கடந்த நான்கு நாட்களாக அனைத்து ஊடகங்களையும் ஆக்கர மித்திருப்பது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்திகள் தான். அந்த அதிர்ச்சி செய்தியும் அதன் புகைப் படங்களும் அனைவரின் உள்ளங்களையும் நடுங்கச் செய்து விட்டது. அந்த மக்களின் மரண ஓலங்களும் அவர்கள் விட்ட கண்ணீர்த் துணிகளும் கல்நெஞ்சம் கொண்டவர்களின் இதயங்களையும் கரையச் செய்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலருக்கு மறுநாள் விடியாமலேயே போய் விட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஃபஜ்ருக்கு முன் என்பதால் தப்பிக்க வாய்ப்பில்லாமல் பல ஆயிரம் பேர் அப்படியே ஷஹீதாகி விட்டார்கள்.