Sunday, August 16, 2020

துஆவின் வலிமை

 

    (குடியுரிமைப் பிரச்சனை நிலவும் நேரத்தில் பேசிய ஜும்ஆ உரை)

இப்பொழுது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலைகள் நமக்கு நன்றாக தெரியும். குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு  நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் பூர்வீகமாக வசித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு  இனிவரும் நாட்களில் நாட்டை விட்டு துறத்தப்படுகின்ற அல்லது அகதிகளாக ஆக்கப்படுகின்றன மிக மோசமான ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நம்நாடு போய்க்கொண்டிருக்கிறது.அல்லாஹ் அந்த ஆபத்தான சூழ்நிலை வராமல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பானாக.

நாட்டு மக்களின் வாழ்வுரிமையை, குடியுரிமையை கேள்விக்குறியாக்கக்கூடிய இந்த சட்டத்திற்கு நம் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங் களும் போராட்டங்களும் இது குறித்த விவாதங்களும் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். கருப்பு இனத்து அடிமையாக இருந்தாலும் பொறுப்பில் இருக்கிற தலைவருக்கும் அமீருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று சொன்ன அதே இஸ்லாம் தான் அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு முன்னாள் சத்தியத்தை எடுத்துச் சொல்வது மிகப்பெரிய ஜிஹாத் என்றும் தவறுகளும் அநியாயங்களும் நடக்கிற பொழுது அதை தடுப்பதற்கு முடிந்தவரை போராட வேண்டும் என்றும் சொல்கிறது.

أخرج مروانُ المنبرَ في يومِ عيدٍ فبدأ بالخُطْبَةِ قبل الصَّلاةِ فقام رجلٌ فقال يا مروانُ خالفتَ السُّنةَ أخرجْتَ المنبرَ في يومِ عيدٍ ولم يكن يُخْرَجُ فيه وبدأتَ بالخطبةِ قبل الصلاةِ فقال أبو سعيدٍ الخدريُّ مَنْ هذا قالوا فلانُ بنُ فلانٍ فقال أما هذا فقد قضى ما عليه سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقولُ من رأى منكرًا فاستطاع أن يُغَيِّرَه بيدِهِ فلْيُغَيِّرْه بيدِهِ فإن لم يَسْتَطِعْ فبلسانِه فإنْ لمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وذلك أضعفُ الإيمانِ

மர்வான் என்ற ஆட்சியாளர் பெருநாள் அன்று தொழுகைக்கு முன்னால் குத்பா ஓத ஆரம்பித்தார். (பெருநாள் குத்பா என்பது தொழுகைக்குப் பிறகு ஓதுவது தான் நபியின் வழிமுறை. அதற்கு மாற்றமாக அவர் செய்தார்) உடனே ஒரு மனிதர் மர்வான் அவர்களே நீங்கள் நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்றார். சபையில் இருந்த அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள் யார் இவர் என்று கேட்டார்கள். அவர் யார் என்று அருகில் உள்ளவர் அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அபூஸஈதுல் குத்ரீ ரலி அவர்கள், அவரின் மீது இருந்த கடமையை அவர் பூர்த்தி செயது விட்டார். ஏனெனில் உங்களில் ஒருவர் ஒரு தவறைக் கண்டால் தன் கரத்தால் அதைத் தடுக்க வேண்டும். முடியாத போது தன் நாவால் தடுக்க வேண்டும்.முடியாத போது தன் உள்ளத்தால் அதை வெறுக்க வேண்டும். அது தான் மிகக்குறைந்த ஈமான் என்று நபி அவர்கள்  சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.  (அபூதாவூது ; 1140)

அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் நாம் நம் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக போராடுவதும் இஸ்லாமியப் பார்வையில் வரவேற்கத்தக்க ஒரு விஷயம் என்பதை குர்ஆனும் ஹதீஸும் நமக்கு தெளிவு படுத்துகிறது. அதைத்தான் இன்றைக்கு பரவலாக நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிற, நமக்கு பல்வேறு அநீதங்களை செய்து கொண்டிருக்கிற அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது ஒருபுறம் இருந்தாலும் இந்த போராட்டங்களைத் தாண்டியும் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அது தான் இந்த அநீதங்களை தடுப்பதற்கும் நாட்டிலே நமக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்குவதற்கும் நம்மைப் படைத்த இறைவனிடத்தில் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்பது துஆ செய்வது. .

எத்தனையோ அசாதாரணமான சூழ்நிலைகளில் அச்சுறுத்தலான சமயங்களில் அமைதியான சூழலை உருவாக்கி பல்வேறு வகையான வெற்றிகள் கிடைப்பதற்கு பிரார்த்தனைகள் தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை இஸ்லாமிய வரலாறுகள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

வரலாற்றிலே இரண்டு நிகழ்வு உண்டு. ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர்க்களம், இஸ்லாத்திற்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்ததோடு இஸ்லாமிய சமூகம் உணர்ந்து கொள்ளும் படியான பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுத்தந்த பத்ர் போர்க்களம். இன்னொன்று தாவூத் அலை அவர்கள் ஜாலூத் மன்னனை வீழ்த்திய வரலாறு.

ஹழ்ரத் மூஸா அலை அவர்களுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்களிடையே நீண்ட காலமாக எந்த நபியும் வரவில்லை. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்ற கொடிய மன்னன் பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப் படுத்தினான்,,அநியாயமாக அவர்களைக் கொன்று குவித்தான், அவர்களின் பொருட்களை சூரையாடினான். இதனால் அவர்கள் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உள்ளானார்கள்.இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்களுக்கு ஷம்வீல் என்ற ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். பனூ இஸ்ரவேலர்கள் அந்த நபியிடம் சென்று எங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்தித் தர வேண்டும், அந்த அரசனின் துணையோடு அந்த கொடிய மன்னனான ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும். அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கேட்டார்கள். அந்த நபியும் அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹுத்தஆலா தாலூத் அரசரை அவர்களுக்குக் கொடுத்தான். தாலூத் மன்னர் சுமார் 70,000 மக்களை ஒன்று திரட்டி போருக்காக ஆயத்தமானார். மக்களே! நீங்கள் ஜாலூத்தை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை ஏற்படும். அந்த நேரத்தில் என் சொற்படி நடந்தால் தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும் போது தண்ணீர் தாகமெடுத்து நாவெல்லாம் வரண்டு போகும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுவீர்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி அந்த ஆறு வந்தது. அந்த தண்ணீரை சொற்ப நபர்களைத் தவிர அனைவரும் வயிறு முட்ட குடித்தார்கள். அதனால் எழுந்திருத்து நடக்க முடியாமல் ஆகி விட்டார்கள்.

அந்த சொற்ப நபர்கள் மட்டுமே அந்த ஆற்றைக் கடந்து போனார்கள் ஆனால் அங்கே ஜாலூத் மன்னனையும் பிரமாண்டமான அவனது படையையும் பார்த்து இவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு ஆற்றல் கிடையாது என்று பயந்தார்கள். பனூ இஸ்ரவேலர் களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் மட்டுமல்ல, எனது ஆட்சியில் சரிபாதியைத் தருவேன் என்று தாலூத் சொன்னார். ஆனாலும் யாரும் முன் வரவில்லை. ஹள்ரத் தாவூத் அலை அவர்கள் மட்டும் ஜாலூத்தை சந்திப்பதற்கு முன் வந்தார்கள் சிறிய கல்லை கொண்டு அவனை வீழ்த்தினார்கள். அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என்பது வரலாறு.

இந்த பத்ர் நிகழ்வுக்கும் தாவூத் அலை ஜாலூத்தை வீழ்த்திய இந்த நிகழ்வுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

1، ஸஹாபாக்கள் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். பனூ இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

2، அவ்வாறு வெளியேற்றப்பட்டதைக் காரணமாக வைத்துத்தான் அங்கே போருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களும் அதைத்தான் சொன்னார்கள்.

 قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنا 

எங்கள் முன்னோர்கள் மற்றும் எங்கள் இல்லங்களிலிருந்து நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் நிலையில் நாங்கள் போர் புரியாமல் இருப்போமா என்று பனூ இஸ்ரவேலர்கள் கேட்டார்கள். (அல்குர்ஆன் : 2 ; 246)

3،  பத்ரில் இஸ்லாமியர்கள் சொற்பமாக இருந்தார்கள் எதிரிகள் மெஜாரிட்டியாக இருந்தார்கள். அதேபோன்று இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரின் படை சொற்பமாகும் ஜாலூத்தின் படை மெஜாரிட்டியாக இருந்தது.

4، இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 313 ஆக இருந்ததை போன்றே இந்த நிகழ்விலும் தாலூத் மன்னரோடு சென்ற அந்த படையின் எண்ணிக்கை 313 ஆகத்தான் இருந்தது.

5، பெரும் படையைப் பார்த்து அவர்களும் அஞ்சினார்கள்.இவர்களும் அஞ்சினார்கள்.

وان فريقا من المومنين لكارهون.

முஃமின்களில் ஒரு பிரிவினர் (பத்ர் போர்க்களத்திற்கு உம்முடன் வருவதற்கு இணக்கமில்லாம்) வெறுத்துக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன் : 8 ; 5)

قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده

ஜாலூத் மற்றும் அவன் படைகளுடன் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் : 2 ; 249)

6, இங்கேயும் அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு வெற்றியை கொடுத்தான் அங்கேயும் அல்லாஹுத்தஆலா இஸ்லாமியர்களுக்குத் தான் வெற்றியை தந்தான்.

7, எல்லாவற்றையும் விட இந்த இரண்டு நிகழ்விலும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது துஆ தான். பத்ர் போர்க்களம் நடப்பதற்கு முந்திய இரவில் நபி அவர்கள் உறுக்கமாக இறைவனிடத்தில் துஆ செய்தார்கள். அந்த துஆ தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதே போன்று இந்த நிகழ்விலும் தாலூத்தின் மக்கள் துஆ  செய்தார்கள். அதை அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்.

لما برزوا لجالوت وجنوده:[قالوا ربنا أفرغ علينا صبرًا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين]

ஜாலூத்தையும் அவன் படைகளையும் களத்தில் சந்திக்க அவர்கள் முன்னேறிச் சென்ற போது எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 2 ; 250)

பல நிற்கதியான கட்டங்களிலும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளிலும் அமைதியையும் வெற்றியையும் இஸ்லாமிய சமூகத்திற்கு பெற்றுத்தந்தது துஆக்கள் தான் என்பது வரலாறு கூறும் உண்மை.

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபைப் பற்றி நமக்குத் தெரியும். கொடுங்கோலன் என்று வரலாறு அவனைக் குறிப்பிடுகிறது.பல பேரை அநியாயமாக கொன்று குவித்தவன்.அவனால் கொல்லப் பட்டவர்களில் கடைசி நபர் ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்கள்.

فلما وصل سعيد إلى الحجاج وأدخلوه عليه نظر إليه في حقد وغيظ وقال : ما اسمك ؟ قال : اسمي سعيد بن جبير ، قال له : بل أنت شقي بن كسير ، فقال : بل كانت أمي أعلم باسمي منك ، فقال: ما تقول في محمد ؟ قال : من تعني بمحمد هل تريد الرسول صلى الله عليه وسلم ؟ قال : نعم ، قال : وهل يخفى عليك قولي فيه، وهو سيد ولد آدم، النبي المصطفى وليس مثلك يسأل مثلي لأننا جميعًا نؤمن برسالته، ولا يُسأل إلا شاك مرتاب

قال له : فما تقول في أبي بكر ؟ قال : هو الصديق خليفة رسول الله صلى الله عليه وسلم، ذهب حميدًا وعاش سعيدًا، وسأله عن عمر، وعن عثمان، وعن علي، وهو يجيب بما اتصف به كل واحد من هؤلاء الكرام البررة صفوة الخلق بعد الرسل الأئمة المهديين الذي رضي الله عنهم ورضوا عنه، ثم قال له : أي خلفاء بني أمية أعجب لك ؟ قال : أرضاهم لخالقهم

قال : فأيهم أرضى للخالق ؟

قال : علم ذلك عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى

قال : فما تقول فيَّ ؟

قال : أنت أعلم بنفسك

قال : أريد علمك أنت ؟

قال : إذن يسوؤك ولا يسرك

قال : لا بد أن أسمع منك

قال : إني لأعلم أنك مخالف لكتاب الله تعالى، تقدم على أمور تريد بها الهيبة وهي تقحمك في الهلكة، وتدفعك إلى النار، قال له : والله لأقتلنك، قال : إذن تفسد علي دنياي وأفسد عليك آخرتك... قال : اختر لنفسك أي قتلة شئت ؟

قال : بل اخترها أنت لنفسك يا حجاج، فوالله ما تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة

قال : أتريد أن أعفو عنك ؟

قال : إن كان عفو فمن الله تعالى، فدعا الحجاج بالسيف والنطع فتبسم سعيد فقال له الحجاج : وما تبسمك ؟ قال : عجبت من جراءتك على الله وحلم الله عليك

قال : اقتله يا غلام فاستقبل سعيد القبلة ثم قال : "وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ"[الأنعام: 8]

قال : احرفوا وجهه عن القبلة، قال سعيد : "فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ" [البقرة: 116]

فقال : كبوه على الأرض

فقال : "مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى" [طه: 55] 

فقال الحجاج : اذبحوا عدو الله فما رأيت أحدًا أدعى للآيات منه

فرفع سعيد المظلوم كفيه البريئتين إلى الرب القدير الذي يعلم خائنة الأعين وما تخفى الصدور ثم قال: «اللهم لا تسلط الحجاج على أحد بعدي»

ولم يمض على مصرع سعيد غير خمسة عشر يومًا حتى أصيب الحجاج بالحمى الشديدة، واشتدت عليه وطأة المرض حتى كان يغفو ساعة ويفيق ساعة، فإذا أفاق استيقظ مذعورًا مهزومًا وهو يصيح ويقول : ما لي ولسعيد بن جبير، ردوا عني سعيد بن جبير، وما بقي إلا أيامًا وهو في عذاب شديد حتى قصم الله ظهره، وأزال ذكره، وأحصى بطشه، وجعله عبرة للمعتبرين

ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்களுக்கும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபுக்கும் மத்தியில் நடந்த உரையாடல் ;

ஹஜ்ஜாஜ் ; உன் பெயர் என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  என் பெயர் ஸஈத். ஸஈத் என்றால் பாக்கியம் பெற்றவர் என்று பொருள்.

ஹஜ்ஜாஜ் ; இல்லை இல்லை, உன் பெயர் ஷகீ. ஷகீ என்றால் பாக்கியமில்லாதவர் என்று பொருள்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  உன்னை விட என் உம்மாவிற்கு என் பெயர் நன்றாகத் தெரியும்.

ஹஜ்ஜாஜ் ; முஹம்மதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  முஹம்மத் என்றால் அல்லாஹ்வின் தூதரைக் குறித்து கேட்கிறாயா ?

ஹஜ்ஜாஜ் ; ஆம்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  ஏன் அவர்களைப் பற்றி உனக்குத் தெரியாதா ? அவர்கள் மனிதகுலத் தலைவர். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபி. உன்னைப் போன்றவர் அல்ல.நாங்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருக்கிறோம். சந்தேகத்தில் உள்ளவன் தான் அவர்களைப் பற்றி இவ்வாறு கேட்பான்.

ஹஜ்ஜாஜ் ; அபூபக்கரைக் குறித்து உன் கருத்து என்ன ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்கள் சித்தீக், நபி அவர்களின் கலீஃபா. பாக்கியத்துடன் வாழ்ந்தார். புகழுடன் சென்றார்.

இப்படியே எல்லா கலீஃபாக்களைக் குறித்தும் கேட்ட போது அவர்களைப் பற்றி சொன்னார்கள்.

ஹஜ்ஜாஜ் ; பனூ உமய்யாவின் கலீஃபாக்களில் உனக்கு யாரைப் பிடிக்கும் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்.

ஹஜ்ஜாஜ் ; அவர்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர் யார் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அதைப் பற்றிய ஞானம் என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது.

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி என்ன சொல்கிறாய் ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அது உனக்கே நன்றாகத் தெரியுமே !

ஹஜ்ஜாஜ் ; என்னைப் பற்றி நீ என்ன அறிந்து வைத்திருக்கிறாய் ! சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நான் சொன்னால் அது உனக்கு வேதனையைத் தான் ஏற்படுத்தும். நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது.

ஹஜ்ஜாஜ் ; பரவா இல்லை சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  நீ அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனுக்கு மாறு செய்பவன். கர்வத்துடன் நடப்பவன். நீ புரியும் காரியங்கள் நிச்சயம் உன்னை அழிவில் கொண்டு போய் சேர்க்கும். நரகத்திற்கு இழுத்துச் செல்லும்.

ஹஜ்ஜாஜ் ; நிச்சயம் உன்னை நான் கொல்வேன்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அப்படி செய்தால் என் உலக வாழ்க்கை நீ அழித்து விடலாம். ஆனால் என்னைக் கொல்வதால் உன் மறுமை வாழ்க்கை அழிந்து போகும்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை எப்படிக் கொல்வது என்பதை நீயே முடிவு செய்து சொல்.

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  இல்லை உன் விருப்பம்.ஆனால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்னை எப்படி கொல்கிறாயோ அவ்வாறே உன்னை மறுமையில் அல்லாஹ் கொல்வான்.

ஹஜ்ஜாஜ் ; உன்னை மன்னிக்க வேண்டும் என்று விரும்புகிறாயா ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  மன்னிப்பு இருந்தால் அது என் இறைவன் புறத்திலிருந்து மட்டும் தான். உன் தயவு எனக்கு தேவையில்லை.

அவனைக் கொல்வதற்கு ஹஜ்ஜாஜ் முற்பட்ட போது அவர்கள் சிரித்தார்கள்.

ஹஜ்ஜாஜ் ; உனக்கென்ன சிரிப்பு ?

ஸஈத் பின் ஜுபைர் ரலி ;  அல்லாஹ்விடம் நீ இவ்வளவு துணிச்சலாக நடந்து கொண்டும், உன்னை தண்டிக்காமல் அவன் பொறுமையாக இருக்கிறானே அதை நினைத்து சிரிக்கிறான்.

அவர்களைக் கொல்வதற்கு உத்தவிட்ட போது அவர்கள் கிப்லாவை முன்னோக்கி வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற தஸ்பீஹை ஓதினார்கள். அவர் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்று சொன்னான்.அப்போது நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை முகம் குப்புரப் போடுங்கள் என்று சொன்னான்.அந்த மண்ணிலிருந்தே உங்களை நாம் படைத்தோம். அதன் பக்கமே உங்களை மீட்டுவோம். அதிலிருந்தே மறுமுறை உங்களை வெளியாக்குவோம் என்ற வசனத்தை ஓதினார்கள். அவரை கொல்லுங்கள். இவரைப் போன்று அல்லாஹ்வின் வசனங்களை வாதிட்ட வேறு எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினான்.அப்போது ஸஈத் ரலி அவர்கள் தன் கரங்களை உயர்த்தி எனக்குப் பிறகு வேறு யாரின் மீதும் இவனை சாட்டி விடாதே  ! அதாவது இவனால் கொல்லப்படுகிற கடைசி நபராக நான் தான் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்கப்பட்டது. அவர்கள் இறந்து 15 நாட்களில் ஹஜ்ஜாஜின் மரணம் ஏற்பட்டது.கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டு மயக்கமுற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையானான். மயக்கம் தெளிந்த பிறகு ஸஈத் ரலி அவர்கள் செய்த பிரார்த்தனைய்யை எண்ணிப் பார்த்து வருந்தினான். கடைசியில் மிகவும் வேதனைக்குள்ளாக்கப்பட்டு இறந்து போனான்.

 

وقد روي عنه لما مات : أنْ رآه بعض الناس في الحلم فقالوا ما فعل الله بك ؟ قال : قتلني الله بكل امرئ قتلة واحدة، وقتلني بسعيد بن جبير سبعين قتلة

அவன் இறந்த பிறகு அவனை கனவில் ஒருவர் கண்டார். உன் நிலை என்ன என்று விசாரித்தார்.அதற்கு அவன், நான் செய்த ஒவ்வொரு கொலைக்கும் பகரமாக அல்லாஹ் என்னை ஒரு முறை தான் கொல்கிறான்.ஆனால் ஸஈதின் கொலைக்குப் பகரமாக 70 முறை என்னை கொன்றான் என்று கூறினான் என சொல்லப்படுகிறது. (அல்பிதாயா வன் நிஹாயா, ஸியரு அஃலாமின் நுபுவ்வா)

கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் முடிவுக்கு காரணமாக இருந்தது ஸஈத் பின் ஜுபைர் ரலி அவர்களின் அந்த துஆ தான் என்பதை இந்த வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் ஜெருசலத்தை கைபற்றி சுமார் 90 வருடங்கள் ஜும்மாவிற்கு கூட அனுமதிக்காமல் முஸ்லிம்களை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். சுமார் 38.000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்,கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சிறு பிள்ளைகளின் கால்களை பிடித்து சுவரில் அடித்து கொன்றார்கள், அப்போது தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)  அவர்களின் தலைமையில்  சிலுவை யுத்தம் நடந்தது. சிலுவை யுத்தத்திற்கு முந்தைய இரவு இஷா  தொழுகையை  முடித்து விட்டு மறுநாள் ஃபஜர்  தொழுகை வரை சஜ்தாவிலிருந்து ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் துஆ செய்தார்கள்.அந்த துஆவிற்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா ? நடக்க விருக்கும் யுத்தத்தில்  ஐரோப்பியர்களுக்கு உதவி செய்ய வந்த மிகப்பெரும் நேவி கப்பல் ஆயுதங்களோடு மூழ்கடிக்கப்பட்டது.  ஜெருசலமும்  வெற்றி கொள்ளப்பட்டது.

இப்படி நபி அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை துஆவின் ஏற்பட்ட பலன்கள் நிறைய உண்டு.

من فتحَ له منكم باب الدعاءِ ، فتحتُ لهُ أبوابِ الرحمةِ ، وما سُئِل اللهُ شيئا  يعني : أحبّ إليهِ - من أن يُسأَلَ العافيةَ وقال رسولُ اللهِ صلى الله عليه وسلم إن الدعاءَ ينفعُ ممّا نزَلَ ومما لم يَنْزِلْ فعليكم عبادَ اللهِ بالدعاء

நிச்சயமாக துஆ ஏற்கனவே இறங்கி விட்ட சோதனைகளுக்கும் இனி இறங்க இருக்கிற சோதனைகளுக்கும் பலன் தரும். எனவே அல்லாஹ்வின் அடியார்களே துஆவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (திர்மிதி ; 3548)

இப்போது நிலவிக் கொண்டிருக்கிற இந்த அச்சுறுத்தலான சூழ்நிலைக்கு இந்த ஹதீஸ் மிகச்சரியாகப் பொருந்தும்.ஏற்கனவே CAA, NRC என்ற முஸீபத் வந்து விட்டது.இனி அடுத்து NPR என்ற முஸீபத் வர இருக்கிறது.இந்த எல்லா முஸீபத்துகளிலிருந்தும் நம்மைக் காக்கும் மிகச்சிறந்த ஆயுதம் துஆ மட்டும். அந்த துஆவில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.


No comments:

Post a Comment