Friday, October 30, 2020

நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள்


 

வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனை களுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் எந்த கேள்விக்கும் பதிலாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் அவர்கள் தான்.

Friday, October 23, 2020

நபியே! நீங்கள் எந்தக் குறைகளும் இல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்


 

நபிகள் நாயகம் அவர்கள் அகிலத்திற்கு வந்த வசந்தமான இந்த ரபீவுல் அவ்வல்  மாதத்தில் மாநபியின் தூய்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

Friday, October 16, 2020

நபியின் வரவால் உலகம் பெற்ற நன்மை

 


அல்லாஹ்வின் பேரருளால் அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதம் பிறக்க இருக்கிறது. இஸ்லாமிய மாதங்களில் பரக்கத் பொருந்திய மாதம், அருள் நிறைந்த மாதம், எண்ணற்ற பாக்கியங்களை உள்ளடக்கிய மாதம் இந்த ரபியுல் அவ்வல் மாதம். இஸ்லாத்தின் 12 மாதங்களில் ரபீவுல் அவ்வல் மாதம் பரக்கத்தானது பாக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு நபி அவர்கள் இந்த மாதத்தில் பிறந்தார்கள் என்ற ஒரு காரணமே போதுமானது.

Friday, October 9, 2020

இழந்ததை மீட்க

 


கடந்த சில வாரங்களாகவே உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கக்கூடிய கொரோனாவைக்  குறித்தும் சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்தும் நோய்கள் குறித்தும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்கிற ஆரோக்கியத்தின் வழிகாட்டுதல் குறித்தும் நாம் பார்த்து வருகிறோம் பேசி வருகிறோம்.

Tuesday, October 6, 2020

இஸ்லாம் கூறும் கவலைக்கான மருந்து


 

நாம் வாழுகிற வாழ்க்கை வெற்றி தோல்வி, லாப நஷ்டம், இன்பம் துன்பம் என அத்தனை அம்சங்களும் கலந்த வாழ்க்கை.மனித வாழ்வில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும். எந்த மகிழ்ச்சியையும் பார்க்காமல் கவலைகளில் மட்டுமே மூழ்கிப்போனவனும் கிடையாது. எந்த கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியில் மட்டுமே திளைப்பவனும் கிடையாது.இரண்டும் கலந்த கலவை தான் மனித வாழ்க்கை.இதில் மகிழ்ச்சி வருகிற போது மனிதன் துள்ளிக் குதிக்கிறான்,கவலைகள் அவனை சூழ்ந்து கொள்கிற போது துவண்டு விடுகிறான்.இரண்டும் தவறானது. மகிழ்ச்சியில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் கவலையில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.