Thursday, September 21, 2023

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ

 

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்  அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக,  அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது என்ற பெயர்.  Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.

Friday, September 15, 2023

புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்

 அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, September 7, 2023

தீண்டாமையை ஒழித்த இஸ்லாம்

 


உலகத்தில் தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது. இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. நபி அவர்களை சமுதாத்தின் மிகச்சிறந்த தலைவர் என்றும் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னோடி என்றும் சமூகத்தின் ஈடுஇணையற்ற வழிகாட்டி என்றும் உலகில் அனைவரும் தங்களின் முன்மாதிரியான எடுத்துக் கொள்ள வேண்டிய மகத்தான மாமனிதர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்கும் பலர், அதற்குக் காரணமாக அவர்கள் குறிப்பிடும் முதன்மையான விஷயம் நபி அவர்கள் ஏற்படுத்திய சமத்துவம் தான். முஹம்மது நபியின்  இந்த மகத்தான வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் கொண்டிருந்த கொள்கை உறுதியும் யாருக்காகவும் எதற்காகவும் கொள்கையில் பின்வாங்காத அந்த கொள்கைப் பிடிமானமும். இரண்டாவது காரணம் அவர்கள் போதித்த சமத்துவம் என்று எஸ். எச். லீடர் என்ற மாற்றுமத அறிஞர் குறிப்பிடுகிறார்.