Thursday, April 27, 2023

ரமலான் கபூலாகி விட்டதா ?

 

அருள்மிக்க ரமலான் மாதத்தை அடைந்து பகல் காலங்களில் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இன்னும் பல்வேறு அமல்களை செய்த திருப்தியிலும் பெருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியிலும் நாம் அமர்ந்திருக்கிறோம். இது ரமலான் மாதத்தில் நாம் செய்த அமல்களைக் குறித்து சிந்திக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு நேரம். ஏனென்றால் மிகப்பெரும் சிரத்தை எடுத்து ஒரு காரியத்தை மேற்கொண்டோம், செய்து முடித்தோம். அத்தோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அது வெற்றி பெற வேண்டும். அது நல்ல முடிவைத் தர வேண்டும். அது தான் மிக முக்கியமானது. 

Friday, April 21, 2023

பெருநாள் தர்மம்


அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். பெரும்பாலும் ஒரு மாதத்தில் நான்கு ஜும்ஆக்கள் தான் இருக்கும். ஆனால் இவ்வருடம் ஜும்ஆ தினத்திலிருந்தே ரமலான் தொடங்கியதால் ஐந்து ஜும்ஆக்களை தொழுகும் நஸீபை இறைவன் தந்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்! நன்மைகளை அள்ளித்தரும் ரமலான், பாவங்களை பொசுக்கும் ரமலான், மனித உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் ரமலான், இஸ்லாமியச் சமூகத்தை இறை இல்லங்களோடு இணைக்கும் ரமலான், வணக்கங்களில் இன்பம் காண வைக்கும் ரமலான் நம்மை விட்டும் விடைபெறப் போகிறது. இது ரமலானின் இறுதி நாளாக இருந்தாலும் இது நமக்கு இறுதி ரமலானாக ஆகி விடாமல் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து நம் வாழ்வில் எண்ணற்ற ரமலான்களை சந்திக்கின்ற வாய்ப்பினைத் தருவானாக!

Saturday, April 15, 2023

அவர்கள் கழுதையைப் போன்றவர்கள்

 

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌  بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் : 62:5)

Friday, April 14, 2023

நரகம்

 அல்லாஹ்வின் அருளால் புனித ரமலானை அடைந்து அதன் முதல் இரு பகுதிகளைக் கடந்து அதன் மிக முக்கியமான மூன்றாவது பகுதியில் இருக்கிறோம். ரமலான் மாதத்தினுடைய மூன்றாம் பகுதி நரகத்தின் விடுதலையை நரகிலிருந்து பாதுகாப்பை நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனிடம் கேட்கும் ஒரு பகுதி. இந்த நேரத்தில் நரகத்தைப் பற்றிய சிந்தனை நமக்கு வர வேண்டும்.உண்மையில் நரகத்தின் சிந்தனை நம் வாழ்க்கையை செதுக்கும், பக்குவப்படுத்தும். நமக்கு இறையச்சத்தைத் தரும். பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். வணக்க வழிபாடுகளில் அதீத ஈடுபாட்டைத் தரும்.

Thursday, April 13, 2023

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்

 

ﺇِﺫْ ﻳَﺘَﻠَﻘَّﻰ ﺍﻟْﻤُﺘَﻠَﻘِّﻴَﺎﻥِ ﻋَﻦِ ﺍﻟْﻴَﻤِﻴﻦِ ﻭَﻋَﻦِ ﺍﻟﺸِّﻤَﺎﻝِ ﻗَﻌِﻴﺪٌ . ﻣَﺎ ﻳَﻠْﻔِﻆُ ﻣِﻦ ﻗَﻮْﻝٍ ﺇِﻟَّﺎ ﻟَﺪَﻳْﻪِ ﺭَﻗِﻴﺐٌ ﻋَﺘِﻴﺪٌ

(மனிதனின்) வலப்பறத்திலும் இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் : 50 ; 17,18)

Wednesday, April 12, 2023

இதுவே தெளிவான வெற்றி

 

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அல்குர்ஆன் : 48:1)

Tuesday, April 11, 2023

நான்கு CCTV கேமராக்கள்

 

حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். (அல்குர்ஆன் : 41:20)

Monday, April 10, 2023

மகிழ்ச்சி கூடும்,கூடாது

 

ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْـتُمْ تَمْرَحُوْنَ‌ ‏

(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" என்றும், (அல்குர்ஆன் : 40:75)

Sunday, April 9, 2023

அமானிதம்

 

اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ‏

நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். (அல்குர்ஆன் : 33:72)

Friday, April 7, 2023

பொருளாதார சமநிலையும் ஜகாத்தும்

 உலகில் வாழும் மக்களிடையே ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், அடிமை வா்க்கம் என்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் உண்டு. அந்த ஏற்றத்தாழ்வுகளும் வித்தியாசங்களும் ஜனநாயகத்தின் மூலமாக மாற்றப்பட்டு, அம்பானிக்கும் ஒரு வாக்கு, குடிசையில் வசிக்கும் சுப்பனுக்கும் ஒரு வாக்கு என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான வாக்குரிமை அளித்து அரசியல் சமநிலையை பெரும்பாலான நாடுகளில் கொண்டு வரப்பட்டு விட்டது.

ஹுத்ஹுத்

 

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) (அல்குர்ஆன் : 27:20)

Thursday, April 6, 2023

அவதூறு

 

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்:24:4.)

Wednesday, April 5, 2023

மதில் மேல் பூனை

 

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற   நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (அல்குர்ஆன் : 22:11)

Tuesday, April 4, 2023

நூலைப் போல சேலை

 

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏

பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். (அல்குர்ஆன் : 19:27)

Monday, April 3, 2023

அழைப்புப் பணி

 

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் : 16:125)

Sunday, April 2, 2023

நிம்மதி

 

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌  اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 13:28)

Saturday, April 1, 2023

வான்மறை கூறும் வரலாறுகள்

 

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)