Showing posts with label ஜும்ஆ பயான். Show all posts
Showing posts with label ஜும்ஆ பயான். Show all posts

Saturday, September 5, 2020

வாய்ப்புக்களை பயன்படுத்துவோம்

 

அல்லாஹுத்தஆலா நம்மை உலகத்தில் படைத்து நமக்கு அழகானதொரு  வாழ்க்கையைக் கொடுத்து அந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை  விஷயங்களையும் அமைத்துத் தந்திருக்கிறான். அந்த வாழ்கையை அனுபவிப்பதற்குத் தேவையான அறிவையும் தெளிவையும் சாதுர்யத்கையும் வழங்கியிருக்கிறான். மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் பெற்றுக் கொள்வதற்கு சில சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும்  அவ்வப்போது தருகிறான். அப்படி அல்லாஹ் தருகிற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சரியாக முறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள் தான் உண்மையில் புத்திசாளிகள். வெற்றியாளர்கள். கிடைக்கிற சந்தர்ப்பங்களை நவுவ விடுபவர்கள் புத்திசாளிகளாகவும் இருக்க முடியாது. வெற்றியாளர்களாகவும் திகழ முடியாது.

Wednesday, September 2, 2020

ஸலாமின் வழியே ஒற்றுமையை வளர்ப்போம்

 


ஒற்றுமை ஏற்பட இஸ்லாம் வழிகாட்டும் அடுத்த விஷயம் ஸலாம்.ஸலாமைப் பரப்புதல்.

لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم‏؟‏ أفشوا السلام بينكم

நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனத்தில் நுழைய முடியாது.நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவர்களாக ஆக முடியாது. எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வீர்களோ அத்தகைய ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (முஸ்லிம் ; 54)

Thursday, August 27, 2020

பணிவின் மூலம் ஒற்றுமையை வளர்ப்போம்

 

சமூகத்தில் ஒற்றுமை மேம்படுவதற்கு இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டுதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமை சிதைந்து போனதற்கும் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் நாம் அலசி வருகிறோம்.அந்த வகையில் ஒற்றுமையை சிதைக்கக்கூடிய ஆபத்தான விஷயங்களில் ஒன்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிற குணம்.

Wednesday, August 26, 2020

அன்பளிப்புகளைக் கொண்டு ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்

 

ஒற்றுமை தான் நமக்கான பலம், ஒற்றுமை தான் நமக்கான அடிப்படை. அந்த ஒற்றுமை சீர்குலைந்து விட்டால் நாம் பலம் குன்றிப் போய் விடுவோம். ஸஹாபாக்களிடம் அந்த ஒற்றுமை இருந்ததினால் அவர்கள் சொற்பமாக இருந்தும் குறுகிய காலத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைக்கு உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் பலத்தில் சிறுபான்மையாகத்தான் இருக்கிறோம். அதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது என்று கடந்த வார ஜும்ஆவில் குறிப்பிட்டோம்.

ஒற்றுமையே நம் பலம்

 


ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு நபி அவர்கள் மதினமாநகரம் சென்றவுடன் அவர்கள் ஆரம்பமாக நான்கு காரியங்களை செய்தார்கள்.1 அல்லாஹ்வை தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்டியெழுப்பினார்கள். 2வது மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மதரஸாவை உருவாக்கினார்கள். இவ்விரண்டும் படைத்தவனோடு தொடர்புடையவை.

Thursday, August 20, 2020

ஹிஜ்ரி தொடக்கம்

 

                          

அல்லாஹ்வின் கிருபையால் ஹிஜ்ரி 1444 ஐ நிறைவு செய்து விட்டு 1445 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறோம்.இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடைந் திருக்கிறோம்.இந்த முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட மகத்தான மாதம்.பல்வேறு சிறப்புக் களையும் உயர்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற மாதம்.

Wednesday, August 19, 2020

ஹிஜ்ரத் தரும் பாடம்

 

ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஹிஜ்ரிப் புத்தாண்டு என்றவுடன் சட்டென்று நம் அனைவரின் நினைவிலும் சிந்தனையிலும் உதிப்பது நபி அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களும் தன் சொந்த நாட்டை விட்டு, தன் சொந்த ஊரை விட்டு, தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் குடும்பத்தை விட்டு, தன் சொத்துக்களை விட்டு, தன் சொந்த பந்தங்களை விட்டு அல்லாஹ்வின் கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் பொருத்தம் என்ற ஒரே இலக்கை முன்னிறுத்தி மதீனா நோக்கி இடம் பெயர்ந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஹிஜ்ரத் பயணம் தான். அந்த ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இஸ்லாமிய வருடக்கணக்கு தொடங்கியது,இன்று 1442 ஐத் தொட்டிருக்கிறோம்.

ஹிஜ்ரத் ஏன்

 

அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்திக்க இருக்கிறோம்.நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய தேதிக்குறிப்பும் இஸ்லாமிய காலண்டரும் உருவாக்கப்பட வில்லை. அதற்கான தேவையும் ஏற்பட வில்லை. ஹள்ரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ரொம்ப தூரம் விரிவடைந்து உலகத்தின் பல நாடுகளிலும் இஸ்லாமியக்காற்று வீச ஆரம்பித்த போது தான் இஸ்லாமிய காலண்டருக்கான தேவையும் அவசியமும் ஏற்படுகிறது.அன்றைக்கு பக்கத்து மாகானங்களில், பக்கத்து நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸஹாபாக்களும் அதை வலியுறுத்தினார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட ஹழ்ர்த உமர் ரலி அவர்கள் அதை ஆமோதித்தார்கள்.எதிலிருந்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்ற பிரச்சனை வந்த போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.அந்த நேரத்தில் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்று சொன்னதோடு அதற்கு ஒரு காரணத்தையும் குறிப்பிட்டார்கள்.

Tuesday, August 18, 2020

சுத்தம் சுகாதாரம்

 


நம் மார்க்கம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அதன் அவசியத்தை கூறியதோடு மட்டுமின்றி அதை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Sunday, August 16, 2020

துஆவின் வலிமை

 

    (குடியுரிமைப் பிரச்சனை நிலவும் நேரத்தில் பேசிய ஜும்ஆ உரை)

இப்பொழுது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலைகள் நமக்கு நன்றாக தெரியும். குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு  நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் பூர்வீகமாக வசித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு  இனிவரும் நாட்களில் நாட்டை விட்டு துறத்தப்படுகின்ற அல்லது அகதிகளாக ஆக்கப்படுகின்றன மிக மோசமான ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நம்நாடு போய்க்கொண்டிருக்கிறது.அல்லாஹ் அந்த ஆபத்தான சூழ்நிலை வராமல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பானாக.

Friday, August 14, 2020

கொரோனாவும் இறைச் செய்தியும்

 

            (ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.

Thursday, August 13, 2020

படைத்தவனிடம் ஆரோக்கியத்தைக் கேட்போம்

 

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செலவம், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம், நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம், இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த, மிகவும் மேலான, ஈடுஇணையற்ற செல்வம் உடல் ஆரோக்கியம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

Thursday, July 30, 2020

ஹஜ் இறுதிக் கடமையல்ல



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதமான துல்கஅதா மாதத்தில் அமர்ந்திருக்கிறோம்.

Monday, July 27, 2020

நம் ஆசைகள் எப்படி இருக்க வேண்டும்



உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் ஆசைகளும் எதிர் பார்ப்புக்களும் உண்டு. ஆனால்  அவைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒரு நோயாளி ஆரோக்கியத்தை ஆசைப்படுவான். ஒரு ஏழை செல்வத்தை ஆசைப்படுவான்.ஒரு செல்வந்தன் செல்வாக்கை ஆசைப்படுவான். மக்களிடம் செல்வாக்கைப் பெற்ற ஒருவன் பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படுவான். இப்படி மனித உள்ளங்களில் இருக்கிற ஆசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பல வடிவங்கள் இருக்கிறது. பல தோற்றங்கள் இருக்கிறது.

Tuesday, June 30, 2020

நபியின் மகத்தான குடும்பம்





இஸ்லாமிய மாதங்களின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். شهر الله  அல்லாஹுடைய மாதம் என்று மாநபி    அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மாதம் இந்த முஹர்ரம் மாதம். வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களையும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் நமக்கு நினைவுபடுத்துவதைப் போல வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதம் அண்ணல் நபி    அவர்களின் குடும்பமான அஹ்லு பைத்துகளை நமக்கு நினைவுபடுத்தும்.

Monday, June 29, 2020

மனத்தூய்மை



அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் :
ان الذين امنوا وعملو الصلحات كانت لهم جنات الفردوس نزلا
நிச்சயமாக ஈமான் கொண்டு நல் அமல்களைச் செய்தவர்களுக்கு தங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் எனும் தோட்டங்கள் இருக்கிறது” (அல்குர்ஆன் : 18 ; 107)

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.

பரக்கத் என்றால் என்ன ?



                                       

நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.

அல்லாஹ்வின் அன்பை அல்லாஹ்விடம் அன்பைக் கேட்போம்




அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம் என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.