Friday, June 24, 2022

குரல் கொடுப்போம் வாருங்கள்




நாட்டில் நடக்கிற அநீதங்களையும் அக்கரமங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிற அடக்குமுறைகளையும் கடந்த வாரம் நாம் அலசினோம். இவ்வாறு அநீதங்களும் அக்கரமங்களும் அடக்குமுறைகளும் நடக்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிறோம். இதுமாதிரியான நேரங்களில் நாம் நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நாம் பாவங்களை குறைத்துக் கொண்டு செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு ஏற்படும் அத்தனை சோதனைகளுக்கும் காரணம் நம் பாவங்கள் தான்.

Thursday, June 16, 2022

இது இந்தியாவா ? இல்லை இஸ்ரேலா ?

இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

Thursday, June 9, 2022

அவர்கள் மோசமான முடிவுகளைத் தான் சந்திப்பார்கள்

 

கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.

Friday, June 3, 2022

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

 


هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 2:29)