Showing posts with label அவசரம். Show all posts
Showing posts with label அவசரம். Show all posts

Thursday, March 21, 2024

தராவீஹ் - 12 ஏன் இந்த அவசரம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு  


(இரண்டு நாட்களாக தொண்டைக் கட்டு ஏற்பட்டு அதனால் தராவீஹ் தொழ வைப்பதற்கும் பயான் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறேன். உலமாப் பெருமக்களின் துஆவை ஆதரவு வைக்கிறேன். விரைவாக குணம் கிடைக்க அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌  وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

Monday, March 7, 2022

அவசரம் ஆபத்து

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 

قال النبي صلي : الاناة من الله والعجلة من الشيطان


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியங்கள் 5 ; ஹஜ்




இஸ்லாத்தின் பார்வையில் ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் விரைவாக செய்ய வேண்டிய அடுத்து மிக முக்கியமான இறுதிக் கடமையான ஹஜ்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 4 ; திருமணம்



வாழ்க்கையில் அவசரமாக செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப்படுத்திய வலியுறுத்திய விஷயங்களை நாம் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று திருமண வயதை அடைந்த பெண்ணை மணமுடித்து வைப்பது,ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஜோடி அமைந்து விட்டால் அந்தப் பெண்ணை மணமுடித்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 3 ; விருந்தோம்பல்



வாழ்க்கையில்  எந்தக் காரியத்தை செய்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது உலகம் சார்ந்த காரியமாக இருந்தாலும் மறுமையை நோக்கமாகக் கொண்ட காரியமாக இருந்தாலும் அதிலே நின்று நிதானமாக அமைதியாக பக்குவமாக பொறுமையாக யோசித்து, செய்யலாமா? வேண்டாமா? அது நன்மையா? தீமையா? நமக்கு அது தேவையா? தேவை இல்லையா? என்று தீர்க்கமாக முடிவு செய்து அதற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அந்த நிதானமும் பொறுமையும் தான் அந்த காரியத்தில் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய காரியம் 2 ; கடனை அடைப்பது.



இஸ்லாம் எதிலும் அவசரம் கூடாது, எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்ன அதே நேரத்தில் ஒரு சில காரியங்களை துரிதமாகச் செய்ய வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அதை தள்ளிப் போடாமல்  விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.அதில் ஒன்று கடனாளிகள் குறித்தது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை



வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.