Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Thursday, March 21, 2024

தராவீஹ் - 12 ஏன் இந்த அவசரம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு  


(இரண்டு நாட்களாக தொண்டைக் கட்டு ஏற்பட்டு அதனால் தராவீஹ் தொழ வைப்பதற்கும் பயான் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறேன். உலமாப் பெருமக்களின் துஆவை ஆதரவு வைக்கிறேன். விரைவாக குணம் கிடைக்க அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌  وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

Wednesday, March 13, 2024

இதுவே அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ  وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்த வற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது. (அல்குர்ஆன் : 4:113)

Monday, March 11, 2024

தராவீஹ் 1 நடுநிலைச் சமூகம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கனினி பழுதடைந்திருந்ததால் நீண்ட நாட்களாக ஜும்ஆ குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் அருளாலும் உலமாப் பெருமக்களின் துஆ பரக்கத்தாலும்  தராவீஹ் குறிப்பிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறேன். தொய்வின்றி தொடர்வதற்கும் உடலும் மனதும் ஒத்துழைப்பதற்கும் நேரத்தில் பரக்கத் ஏற்படுவதற்கும் அனைவரும் துஆ செய்வீர்கள் என ஆதரவு வைக்கின்றேன். 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَكَذَ ٰ⁠لِكَ جَعَلۡنَـٰكُمۡ أُمَّةࣰ وَسَطࣰا

அவ்வாறே நாம் உங்களை நடுநிலைச் சமூகமாக ஆக்கினோம். (2:143)

Thursday, April 27, 2023

ரமலான் கபூலாகி விட்டதா ?

 

அருள்மிக்க ரமலான் மாதத்தை அடைந்து பகல் காலங்களில் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இன்னும் பல்வேறு அமல்களை செய்த திருப்தியிலும் பெருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியிலும் நாம் அமர்ந்திருக்கிறோம். இது ரமலான் மாதத்தில் நாம் செய்த அமல்களைக் குறித்து சிந்திக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு நேரம். ஏனென்றால் மிகப்பெரும் சிரத்தை எடுத்து ஒரு காரியத்தை மேற்கொண்டோம், செய்து முடித்தோம். அத்தோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அது வெற்றி பெற வேண்டும். அது நல்ல முடிவைத் தர வேண்டும். அது தான் மிக முக்கியமானது. 

Thursday, May 5, 2022

ரமலான் கபூலாக வேண்டுமா ?

அல்லாஹ்வின் பேருதவியால் மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களைச் செய்த மகிழ்ச்சி யிலும் திருப்தியிலும் நாம் இருக்கிறோம்.ரமலான் முடிந்திருக்கிற இந்த வேளையில் நம் சிந்தனையும் மனோநிலையும் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

Thursday, April 21, 2022

ரமலான் இறுதிப்பத்து

 

அல்லாஹ்வின் மகத்தான அருளால் புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் 20 வது நோன்பில் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் மிக மிக முக்கிய பகுதியாக இருக்கிற இறுதிப் பத்தை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு அடைய இருக்கிறோம்.

Saturday, April 2, 2022

ரமலான் காலங்கள் தனித்துவமானவை

 

அல்லாஹ்வின் பேரருளால் மகத்துவம் பொருந்திய ரமலான் மாதத்தின் முதல் தராவீஹில் நாம் அமர்ந்திருக்கிறோம்.ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடுகிறது. நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்கிறது.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடுகிறது.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தருகிறது. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.மற்ற காலங்களில் எந்த நாளிலும் சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது. எதையும் குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது.ஆனால் இந்த நோன்பு காலங்களில் பசி இருக்கும், தாகம் இருக்கும், ஆனால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமோ குடிக்க வேண்டும் என்ற உணர்வோ நமக்கு வருவதில்லை. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்துவம்.

Thursday, March 10, 2022

காத்திருப்பதும் நன்மையே

 


இன்றைக்கு நாம் நம் வாழ்வில் எத்தனையோ விஷயங்களை எதிர் பார்க்கிறோம், எத்தனையோ விஷயங்களுக்காக காத்திருக்கிறோம். காத்திருத்தல் என்பது எல்லோரின் வாழ்விலும் நடக்கிற தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. ஒன்று மற்றவருக்காக நாம் காத்திருப்போம். அல்லது நமக்காக மற்றவரை காத்திருக்கச் செய்வோம்.

Thursday, April 15, 2021

நோன்பாளிகள் பாக்கியமானவர்கள்


புனிதம் நிறைந்த பாக்கியம் பொருந்திய அருள் நிறைந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம்.

Saturday, August 22, 2020

ரமலானில் அதிகம் செய்ய வேண்டிய 4 காரியங்கள்

 

 

واستكثِروا فيه من أربعِ خصالٍ : خَصلتَينِ تُرضون بهما ربَّكم، وخَصلتَينِ لا غنى لكم عنهما، فأما الخصلتانِ اللتان تُرضون بهما ربكم فشهادةُ أن لا إله إلا اللهُ وتستغفرونهُ، وأما اللتان لا غنى لكم عنهما فتسألونَ اللهَ الجنةَ وتعوذون بهِ من النارِ

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ;

ரமலானில் நான்கு காரியங்களை அதிகமாக செய்து கொள்ளுங்கள்.அதில் இரண்டு அல்லாஹ்வை திருப்திப் படுத்தும். இன்னொரு இரண்டை விட்டும் நீங்கள் தேவையற்று இருக்க முடியாது.

Monday, June 29, 2020

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.

Thursday, November 8, 2018

நோன்பின் மாண்பு


புனிதனம் நிறைந்த பாக்கியம் நிறைந்த அருள் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த மாதம் கிடைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்து, நம்மையும் துஆ செய்யும் படி தூண்டிய மாதம் தான் ரமலான் மாதம்.