இல்லை. வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தால் மனிதனுக்கு தலைக்கனம் வந்து விடும். எப்போதுமே தோற்றுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு மனம் தளர்ந்து விடுவான். எனவே அல்லாஹ் மனிதனுக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி வழங்குகிறான். வெற்றி கிடைக்கும் போது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். தோல்வியை சந்திக்கின்ற போது பொறுமையை மேற்கொண்டு அதிலிருந்து பாடங்களைப் பெற்று தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும்.

Friday, August 18, 2023

தடம் மாறி விட்ட மருத்துவத்துறை

 

அல்லாஹ் நமக்கு கொடையாக வழங்கியிருக்கிற இஸ்லாம் மனித சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த நற்பண்புகளையும் அறிவார்ந்த கருத்துக்களையும் கூறி அதன் மூலம் மனித உள்ளங்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் மனித சமூகத்திற்குச் சொன்ன மிக அற்புதமான கருத்துக்களில் ஒன்று உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பயனுள்ளவனாக இரு. உனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நன்மை செய்பவனாக இரு. உன்னைக் கொண்டு உனக்கு என்ன பயன் கிடைத்தது, கிடைக்கிறது என்பது முக்கியம் இல்லை. உன்னைக் கொண்டு உன் குடும்பம், உன் சொந்த பந்தம், உன் நண்பர்கள், உன் சமூகம் என்ன பயன்களை,பலன்களை அடைந்திருக்கிறது என்பது தான் முக்கியம்.

Thursday, August 10, 2023

இஸ்லாம் பெற்றுத் தந்த சுதந்திரம்

 

இந்தியத் திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையிலும் சென்னை தலைமைச் செயலகத்திலும் பள்ளி கல்லூரிகளில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சூழ்நிலையில், தற்போது அரபி மதரஸாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து இஸ்லாமிய சமூக மக்களும் கொடியேற்றி சுதந்திர தின விழாவை விமர்சையாக கொண்டாடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் மூன்றே தினங்களில் சுதந்திர தினத்தை சந்திக்கயிருக்கிற இந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன ? அவர்கள் அந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கான காரணம் என்ன ? இஸ்லாத்திற்கும் சுதந்திரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை விரிவாக பார்க்க வேண்டும்.

Friday, August 4, 2023

யார் சாத்தானின் பிள்ளைகள் ?

 

ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப் படுகின்ற மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று பாதுகாப்பு.உயிர், உடமைகள்,பொருளாதாரம்,மானம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனிதன் எதிர் பார்க்கிறான்.காரணம் அதில் தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தும் ஒருவருக்கிருந்தும் அமைதியான வாழ்க்கையும், பாதுகாப்பான சூழலும் இல்லையென்றால் அவரால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போய் விடும்.