பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது நிச்சயமானது. உறுதியானது. பிறப்பவர் என்றாவது ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும். உலகிலுள்ள அனைத்துத் தரப்பினரும் கருத்து வேற்றுமைக்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக்கொண்டிருக்கிற, நம்பியிருக்கிற ஒரு விஷயம் மரணம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் பல நூறு மரணங்களை நாம் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.