Friday, November 27, 2020

யார் இறைநேசர்

 


இறைத்தூதர்கள் செய்த பணியை அவர்கள் இடத்தில் இருந்து நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வலிமார்கள். தங்களுக்கென்று தனி அடையாளங்களோடு தனி முகவரிகளோடு இல்லாமல் மக்களோடு மக்களாக மனிதர்களில் மனிதர்களாக இருக்கிற காரணத்தினால் நிறைய வலிமார்கள் அறியப்படுவதில்லை.நிறைய வலிமார்கள் தங்களை யாரென்று காட்டிக் கொள்வதுமில்லை என்று வலிமார்கள் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை கடந்த வாரம் நாம் பார்த்தோம்.

Friday, November 20, 2020

நான்கில் நான்கை மறைத்துள்ளான்

 


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் ரபீவுல் அவ்வல் நிறைவு பெற்று ரபீவுல் ஆகிர் தொடங்கியிருக்கிறது.உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற உயர்த்திப் பேசப்படுகிற பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம். உலகத்திலுள்ள இறைநேசர்கள் வலிமார்களின் தலைவரான ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற இந்த மாதத்தில் இறைநேசர்கள் குறித்து நாம் சிந்திக்கலாம்.