Showing posts with label மீலாது. Show all posts
Showing posts with label மீலாது. Show all posts

Thursday, August 28, 2025

மாநபியின் குழந்தைப் பருவம்

  


اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா? (அல்குர்ஆன் : 93:6)

நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். நபி ஸல் அவர்கள் எதீமாகவே பிறக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு.

Friday, August 22, 2025

அண்ணல் நபியின் அதிசயப் பிறப்பு



அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, September 21, 2023

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ

 

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்  அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக,  அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது என்ற பெயர்.  Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.

Friday, September 15, 2023

புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்

 அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Friday, October 30, 2020

நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள்


 

வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனை களுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் எந்த கேள்விக்கும் பதிலாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் அவர்கள் தான்.

Friday, October 23, 2020

நபியே! நீங்கள் எந்தக் குறைகளும் இல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்


 

நபிகள் நாயகம் அவர்கள் அகிலத்திற்கு வந்த வசந்தமான இந்த ரபீவுல் அவ்வல்  மாதத்தில் மாநபியின் தூய்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

Friday, October 16, 2020

நபியின் வரவால் உலகம் பெற்ற நன்மை

 


அல்லாஹ்வின் பேரருளால் அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதம் பிறக்க இருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் பரக்கத் பொருந்திய மாதம், அருள் நிறைந்த மாதம், எண்ணற்ற பாக்கியங்களை உள்ளடக்கிய மாதம் இந்த ரபியுல் அவ்வல் மாதம். இஸ்லாத்தின் 12 மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதம் பரக்கத்தானது பாக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு நபி அவர்கள் இந்த மாதத்தில் பிறந்தார்கள் என்ற ஒரு காரணமே போதுமானது.

Thursday, November 8, 2018

மாநபியின் மீலாது


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلي خلق عظيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் ரபீவுல் அவ்வல் மாதத்திலே  பிறந்தார்கள்.
மனிதருல் மாணிக்கமான,நபிமார்களின் தலைவரான அல்லாஹ் வின் நேசரான நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, அவர்கள் நமக்கு சொன்ன விஷயங்களை காலம் முழுக்க பேசப்படுகிறது.வருடம் முழுக்க பேசப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல், அவர்கள் சொன்ன விஷயங்களை சொல்லாமல் நமக்கு எந்த நாளும் கழியாது. அந்தளவு நபி ஸல் அவர்கள் நம் வாழ்க்கையோடு கலந்திருக்கிறார் கள்.
அதுமட்டுமல்ல ரபீவுல் அவ்வல் 12 நபி ஸல் அவர்களின் பிறந்த நாள்.அவர்கள் பிறந்த  அந்த நாளில் உலகம் முழுக்க அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடப்படுகிறது. நாமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உலகத்தில் ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு தான் கொண்டாடப்படும்.ஆனால் நபி ஸல் அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அவர்களுக்காக அல்லாஹ்வே மீலாது விழா கொண்டாடி விட்டான்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு ஆலமுல் அர்வாஹில் அனைத்து நபிமார்களையும் ஒன்று சேர்த்து முஹம்மது என்று ஒரு நபி வருவார்கள்.அவர்களை நீங்கள் ஈமான் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன போது அனைத்து நபிமார்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் இன்றைக்கு உலகில் மீலாது விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் வல்லோன் அல்லாஹ் வானத்திலேயே அண்ணல் நபி ஸல் அவர்களுக்காக மீலாது விழா நடத்தி விட்டான். எனவே இந்த மீலாதை பித்அத் என்றும் அனாச்சாரம் என்றும் மார்க்கத்தில் இல்லாத காரியம் என்றும் குறை சொல்பவர்கள் உண்மையில் அவர்கள் மார்க்கம் தெரியாதவர்களாகத்தான் இருக்கும்.அல்லாஹ் பாதுகாப்பானாக என்று கூறி என் உரைக்கு திரையிட்டு விடை பெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


அவர்களுக்காக  மவ்லிது ஓதுவதும் அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவதும் அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான அன்பின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான பிரியத்தின் வெளிப்பாடு.அவர்களின் மீது நாம் வைத்திருக்கிற உண்மையான காதலின் வெளிப்பாடு.

அவர்களின் மீது உண்மையான அன்பும் பிரியமும் காதலும் இருப்பவர்கள் தான் அவர்களுக்காக மவ்லிது ஓதுவார்கள். அவர்களுக்காக மீலாது விழா கொண்டாடுவார்கள்.வெறும் உதட்டளவில் மட்டும் நபியை நேசிக்கிறோம், நபியை நேசிக்கிறோம் என்று சொல்லி விட்டு உள்ளத்தில் நபியைப்பற்றி கொஞ்சம் கூட நேசம் இல்லாதவர்களுக்கு இந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக உள்ளத்தால் நபியை நேசிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.
நாம் மவ்லிது ஓதுகிறோம்.மீலாது விழா கொண்டாடுகிறோம் என்றால் நாம் உண்மையில் அவர்களின் மீது நேசம் வைத்திருக்கிறோம் என்பதற்கான அடையாளம் தான் அது.இந்த நேசத்தை அல்லாஹ் நம் மரணம் வரை நிலைக்கச் செய்வானாக.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே மவ்லிது என்றாலே அது பித்அத் என்றும், அது அனாச்சாரம் என்றும், மாரக்கத்தில் இல்லாத காரியம் என்றும், நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியம் என்றும் இன்றைக்கு ஒரு சில குழப்பவாதிகள் உளரிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி சொல்லி அப்பாவி மக்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
ஆனால் நபி ஸல் அவர்களின் சிறப்புக்களை அவர்களின் உயர்வுகளை அவர்களின் அந்தஸ்துகளை அவர்களின் நற்குணங்களை அவர்கள் செய்த சாதனைகளைக்கூறி அவர்களைப் புகழ்வதற்குப் பெயர் தான் மவ்லிது. இந்த மவ்லிது பித்அத் அல்ல,அனாச்சாரம் அல்ல.மார்க்கத்தில் இல்லாத காரியம் அல்ல.நரகத்தில் கொண்டும் போய் சேர்க்கும் காரியமும் அல்ல. மாறாக நம்முடைய அந்தஸ்தை உயர்த்தி நம்மை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்கும் மிக உயர்ந்த காரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நபி ஸல் அவர்களே பல சமயங்களில் இந்த மவ்லிதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.அதன் மீது ஸஹாபாக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தன்னை புகழ்ந்து பாடிய ஹஸ்ஸான் ரலி அவர்களுக்காக அண்ணல் நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு மேடையை அமைத்துக் கொடுத்து اللهم ايده بروح القدس   வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் அலை அவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை  உறுதிபடுத்துவானாக என்று துஆ செய்தார்கள் என்றால் எந்தளவு நபி ஸல் அவர்கள் மவ்லிது ஓதுவதை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


நாயகம் ஒரு அருட்கொடை



الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.நாயகம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் நான் பேச வந்திருக்கிறேன்.