Thursday, February 23, 2023

இளம் வயது மரணங்கள்

 

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது நிச்சயமானது. உறுதியானது. பிறப்பவர் என்றாவது ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும். உலகிலுள்ள அனைத்துத் தரப்பினரும் கருத்து வேற்றுமைக்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக்கொண்டிருக்கிற, நம்பியிருக்கிற ஒரு விஷயம் மரணம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் பல நூறு மரணங்களை நாம் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.

Friday, February 17, 2023

சிறைகளுக்குள்ளேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது

 

وكذلك جعلنكم امة وسطا

அவ்வோறே நடுநிலைச் சமூகமாகவும் நாம் உங்களை ஆக்கினோம். (அல்குர்ஆன் : 2 ; 143)

நாம் பின்பற்றி வாழுகின்ற இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் நடுநிலையைக் கற்றுத் தரும் ஓர் ஒப்பற்ற மார்க்கம்.படைத்தவனுக்காக படைப்பினங்களையோ படைப்பினங்களுக்காக படைத்தவனையோ மறந்து விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விருவரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது.ஆன்மிகத்திற்காக உலகத்தையோ உலகத்திற்காக ஆன்மிகத்தையோ விட்டு விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டும் வேண்டும் என்று கூறுகிறது.பூர்வீகத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சமகாலத்தையோ சமகாலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பூர்வீகத்தையோ கண்டு கொள்ளாமல் இருப்பதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது.கசப்பான கடந்த காலத்தை நினைத்து வருங்காலத் திட்ட மில்லாமல் இருப்பதோ கடந்த காலத்தை மறந்து வருங்காலத் திட்டமிடுவதோ நடுநிலையல்ல. கடந்த காலத்தை மறக்காமல் வருங்காலத் திட்டமிடல் வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

Thursday, February 9, 2023

பேரிடர்களும் நாம் பெற வேண்டிய பாடங்களும்

 

கடந்த நான்கு நாட்களாக அனைத்து ஊடகங்களையும் ஆக்கர மித்திருப்பது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்திகள் தான். அந்த அதிர்ச்சி செய்தியும் அதன் புகைப் படங்களும் அனைவரின் உள்ளங்களையும் நடுங்கச் செய்து விட்டது. அந்த மக்களின் மரண ஓலங்களும் அவர்கள் விட்ட கண்ணீர்த் துணிகளும் கல்நெஞ்சம் கொண்டவர்களின் இதயங்களையும் கரையச் செய்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலருக்கு மறுநாள் விடியாமலேயே போய் விட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஃபஜ்ருக்கு முன் என்பதால் தப்பிக்க வாய்ப்பில்லாமல் பல ஆயிரம் பேர் அப்படியே ஷஹீதாகி விட்டார்கள்.

Thursday, February 2, 2023

இளவல்களோடு இணைந்து பயணிப்போம்

 

நம் சமூகத்து வாலிபர்களை நெறிப்படுத்துவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்ன என்பதைப் பற்றி பேசி வருகிறோம். மக்தப் மதரஸாக்களை மேப்படுத்துவது நல்ல நட்பை உருவாக்கித் தருவது என இரு விஷயங்களை கடந்த வாரங்களில் பார்த்து விட்டோம். வாலிபர்களை ஒழுங்குபடுத்து வதற்கும் சீர்படுத்துவற்கும் அவர்களை நேரிய பாதையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதற்கும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை அவர்களை எப்போதும் நம்மோடு வைத்துக் கொள்வது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வது.