Showing posts with label தவ்பா. Show all posts
Showing posts with label தவ்பா. Show all posts

Wednesday, March 19, 2025

தராவீஹ் 19 - அனைத்தையும் பெற்றுத்தர வல்லது

 



قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.

(அல்குர்ஆன் : 38:35)

Monday, March 18, 2024

நைனுவா மக்கள்

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ  لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏

எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த  ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம். (அல்குர்ஆன் : 10:98)

Monday, March 7, 2022

தவ்பா

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Thursday, September 23, 2021

ஹதீஸ் எண் ; 24 يضحك الله الي رجلين

 

عن ابي هريرة رض ان رسول الله قال يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد

இரண்டு நபர்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்று விடுகிறார். இருவரும் சொர்க்கத்தில் நுழைகின்றனர்.அந்த இருவரைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதாக்கப்படுகிறார்.அவரைக் கொன்றவரோ அல்லாஹ்விடம் தவ்பா செய்து இஸ்லாத்தை ஏற்று மற்றொரு போரில் ஷஹீதாக்கப்படுகிறார். (புகாரி ; 2826)

ஹதீஸ் எண் ; 22 ان امراة من جهينة اتت

 

وَعَنْ أبي نُجَيْد-بِضَم النُّونِ عِمْرانَ بْنِ الحُصيْنِ الخُزاعيِّ رَضِي اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرأَةً مِنْ جُهينةَ أَتَت رَسُولَ الله وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا، فقَالَتْ: يَا رسول الله أَصَبْتُ حَدًّا فأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ الله وَليَّهَا فَقَالَ: أَحْسِنْ إِليْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي فَفَعَلَ، فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ ، فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُها، ثُمَّ أَمَرَ بِهَا فرُجِمتْ، ثُمَّ صلَّى عَلَيْهَا. فَقَالَ لَهُ عُمَرُ: تُصَلِّي عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ زَنَتْ، قَالَ: لَقَدْ تَابَتْ تَوْبةً لَوْ قُسِمَتْ بَيْن سبْعِينَ مِنْ أَهْلِ المدِينَةِ لوسعتهُمْ، وَهَلْ وَجَدْتَ أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنفْسهَا للَّهِ ؟

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி அவர்களிடம் வந்தார். அப்பெண் விபச்சாரம் மூலம் கர்ப்பிணியாக இருந்தார். இறைத்தூதர் அவர்களே தண்டனைக்குரிய செயலை நான் செய்து விட்டேன். அந்த தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள் என்று கூறினாள். நபி அவர்கள் அவளின் பொறுப்பாளரை அழைத்து இவளை நல்ல விதமாக வைத்துக்கொள். குழந்தை பெற்று விட்டால் என்னிடம் அழைத்து வா என்று கூறினார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவள் வந்ததும் அவள் விஷயமாக தண்டனை தர நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அவள் மீது அவளின் ஆடைகள் சுற்றப்பட்டது. பின்பு அவளை கல்லால் எறிந்து கொல்ல கட்டளையிட்டார்கள். பிறகு அவளுக்கு ஜனாஸா தொழ வைத்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் இறைத்தூதர் அவர்களே விபச்சாரம் செய்து விட்ட இவளுக்கா தொழ வைக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது மக்களில் 70 நபர்களுக்கு பங்கிட்டு அவர்களுக்குச் சமமாக தரும் அளவுக்குறிய தவ்பாவை அவள் செய்து விட்டாள். அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்து விடுவதை விட சிறந்த ஒன்றை நீர் காணப் போகிறீரா என்று நபியவர்கள் கேட்டார்கள். (முஸ்லிம் ; 1696)

Sunday, September 19, 2021

20 வது ஹதீஸின் தொடர் ;-

 


1، அல்லாஹ்வின் ரஹ்மத்தும் அடியார்கள் மீது அவன் கொண்டிருக்கிற விசாலமான அன்பும் இந்த ஹதீஸின் மூலம் உணர்த்தப்படுகிறது.

ஹதீஸ் எண் ; 20 رجل قتل تسعة وتسعين

 

عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري  عن نبي الله قال: كان فيمن كان قبلكم رجل قتل تسعة وتسعين نفسًا، فسأل عن أعلم أهل الأرض فدُل على راهب فأتاه فقال: إنه قتل تسعة وتسعين نفسًا، فهل له من توبة؟ فقال: لا، فقتله فكمل به مائة، ثم سأل عن أعلم أهل الأرض، فدُل على رجل عالم، فقال: إنه قتل مائة نفس، فهل له من توبة؟ فقال: نعم، ومن يحول بينه وبين التوبة؟ انطلق إلى أرض كذا وكذا، فإن بها أناسًا يعبدون الله تعالى فاعبد الله معهم، ولا ترجع إلى أرضك، فإنها أرض سوء، فانطلق حتى إذا نصف الطريق أتاه الموت، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فقالت ملائكة الرحمة: جاء تائبًا مقبلاً بقلبه إلى الله تعالى، وقالت ملائكة العذاب: إنه لم يعمل خيرًا قط، فأتاهم ملك في صورة آدمي، فجعلوه بينهم -أي حكمًا- فقال: قيسوا ما بين الأرضيْن، فإلى أيتهما كان أدنى فهو له، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد، فقبضته ملائكة الرحمة

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் இருந்தார். அவர் 99 கொலை செய்திருந்தார். (தவறை உணர்ந்த அவர்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தார். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவரிடம் கூறப்பட்டது. அவர் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டார். “இல்லை!என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்று நூறைப் பூர்த்தியாக்கி விட்டார்.

Thursday, September 16, 2021

ஹதீஸ் எண் ; 17- من تاب قبل ان تطلع الشمس

 

عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللهُ عَلَيْهِ

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுவதற்கு முன்பு யார் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கிறான். (முஸ்லிம் ; 2703)

Wednesday, September 15, 2021

ஹதீஸ் எண் ; 16 ان الله يبسط يده

 

عن أبي موسى عبد الله بن قيس الأشعري ، عن النبي قال: إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم

நிச்சயமாக அல்லாஹ் பகலில் குற்றம் இழைத்தவர் தவ்பா செய்வதற்காக இரவில் தன் கரத்தை விரிக்கிறான். இரவில் குற்றம் இழைத்தவர் தவ்பா தேடுவதற்காக பகலில் தன் கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் வரை. (முஸ்லிம் ; 2759

ஹதீஸ் எண் ; 14- فاني اتوب في اليوم اليه مائة مرة

وعن الاغر بن اليسار المزني رض قال: قال رسولُ الله -صلى الله عليه وآله وسلم-: يا أيّها الناس، توبوا إلى الله، فإني أتوب في اليوم إليه مئة مرة   رواه مسلم

மக்களே நீங்கள் இறைவனிடம் தவ்பாவைத் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளில் அவனிடம் நூறு முறை தவ்பா தேடுகிறேன். (முஸ்லிம் ; 2702)

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 6 ; தவ்பா



தாமதிக்காமல் விரைவாக செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்திய அடுத்த விஷயம் தவ்பா. நாம் தவறு செய்து விட்டால் அதற்கான தவ்பாவை அல்லாஹ்விடம் உடனடியாக தேடிக் கொள்ள வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்,கடைசி காலத்தில் செய்து கொள்ளலாம் என்று அதை தள்ளிப் போடுவது ஆரோக்கியமானதல்ல என்று இஸ்லாம் கூறுகிறது.